Jump to content

தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் பங்கு பெற்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

வலைப்பந்தாட்டத் தொடர் ஒன்றில் 348 கோல்களை போட்டு, தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

375 முயற்சிகளில், 348 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டுள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் 304 கோல்களை வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.

யார் இந்த தர்ஜினி சிவலிங்கம்?

யாழ்ப்பாணம் - ஈவினை - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சிவலிங்கம் தம்பதியினருக்கு தர்ஜினி 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வயாவிலான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தர்ஜினி சிவலிங்கம், அப்போது நாட்டில் நிலவி அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, குறித்த பாடசாலை 13 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தர்ஜினி சிவலிங்கம்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

இதனால் தர்ஜினி சிவலிங்கத்தின் கல்வி பொதுதராதர சாதாரண தரத்திற்கு பின்னர் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது.

எனினும், சில காலங்களின் பின்னர் அவர் தனது உயர்தர கல்வியை தொடர்ந்து, தேர்வில் சித்தி பெற்றதன் ஊடாக கிழக்கு பல்கலைக்கழக பிரவேசத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தர்ஜினி சிவலிங்கம் பொருளாதார பட்டப்படிப்பை நிறைவு செய்தமை விசேட அம்சமாகும்.

வலைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தமது விளையாட்டை பாடசாலை நாட்களிலேயே ஆரம்பிப்பது அனைவரும் அறிந்த நிலையில், தர்ஜினி சிவலிங்கம் தனது 23ஆவது வயதிலேயே வலைப்பந்தாட்ட விளையாட்டுக்கான பிரவேசத்தை பெற்றுள்ளார்.

தர்ஜினி சிவலிங்கத்தின் உயரம் 6 அடி 10 அங்குலம். அது வலைப்பந்தாட்ட போட்டிகளில் அவரை மேலோங்கி செல்ல உதவியது.

தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்ட அணிக்குள் பிரவேசித்த விதம்

2004ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தர்ஜினி சிவலிங்கம் விளையாடியுள்ளார்.

அன்றைய தினம் தர்ஜினியின் திறமைகளை நேரில் கண்ட அனைவரும், அவரின் திறமையை கண்டு வியப்படைந்துள்ளனர்.

அன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச, தர்ஜினி சிவலிங்கத்தை தேசிய அணியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய அணிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி சரியாக பிரகாசிக்காத போதிலும், தர்ஜினி சிவலிங்கம் மாத்திரம் தொடரில் 290 கோல்களை போட்டு உலக வலைப்பந்தாட்ட ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக தர்ஜினி சிவலிங்கம், 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னரான காலப் பகுதியில் தான் பணியாற்றிய வங்கி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி சிவலிங்கம், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியா லீக் போட்டிகளில் தொழில்சார் வலைப்பந்தாட்ட வீராங்கனையாக இணைந்துக் கொண்டுள்ளார்.

இலங்கை தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட ஆரம்பித்தார்.

தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முதலாவது இலங்கையர் என்ற பெருமை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இந்த போட்டிகளின் ஊடாக கிடைத்தது.

தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், ஆஸ்திரேலியாவில் மிக சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

இதன்பின்னர் தர்ஜினி சிவலிங்கம் இலங்கை தேசிய அணிக்குள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை பெற தர்ஜினி சிவலிங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49071787

Link to comment
Share on other sites

10 minutes ago, ஏராளன் said:

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார்.

பாராட்டுக்கள். மேலும் சாதனைகள் படைப்பீராக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள். இனம்காணப்படாமல் இருந்த இவரின் திறைமையை மட்டக்களப்பை சேர்ந்த ஒரு முன்னாள் பெண் வீராங்கனையே முதன்முதலில் வெளிகொணர்ந்தவர். 

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

பாராட்டுகள். இனம்காணப்படாமல் இருந்த இவரின் திறைமையை மட்டக்களப்பை சேர்ந்த ஒரு முன்னாள் பெண் வீராங்கனையே முதன்முதலில் வெளிகொணர்ந்தவர். 

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு

அறிவாளி
பிரோ /

இந்த‌ விளையாட்டில் , இல‌ங்கை  அணி பெண்க‌ள் ஒரு விளையாட்டில் ம‌ட்டும் தான் வென்ற‌வை , அவுஸ்ரேலியா போன்ர‌ நாடுக‌ளுட‌ன் விளையாடி ப‌டு தோல்வி அடைஞ்ச‌வை /

இந்த‌ விளையாட்டில் இவ‌ர்க‌ள் வ‌ள‌ர‌ நீண்ட‌ வ‌ருட‌ம் எடுக்கும் /

இங்லாந்
நியுசிலாந்
அவுஸ்ரேலியா
தென் ஆபிரிக்கா
ஜ‌மேக்கா / இந்த‌ நாட்டு பெண்க‌ள் இந்த‌ விளையாட்டில் மிக‌வும் திற‌மையான‌வை 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் தர்ஜினி சிவலிங்கம்.......!  👍

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் தர்யினி சிவலிங்கம்!! 🙌

பையா, ஒரு விளையாட்டில் வென்றாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் அதற்கும் மேல் உள்ள சாதனை....! அதனைப் போற்றி வாழ்த்துவதில் தவறில்லை.!!

16 hours ago, ஏராளன் said:

ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் 304 கோல்களை வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

வாழ்த்துக்கள் தர்யினி சிவலிங்கம்!! 🙌

பையா, ஒரு விளையாட்டில் வென்றாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் அதற்கும் மேல் உள்ள சாதனை....! அதனைப் போற்றி வாழ்த்துவதில் தவறில்லை.!!

 

அவான்ட‌ திற‌மை பாராட்ட‌ த‌க்க‌து ப‌ஞ் அண்ணா , ஆனா இந்த‌ உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை பெண்க‌ள் நிறைய‌ விளையாட்டில் ப‌டு தோல்வி அடைஞ்ச‌வை , அதை தான் மேல் எழுதி நான் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nilmini said:

image.png

இமேஜ் டமேஜ்சாய் இருக்கு பார்த்து மனேஜ் பண்ணுங்கள் மின்மினி....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 12:07 PM, suvy said:

இமேஜ் டமேஜ்சாய் இருக்கு பார்த்து மனேஜ் பண்ணுங்கள் மின்மினி....!  😁

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nilmini said:

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

https://postimages.org/

வாழ்த்துக்கள் தர்ஜினி சிவலிங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

unnamed.png

Link to comment
Share on other sites

6.10 அடி உயரம்... பந்தைத் தொட்டால் பாயின்ட்டுதான்.. நெட்பாலில் சாதித்த ஈழத் தமிழ்ப்பெண்!

Tharshini Sivalingam

கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்த அதே நேரம், பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் அதிக கோல்கள் அடித்து தமிழ் ஈழப்பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை படைத்தார். இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் விளையாட்டில் சாதிக்கத் தொடங்கிய தர்ஜினியின் பயணம் சாதனைகளால் நிரம்பியது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஜினி, 6.10 அடி உயரம். அசாதாரண தோற்றத்தைக் கொண்ட தர்ஜினிக்கு சிறுவயது முதலே கிண்டலும், கேலியும்தான் கேட்காத பரிசாக வந்து சேர்ந்தன. பள்ளிக்கூடங்களிலும், கல்லூரியிலும் வசைச்சொற்களை மட்டுமே கேட்டு வந்த அவர், வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில்தான் விளையாட்டை தேர்ந்தெடுத்தார். நெட்பால் விளையாடத் தொடங்கிய தர்ஜினிக்கு, அவரது உயரம் கைகொடுத்தது.

இலங்கையில் நிலவிய அமைதியற்ற சூழலால், இடம் பெயர்ந்துகொண்டே இருந்தது அவரது குடும்பம். கல்லூரிப் படிப்பை சரியாகத் தொடர முடியாத நிலையிலும், தர்ஜினி கண்ட கனவு, தமிழ் பேராசியராக பணிபுரிய வேண்டும் என்பதே. போராட்டங்களுக்கு மத்தியில் படிப்பைத் தொடர்ந்த தர்ஜினிக்கு, இலங்கை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் நெட்பால் பற்றிய அறிமுகம் கிடைத்தது. உயரமான தோற்றம் விளையாட்டில் சாதிக்க உதவும் எனப் பயிற்சியாளர் திலகா ஜினதாசா ஊக்கமளிக்க, நெட்பால் விளையாடத் தொடங்கினார் தர்ஜினி.

Tharshini Sivalingam

முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி, பின் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார். நெட்பால் பற்றிய அனுபமில்லாத அவருக்கு, இந்த உயரம்தான் மிகப்பெரிய ப்ளஸ். இந்த உயர்த்தைக் காரணம்காட்டி வசைச்சொற்களை மட்டுமே பரிசாகப் பெற்று வந்த தர்ஜினி, ``எனக்கு ஏன் இப்படி?" என்று கேட்பதை விட்டுவிட்டு ``எனக்கு மட்டும்தான் இப்படி" என மாற்றி யோசித்தார். முறையான பயிற்சி மேற்கொண்ட அவர், நெட்பால் விளையாட்டில் முழு ஈடுபாடு செலுத்தினார்.

 

2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பையில் இலங்கை அணி சோபிக்கவில்லை. ஆனால், அந்தத் தொடரில் மொத்தம் 290 கோல்கள் அடித்த தர்ஜினி, சர்வதேச நெட்பால் நட்சத்திரமாக கவனம் ஈர்த்தார். `தர்ஜினி தொட்டால்.. கோல் நிச்சயம்' என சொல்லும் அளவுக்கு இலங்கை அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தார்.

ஆனால், இலங்கை நெட்பால் அமைப்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக 2015 முதல் 2017 வரை தேசிய அணியில் விளையாட தர்ஜினி தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், தனது வழக்கமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 2018 நெட்பால் ஆசிய கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இந்த ஆண்டு, இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பையில் அசத்திய தர்ஜினி, இத்ந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையானார்.

 

375 வாய்ப்புகளில் 348 முறை கோலாக்கினார் தர்ஜினி. அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 77 கோல்கள் அடித்து, ஒரே போட்டியில் அதிக கோல் அடித்த வீராங்கனையாகவும் உலக சாதனை படைத்தார்.

இந்த உலகக்கோப்பையில் இலங்கை அணி 15-வது இடத்தையே பிடித்தது. எனினும், ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் திக்குமுக்காட வைத்துவிட்டார் தர்ஜினி!

நாற்பது வயதாகும் இந்த நெட்பால் நட்சத்திரம், உலகக்கோப்பை தொடரோடு தனது விளையாட்டுப் பயணத்துக்கு ஓய்வு அறிவித்துவிட்டார். இளம் வீராங்கனைகளுக்கு ரோல் மாடலாக இருக்கும் தர்ஜினி நெட்பால் விளையாட்டிலிருந்து விடைபெற்றிருக்கலாம், ஆனால், இலங்கை நெட்பால் மகளிர் அணிக்கு இதுவே தொடக்கம்!

https://www.vikatan.com/sports/sports-news/the-40-year-old-tallest-netballer-tharjini-sivalingam-an-inspiration

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.