Jump to content

இலங்­கையின் புதிய வரை­படம் ; முக்கிய மாற்றங்கள் என்ன ?


Recommended Posts

சீனாவின் முத­லீட்டில் உரு­வாக்­கப்­படும், துறை­முக நகர நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய இலங்­கையின் புதிய புவி­யியல் வரை­படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

கடை­சி­யாக இலங்­கையின் வரை­படம், 1995ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த நிலையில் புதிய வரை­படம் அண்­மையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக, அள­வை­யாளர் நாயகம் பி.சங்­க­கார தெரி­வித்­துள்ளார்.

இந்தப் புதிய வரை­ப­டத்தில், கொழும்பு துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முகம், நெடுஞ்­சா­லைகள், மொற­க­ஹ­கந்த நீர்த்­தேக்கம் உள்­ளிட்­டவை புதி­தாக சேர்த்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்த வரை­பட தயா­ரிப்பு பணி  மார்ச் மாதம் நிறைவு செய்­யப்­பட்­டது. தற்­போது அதனை பொது­மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய வரை­ப­டத்தில், துறை­முக நகரம் உள்­ளிட்ட 25 ஆண்­டு­களில் இடம்­பெற்ற அனைத்து  மாற்­றங்­களும் உங்­வாங்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டில் இருந்து வரைபடத்தை புதுப்பிக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள் ளப்படும்.

https://www.virakesari.lk/article/60993

new-sri-lanka-map.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் எல்லாம் சேர்த்துவிடுங்கோ.. கேட்டால் அவை கொடுக்க மாட்டேன் என்டு சொல்ல போகினமா..? 👍

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் எல்லாம் சேர்த்துவிடுங்கோ.. கேட்டால் அவை கொடுக்க மாட்டேன் என்டு சொல்ல போகினமா..? 👍

அதானே! இந்தியா தாராளமாகக் கொடுத்துவிடும். பாக்கித்தானுக்கு தன்னில் கொஞ்சம் கொடுத்துவிட்டு, குத்துது குடையிது என்று, இன்று ஓடித்திரிவதுபோல் ஓடித்திரியும்.!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தனுஷ்கோடி, ராமேஸ்வரம் எல்லாம் சேர்த்துவிடுங்கோ.. கேட்டால் அவை கொடுக்க மாட்டேன் என்டு சொல்ல போகினமா..? 👍

உங்களுக்குத்தான் எவ்வளவு தாராள மனசு தோழர்.....குத்துறதுக்குத்தான் பச்சை இல்லை .....!  😂

Link to comment
Share on other sites

இன்னொரு கடல் நகரை உருவாக்க திட்டம் - சம்பிக்க

துறைமுக நகர திட்டத்தில் புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதலீடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்துவதுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிதி நகரத்திற்கு 15-20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடுகளை கொண்டுவருவதும் அதன் மூலமாக இலங்கையில் தனி நபர் வருமானத்தை 1000 டொலர்களினால் அதிகரிக்க செய்வதுமே எமது அரசாங்கதின் நோக்கமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

அத்துடன்  இலங்கை அரசாங்கத்திற்கு உள்ள நிலத்தில் சர்வதேச பாடசாலை, சர்வதேச தரம் வாய்ந்த வைத்தியசாலை ஆகியவற்றை முதலில் உருவாக்க நாம் தீர்மானம் எடுத்துள்ளோம். இன்று கார் பந்தைய நிலங்களை பூங்காவாக மாற்றி ஏனைய இடங்களில் வர்த்தக மையமாக மாற்றவும் பொதுமக்கள் பயன்பாட்டு மையங்கள் மற்றும் தொடர்மாடி வீடுகளை அமைக்வுள்ளோம். 

இதில் பொதுப்போக்குவரத்து எவ்வாறு என்ற கேள்வி இருந்தது. அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிவேக பாதைகளுடன் தொடர்புபடுத்திய போக்குவரத்து மற்றும் புகையிரத சேவைகள் என்பவற்றை நாம் உருவாக்கவுள்ளோம். இந்த பகுதியை நிதி நகரமாக மாற்றுவதே எமது இலக்காகும். இந்து சமுத்திரத்தில் பிரதான மையமாக மாற்றுவதே எமது இலக்காகும். இதற்கு அப்பால் இன்னொரு கடல் நகரை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். துறைமுக நகரை முடித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/61054

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.