Jump to content

அல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு!


Recommended Posts

"அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சட்டபூர்வ மருந்தாக ஏன் அது பயன்படுத்தப்படுவதில்லை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் நாகராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது.

கஞ்சா ஒரு போதைப் பொருள்; அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் கேடு நிகழும். அது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒரு வஸ்து. இதுதான் இங்குள்ள நிலை. ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அங்கெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், கஞ்சா என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அத்துடன் அதன் குணங்கள் மற்றும் அதன் வரலாறு பற்றியும் பார்த்துவிடுவோம்.

மது, புகையிலை, காபியைப் போல பல நாடுகளில் பயன்படுத்தப்படும் கஞ்சா என்ற `மேரியானா' (Marijuana) தோன்றிய இடம் ஆசியா. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் `கன்னாபிஸ் இண்டிகா' (Cannabis indica) மற்றும் `கன்னாபிஸ் சாடிவா' (Cannabis sativa) எனப்படும் கஞ்சா செடிகள் அதிகமாக வளர்கின்றன. கஞ்சா செடியின் இலைகள், மொட்டுகள், விதைகள், நார் மற்றும் அதன் பிசினைக் கொண்டு உருவாக்கப்படும் எண்ணெய் என அனைத்துமே பயன்பாட்டுக்குரியவை. வெவ்வேறுவிதமாகப் பயனளிக்கக்கூடியவை என்பதுடன் கஞ்சாவுக்கென நீண்ட மருத்துவப் பாரம்பர்யமும் உள்ளது.

சீனாவில் `மா' என்று அழைக்கப்பட்ட கஞ்சா, கிறிஸ்து பிறப்பதற்கு 2,900 ஆண்டுகளுக்கு முன்பே மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்தியாவிலும் இது கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இருந்துள்ளது. தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்பட்டது. இதைப் போலவே எகிப்திய, கிரேக்க, ரோமானிய, பெர்சிய நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளிலும் இது மருந்தாக... குறிப்பாக கண், காது, நரம்பு மண்டலம் உட்பட பல்வேறு உறுப்புகளின் செல்கள் வீக்கத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கஞ்சா இலைகளின் பயன்பாடு அதிகரித்தது. 19-ம் நூற்றாண்டில் வலி நீக்கும் மருந்தாகவும் வலிப்பு, அல்சைமர், மனநோய், அனொரெக்சியா, குளூக்கோமா, புற்றுநோய் எனப் பல்வேறு நோய்களுக்கும் கஞ்சாவை சிபாரிசு செய்ய ஆரம்பித்தனர். இதன் உற்சாகமளிக்கும் குணத்தைக்கொண்டு இதை போதைக்காகவும் பயன்படுத்தினார்கள். கிழக்கு இரானின் ஹிப்பிக்களான ஸ்கிதியர்கள், எரிதழல் மீது கஞ்சா விதைகளை எறிந்து, அதில் வரும் புகையை உள்ளே இழுத்து உற்சாகத்துடன் கூச்சலிடுவார்களாம். இது கி.மு. 440-ம் ஆண்டின் கிரேக்க வரலாற்றுப் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

à®à®à¯à®à®¾ à®à¯à®à®¿

 

ஆண்டு முழுவதும் வளரக்கூடிய இந்தத் தாவரத்தில், 150-க்கும் மேற்பட்ட உபயோகமான தாவரச் சத்துகள் காணப்படுகின்றன. இவற்றுள் `கேனாபினாய்டுகள்' என அழைக்கப்படும் தாவரச் சத்துகளில் (Cannabinoides), டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் (THC - Tetra Hydro Cannabinol) கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளாக விளங்குகிறது. மேலும், ஃபிளேவனாய்டுகள், டெர்பினாய்டுகள், ஆல்கலாய்டுகள், லினோலீக் அமிலம் மற்றும் பல எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் இவற்றுள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆசியாவில் `பாங்' என்று அழைக்கப்படும் கஞ்சாச் செடியின் இலைகள் உலர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. `கஞ்சா' என்று அழைக்கப்படும் பெண் செடியின் பிசின் அகற்றப்படாத மலர்கள் மற்றும் கனிகள் கூடிய நுனிப்பகுதிகள், `ச்ரஸ்' என்றும் அழைக்கப்படும் மலராத மொட்டுகளிலிருந்து பெறப்படும் பிசின் போன்றவை ஒன்றைக் காட்டிலும் ஒன்று வீரியம் மிகுந்த போதைத்தன்மை கொண்டவை. இன்றுவரை 15 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் ஏறத்தாழ 18 கோடி பேர் போதைக்காகவே கஞ்சாவை புகைத்துப் பயன்படுத்துகின்றனர் என்பது வருத்தமான செய்தி.
 
கஞ்சாவில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை ஆராய்ந்தபோது, ஆச்சர்யமான தகவல்களைத் தந்தன மருத்துவ ஆய்வுகள். கஞ்சாவில் உள்ளது போலவே, நமது உடலின் மூளை, கல்லீரல், குடல், கணையம் ஆகிய உறுப்புகளில் இயற்கையாகவே சுரக்கும் `கேனாபினாயிட்ஸ்' நமது மகிழ்ச்சி, சிந்தனை, வலி, பசி, தூக்கம், நினைவாற்றல், உணர்வுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. ஆக, கஞ்சாவைப் புகைக்கும்போது, அதிலுள்ள முக்கிய மூலக்கூறான டி.ஹெச்.சி (Tetra Hydro Cannabinol) ரத்த நாளங்கள் வழியாக மூளையைச் சென்றடையும். அதன்பிறகு மூளையின் கேனாபினாயிட்ஸ் ரிசப்ட்டார்ஸ் என்ற ஏற்பு புரதத்துடன் இணைந்து விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
 

கஞ்சாவின் பயன் அல்லது பக்கவிளைவுகளும் அது உடலில் ஏற்படுத்தும் குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளும் அதை உட்கொள்ளும் அளவைப் பொறுத்ததே. 30 முதல் 60 நிமிடங்கள் வரை நீடிக்கும் குறுகியகால வேதியியல் நிகழ்வில், மூளையின் டோபமைன் அளவை அதிகரித்து, காபா (GABA) என்ற மற்றொரு நியூரோ டிரான்ஸ்மிட்டரின் அளவு கட்டுப்படுகிறது. இது மனநிலையில் உடனடி உற்சாகத்தையும், போதையையும் தற்காலிகமாகத் தூண்டி, `யூபோரியா' (Euphoria) என்ற பறப்பதுபோன்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது. வலியையும் நன்கு குறைக்கிறது.

 
à®à¯à®´à®ªà¯à®ªà®®à¯

கஞ்சாவை உட்கொள்ளும் அளவு அதிகரிக்கும்போது, ஒரு சிலர் சுய கட்டுப்பாட்டை இழந்து, `சைக்சிடெலிக்' (Psychedelic) என்ற மனதை மாற்றும் தன்மைக்கு உள்ளாகலாம். இதனால் மனதின் உள்ளே அடக்கப்பட்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேவந்து கட்டுப்பாடின்றி வன்முறைகளில் ஈடுபடக்கூடும். மேலும் நீண்டகால விளைவுகளாக, ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், `ஹாலூசினேஷன்ஸ்' (Hallucination) என்ற அதீத கற்பனைகள், டெல்யூஷன்ஸ் (Delusions) எனும் மாயைகள், அனைத்துக்கும் மேலாக `கேனாபினாயிட் சைக்கோசிஸ்' (Cannabinoid Psychosis) என்ற மன நோய் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

கஞ்சா மூலம் ஏற்படும் மனநோய் மற்றும் சமூக வன்முறையைக் காரணம் காட்டி, சென்ற நூற்றாண்டில், ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலகமெங்கும் கஞ்சாவைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டது. அத்துடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் மருந்தியல் குறிப்பேடுகளில், மருந்து என்ற பெயரிலிருந்து கஞ்சா நீக்கப்பட்டதுடன் அதைப் பயன்படுத்தவும் முழுமையான தடை விதிக்கப்பட்டது. இதே காரணங்களுக்காக 1985-ம் ஆண்டு இந்தியாவும் கஞ்சா பயன்படுத்துவதை எல்லா வடிவத்திலும் முற்றிலுமாக தடைசெய்தது. இந்தநிலையில், கடந்த 2004-ம் ஆண்டு, அமெரிக்கா தனது 29 மாநிலங்களில் கஞ்சாவுக்கான தடையை நீக்கியது. உலக அளவில் ஏறத்தாழ 23 நாடுகளிலும் தடை நீக்கப்பட்டது. அத்துடன் அதைச் சட்டபூர்வமாக அனுமதிக்க, `இந்தக் கஞ்சா எனப்படும் `கன்னாபிஸ்' (Cannabis) உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா ?' என்ற விவாதம் இப்போது பொதுமக்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் சட்ட வல்லுநர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் உயிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதற்கான பதிலை, `மருத்துவ மரிஜுவானா' எனப்படும் மருத்துவக் குணங்கள் மட்டுமே உள்ள கஞ்சா என்பதன் மூலம் விளக்குகிறது ஹார்வர்டு பல்கலைக்கழகம்.

à®®à¯à®³à¯

'பொதுவாக, டி.ஹெச்.சி. (Tetra Hydro Cannabinol) அதிகமுள்ள கஞ்சா, `சிபிஐ ரிசெப்டார்' (CB1 receptor) என்ற ஏற்பியுடன் இணைவதால், அதிகளவு போதையை ஏற்படுத்தும். இதனால் அதற்கு அடிமைப்படுவதுடன் குழப்பம், ஞாபகமறதி, கட்டுப்பாடற்ற நிலை மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், சி.பி.டி. (Cannabidiol) அதிகமுள்ள கஞ்சா, 'CB2 receptor' என்ற ஏற்பியுடன் இணைவதால், இது வலி நிவாரணியாகச் செயல்படும். அத்துடன் தூக்கமின்மை, மன அழுத்தம், வலிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி, பார்கின்சன் நோய், பசியின்மை, ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய் போன்றவற்றால் உருவாகும் நாள்பட்ட வலிகளையும் போக்கும். எனவே, இந்த டி.ஹெச்.சி மற்றும் சி.பி.டி ஆகியவற்றின் பயன்பாடுகளைப் பொறுத்தே கஞ்சா பாதுகாப்பானதா அல்லது போதையை மட்டுமே அதிகரிக்குமா என்பதைத் தீர்மானிக்கமுடியும்' என்கிறது இந்த ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வு.

ஆக.. நாம் நினைப்பதுபோல அல்லாமல், டி.ஹெச்.சி குறைவாகவும், சி.பி.டி அதிகமாகவும் உள்ள பதப்படுத்தப்பட்ட `கன்னாபிஸ்' என்ற கஞ்சாவைத்தான் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் புகைக்கப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் மாத்திரைகள், சூயிங்கம், ஜூஸாகவும் காபி, டீ, சிகரெட் போலவும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இதன் இறக்குமதி கண்காணிக்கப்படுவதால் சட்டவிரோதமான போதை மருந்து கடத்தலையும் இது பெருமளவு குறைத்துள்ளது என்கிறது அமெரிக்க அரசின் ஒரு பிரகடனம்.
 
இன்றைக்கும் வட இந்தியாவில் ஹோலிப் பண்டிகை மற்றும் மகா சிவராத்திரியன்று பால் அல்லது தயிரில் `பாங்' எனப்படும் போதைப்பொருள், கிராம்பு, ஏலக்காய், லவங்கம் ஆகியவற்றைச் சேர்த்து பானமாக உட்கொள்கிறார்கள். அப்படியிருக்கும்போது கஞ்சாவுக்கு ஏன் இன்னும் தடைநீக்கவில்லை என்றால் அதற்கான பதிலும், மேற்கூறியதிலேயே உள்ளது. ஆம்... மக்கள் தொகையும் விவசாயமும் நிறைந்த இந்தியாவில், இயற்கையில் நன்றாகச் செழித்து வளரும் இந்தத் தாவரத்தின் உற்பத்தியையோ பயன்பாட்டையோ, ஒரு தொழிற்சாலை உற்பத்திப் பொருளைப் போல கண்காணிக்க முடியாது. அத்துடன் விலைகுறைவு, பயன்படுத்துவது சுலபம் என்பதால் சீக்கிரமாக மக்களை, அதுவும் இளைஞர்களைச் சென்றடையும். அதனால் கஞ்சாவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், அதன் பக்க விளைவுகளும் ஒன்று சேர்ந்து பயமுறுத்தும். அதனால்தான் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் இளைஞர்களின் எதிர்காலம் கருதி அரசு இதன் மீதான தடையை நீக்க யோசிக்கிறது.

https://www.vikatan.com/oddities/miscellaneous/everything-you-need-to-know-about-cannabis-sativa

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.