Jump to content

சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு! கொதித்தெழுந்த உறவுகள்


Recommended Posts

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா அரசாங்கத்தை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்தும் காப்பாற்றி வருவதற்கு எவ்வாறு நியாயம் கற்பிக்கப் போகின்றது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் எந்த முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பதால், அதனையும் தமிழினப் படுகொலையாக்கு துணைபோகும் செயற்படாகவே கருத வேண்டியுள்ளதாகவும் தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி அவர்களது உறவினர்கள் கடந்த பத்து வருடங்களாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களையும் உளவுகள் நடத்தி வருகின்றனர்.

எனினும் இதுவரை அவர்களுக்கு சிறிலங்கா அரசாங்கமோ, சர்வதேச சமூகமோ தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை.

இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர்களிலும் சிறிலங்காவிற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஜெனீவா அமர்வு உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் பிரதமர் ரணில் தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னின்று காப்பாற்றி வருகின்றது.

இந்த நிலையில் வவுனியா - பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் 884 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் தொடர்பிலான தமது விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மை நிலவரங்களை வெளியிட ஸ்ரீலங்கா அரசாங்கம் மறுக்கும் நிலையில், இனங்காணப்பட்டு வருடக்கணக்கில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தாயொருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து இறந்திருக்கலாம் என கவலையுடன் கூறிய தாய், இராணுவத்திடம் தன்னை போல பல தாய்மார்கள் பிள்ளைகளை கையளித்து விட்டு கண்ணீர் சிந்துவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசு தமக்கு ஒருபோதும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகள், அதனால் சர்வதேச சமூகமே நேரடியாக தலையிட்டு தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

https://www.ibctamil.com/srilanka/80/124588

Link to comment
Share on other sites

அண்மைக்கால ஆர்ப்பாட்டங்களில் உறவுகளின் கைகளில் அமெரிக்க கொடியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியையும் காண முடிகின்றது. 

இதன் மூலம் இந்த மக்களின் நம்பிக்கை, கூட்டமைப்போ இல்லை எந்த தமிழ் அமைப்போ இல்லை என தெரிகின்றது. 

ஆம், எம்மால் கூட இவர்களுக்காக எதையும் செய்யமுடியவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.