Jump to content

முத்தையா முரளிதரனாக நடிக்கும் விஜய் சேதுபதி?


Recommended Posts

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும்  திரைப்படமாக உருவாகி வருகிறது.  ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்.

இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

à®®à¯à®¤à¯à®¤à¯à®¯à®¾ à®®à¯à®°à®³à®¿à®¤à®°à®©à®¾à® நà®à®¿à®à¯à®à¯à®®à¯ விà®à®¯à¯ à®à¯à®¤à¯à®ªà®¤à®¿?

 

133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வார்னே உள்ளார்.

800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘800’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://tamil.news18.com/news/entertainment/cinema-vijay-sethupathi-to-play-muttiah-muralitharan-biopic-msb-183987.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் நடிப்பு வித்த்தியாசமான அமையான நடிப்பு.
படம் வந்தால்... ஒருமுறை பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

MuttiahVijaySethu-1.jpg

முத்தையா முரளிதரனாக விஜே சேதுபதி | முரளிதரன் வாழ்வு திரைப்படமாகிறது!

 

சிறீலங்காவின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரமாகிய சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ்த் திரையின் சமகால நட்சத்திர நாயகனாகிய விஜே சேதுபதி இதில் முரளிதரனின் பாத்திரத்தை எடுக்கிறார்.

‘800’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப் படம் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் சிறீலங்காவின் இணையற்ற சுழல் பந்து வீச்சாளரும் தனது 18 வருட விளையாட்டுக் காலத்தின்போது  பங்குபற்றிய டெஸ்ட் மாட்சுகளில் 800 விக்கட்டுகளை வீழ்த்திச் சாதனை புரிந்தவருமான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்காலக் கதையைப் பின்னணியாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சிறிலங்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மிகப் பிரமாண்டமான பணச் செலவில் தயாரிக்கப்படவுள்ள இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் டிசம்பர் 2019 இல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

‘சூது கவ்வும்’, ‘விக்ரம் வேதா’ போன்ற வெற்றிப்படங்களின் நாயகனான விஜே சேதுபதி இப்படத்தில் முரளிதரன் பாத்திரத்தை எடுக்க இணங்கியிருக்கிறார். ‘பயோபிக்’ எனப்படும் நிஜமான வாழ்க்கைக் கதைகளைத் திரைப்படமாக்கும் ஒரு புதிய பாங்கு தற்போது திரைப்படத்துறையை ஆட்கொண்டு வருகிறது. ‘800’ திரைபடத்தைப் போலவே இந்திய பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான கபில் தேவ் அவர்களின் கதையும் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. பிரபல பாலிவூட் நடிகரான ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவியான தீபிகா படுகோனி யும் இப் படத்தில் நடிக்கிறார்கள்.

http://marumoli.com/முத்தையா-முரளிதரனாக-விஜே/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் துரோகி முத்தையா முரளிதரன் கேரக்டர்ல நடிக்காதீங்க... விஜய் சேதுபதிக்கு விசிக வேண்டுகோள்..!

durai-murugan-is-the-second-phase-leader

முத்தையா முரளிதரன் ஒரு தமிழின துரோகி. அவர் பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது.  நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர்.  பண்பாடு மிக்க, மனித நேயமிக்க
 மனிதர்.

நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும்  சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர். அப்படிப்பட்டவர் முத்தையா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது.

முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர். தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர். சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது" என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.

சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது  சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர்.
இதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர். அது மட்டுமல்லாது, தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் 'தங்கல்லை" என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறார்.

லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு,   “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று முத்தையா முரளிதரன் பாராட்டினார்.

இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள். ஒரு தமிழினத்துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு  நல்லவனாக- நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று
பிழையாகத்தான் முடியும்’’ என அவர் தெரிவித்தார்.

https://tamil.asianetnews.com/politics/vijay-sethupathi-s-special-request-for-vck-pv92yz

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.