Jump to content

பிணையில் வருகிறார் நளினி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nalini--720x450.jpg

பிணையில் வருகிறார் நளினி?

முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 6 மாதகாலம் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளில் நளினிக்கு ஒருமாத காலம் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நளினியை பிணையில் அனுப்பும் விதிகளை சிறைத்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நளினி இன்று பிணையில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிணையில்-வருகிறார்-நளினி/

Link to comment
Share on other sites

மகளுக்கான மணமகனை தெரிவு செய்யப் போகிறார் நளினி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, அவருடைய மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு மாதம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான 'பரோல்' வழங்கப்பட்டிருக்கிறது. நளினி தரப்பில் 6 மாதம் 'பரோல்' கேட்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, பரோல் திகதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் பிணை உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்டுள்ளதையடுத்து, நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழிப் பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒப்படைத்தார். இதுதவிர நாலைந்து மணமகன்களின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மணமகனைத் தெரிவு செய்வார் என்று புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த வாரம் நளினி எப்போது வேண்டுமானாலும் பரோலில் வெளியே வருவார் என்ற நிலையில், அவருடைய அம்மா பத்மா விகடனிடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

http://www.thinakaran.lk/2019/07/23/கட்டுரைகள்/37525/மகளுக்கான-மணமகனை-தெரிவு-செய்யப்-போகிறார்-நளினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

naline-1.jpg

நிபந்தனைகளுடன் வெளியில் வருகிறார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி பிணையில் வெளிவருகிறார்.

அவர் இன்று (வியாழக்கிழமை) வெளிவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அவர் காலை 8.30 மணியளவில் வெளியில் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு வெளியில் வரும் நளினி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்றும் ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நளினியின் பிணையை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்குமாறு அரசிடம் கோரவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மகளின் திருமணத்திற்காக ஒருமாதம் பிணைக்கோரி நளினி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி அவர் பிணையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இன்று வெளியில் வரவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிபந்தனைகளுடன்-வெளியில்/

Link to comment
Share on other sites

தனது மகள் திருமணத்தை நடத்த பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார்.

WhatsApp-Image-2019-07-25-at-5.05.58-PM.jpeg

https://www.thaarakam.com/news/81183?fbclid=IwAR1TzC6qsg9I0QDZOTi9CleJhxVtmpynL_wHAy88JOn32OLdmaVbFiPpnp4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.