Jump to content

நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை

ஆப்கானிஸ்தானை அமெரிக்க நினைத்தால் உலகிலிருந்தே முற்றாக  அழித்துவிடமுடியும் என்ற அர்த்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து விளக்கம் கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்ற யுத்தத்தில்  என்னால் ஒரு வாரத்திற்குள் வெற்றிபெற முடியும் ஆனால் நான் 10 மில்லியன் மக்களை கொலை செய்ய விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை  வெள்ளைமாளிகையி;ல் வரவேற்றவேளை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

தலிபானுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் காரணமாக ஆப்கான் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பொலிஸாகவே நடந்துகொள்கின்றது படைவீரர்களை போல நடந்துகொள்ளவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

trumb_and_imhran.jpg

அமெரிக்காவினால் தனது மிகப்பெரும் படைபலத்தை பயன்படுத்தி உடனடியாக ஆப்கான் மோதலை முடிவிற்கு கொண்டுவர முடியும் ஆனால் பத்து மில்லியன் மக்கள் கொல்லப்படுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பொலிஸ்காரர்களை போல செயற்படுகி;ன்றோம், நாங்கள் படையினர் போல செயற்படவில்லை,நாங்கள் ஆப்காளிஸ்தானில் யுத்தத்தில் ஈடுபட்டு வெல்ல விரும்பினால் ஒரு வாரத்தில் எங்களால் அதனை சாதிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நான் யுத்தத்தில் வெற்றிபெற விரும்பினால் உலகிலிருந்தே ஆப்கானை துடைத்தெறிய முடியும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அமெரிக்காவை மதிக்கவில்லை அதன் ஜனாதிபதிகளை மதிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள ஆப்கான் அதிகாரிகள் ஆப்கான் ஜனாதிபதியின் தலைமைத்துவத்திற்கு  டிரம்ப் மதிப்பளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/61089

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நான் நினைத்தால் ஆப்கானை உலகிலிருந்தே முற்றாக அழித்துவிடமுடியும் - டிரம்பின் கருத்தினால் சர்ச்சை

தாங்கள் நினைத்தால் இஸ்ரேலை உலக வரைபடத்திலையிருந்து அகற்றுவோம் எண்டு ஈரானும்  சொல்லுது.

Link to comment
Share on other sites

பென்னாம் பெரிய றப்பர் வைச்சிருக்காரோ டிரம்ப்.
எப்பதான் நினைக்கப்போறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு கோமாளிகள் உலகை ஒரே நேரத்தில் ஆட்சி செய்கின்றனர் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.