Jump to content

அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.


Recommended Posts

 

Mano Ganesan - மனோ
6 hrs

அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.

அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதன் மூலம் மட்டுமே அடுத்த நிமிஷம் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று நான் சொல்லவே இல்லையே?

இப்படி நினைப்பதே குழந்தைத்தனமான சிந்தனையாகும்.

அமைச்சரவை பத்திரம் என்பது, சில யோசனைகளை தெரிவித்து, சில தீர்மானங்களை எடுக்கும்படி அமைச்சரவையை கோரும்.

பொது மன்னிப்பு, சட்ட மா அதிபர் வழக்குகளை மீளப்பெறல் அல்லது பிணை வழங்குதல், பொலிஸ் வழக்குகளை மீளப்பெறல், புனர்வாழ்வளித்தல் போன்ற பல்வேறு யோசனைகளை பரிசீலிக்கும்படியான தீர்மானங்களை எடுக்கும்படி ஜனாதிபதி உட்பட துறைசார் அமைச்சர்களை, சட்டமா அதிபரை இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் கோரும்.

அடுத்தது, ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களை கொண்ட அமைச்சரவைதான் இந்நாட்டின் அதியுயர் அரசியல் அதிகார பீடமாகும். இங்கே எடுக்கப்படும் தீர்மானங்கள் அரசியல் அதிகார தீர்மானங்களாகும். இதைவிட வேறு ஒரு அரசியல் பீடத்தை நோக்கி நாம் ஓட வேண்டியதில்லை.

எது எப்படி இருந்தாலும் சட்ட வழியில், தமிழ் கைதிகளை முழுமையாக விடுவிக்க முடியாது போயுள்ளது. இந்த காரணத்தினாலேயே இன்று இந்த பிரச்சினை எரியும் பிரச்சினையாக மாறியுள்ளது.

ஆகவேதான் இதை அரசியல்ரீதியாக தீர்க்க முயல்கிறேன்.

அமைச்சரவை ஒரு நீதிமன்றம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

நீதிமன்றத்தில் கிடைக்காத முழுமையான தீர்வை மக்கள் மன்றத்தில் காண நான் முயல்கிறேன்.

எனது அமைச்சரவை பத்திரம் மூலம் இந்த பிரச்சினை தேசிய அரங்குக்கு வரும். அதன் மூலம் தீர்வை நோக்கி நகரும்.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த பிரச்சினை அமைச்சரவைக்கு போகின்றது.

எடுத்த எடுப்பிலேயே இதில் குறை கண்டு, பிழை தேடி, முயற்சியை முடமாக்கி விடாதீர்கள்.

ஆகவேதான் எனக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி அனைத்து கட்சிகளையும் நான் கோரியுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு முதல்முறையாக அமைச்சரவை பத்திரம்

மனோ கணேசன்

இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டு கால உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போர் காலத்தில் பெருந்திரளானோர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காணாமல் போனதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

மேலும், பலர் கை, கால் உறுப்புகளை இழந்து, தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய இன்னொருவரை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் அறிவோம்.

இந்நிலையில், உள்நாட்டு போர் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

தாம் ஆட்சிக்கு வந்தால், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் ஆட்சி பீடம் ஏறினார்கள்.

இந்த இருவரும் ஆட்சிக்கு வந்து, தற்போது அவர்களின் ஆட்சி காலத்தின் இறுதித் தருணம் நெருங்கியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்றும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது கவலைக்குரிய விடயமாகும்.

சிறிசேன

குற்றம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டியது கட்டாயம் என்ற போதிலும், எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் கூட பல ஆண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நிலையில், போர் நிறைவடைந்து ஒரு தசாப்தம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை இன்றும் கேள்வி குறியாகவே தொடர்கிறது.

அரசியல் கைதிகள் என யாரும் சிறைச்சாலைகளில் கிடையாது என அரசாங்கம் கூறிய வரும் நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளதாக தமிழ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தமிழ் அரசியல் கைதியான முத்தையா சகாதேவன் கடந்த ஜுன் மாதம் 22ஆம் தேதி உடல் நலமின்றி சிறைச்சாலையில் உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கனகசபை தேவதாஸன் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கடந்த 9 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தார்.

சிறை

இந்த இரண்டு சம்பவங்களால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸன் இழைத்த தவறு என்ன?

இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினராக கனகசபை தேவாதஸன் கடமையாற்றி வந்திருந்தார்.

யாழ்;ப்பாணம் - கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கனகசபை தேவதாஸன், கொழும்பு ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

கொழும்பு நியூ மெகஸின் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்;டுள்ள கனகசபை தேவதாஸன் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாத நிலையில், அவரே தனது வழக்கை வாதிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்றம் அவருக்கு 2017ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

இந்த பின்னணியில், மேன்முறையீட்டின் ஊடாக நீதிமன்றத்தில் தான் வாதிட்டு தனது விடுதலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தனக்கு போதியளவு சாட்சியங்களை திரட்ட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு சாட்சியங்களை திரட்ட வேண்டுமாயின், தன்னை குறிப்பிட்ட சில காலம் பிணையில் விடுவித்தால், தனக்கு சாட்சியங்களை திரட்ட உதவியாக இருக்கும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மனோ கணேசன்

இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையிலேயே, கனகசபை தேவதாஸன், கடந்த 9 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை சிறைச்சாலைக்குள் ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் மனோ கணேஷன், தமிழ்த் தேசியக்; கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தரப்பினர் கனகசபை தேவதாஸனை சிறைச்சாலையில் புதன்கிழமை சென்று சந்தித்துள்ளனர்.

கனகசபை தேவதாஸனுக்கு அமைச்சர் மனோ கணேஷன் வழங்கிய உறுதி மொழியை தொடர்ந்து, அவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நீராகாரம் அருந்தி நிறைவு செய்துக் கொண்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைச்சரவை பத்திரம் முதல் தடவையாக தயாரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தான் முன்னெடுத்து வருவதாக சமூக ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கருமமொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரத்தை தான் தற்போது தயாரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மெகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 9 நாட்களாக முன்னெடுத்த தமிழ் அரசியல் கைதியான கனகசபை தேவதாஸனின் உண்ணாவிரத போராட்டத்தை செயவாய்க்கிழமை நிறைவு செய்ததை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் வகையில் தயாரிக்கப்படும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தான் அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் நம்பிக்கை வெளியிட்டார்.

பல அரசியல் கைதிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பலருக்கு விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த அனைத்து விதமான தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் வகையில் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறான அமைச்சரவை பத்திரமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரணில்படத்தின் காப்புரிமைNURPHOTO

இலங்கையில் முதலில் மக்கள் விடுதலை முன்னணியினர் கலவரங்களில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், நாட்டில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சினை உருவெடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விடுதலை செய்யப்பட்டதாக அமைச்சர் நினைவூட்டினார்.

இந்த நிலையில், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சினை உருவாகியுள்ளமையினால், தமிழ் அரசியல் கைதிகளை இலகுவில் விடுதலை செய்வதற்கான சந்தர்ப்பம் மற்றும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னால் தயாரிக்கப்பட்டு வரும் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிப்பார்கள் என்பதனை பொருத்து இருந்தே பார்க்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் குறிப்பிட்டார்.

அருட்தந்தை சக்திவேல் Image captionஅருட்தந்தை சக்திவேல்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி ஆட்சி அமைத்த அரசாங்கம் இன்று அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தாது செயற்படுகின்றமை வருத்தமளிக்கும் விடயம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும் வகையில் அமைச்சர் மனோ கணேஷன் நடவடிக்கை எடுப்பாராயின், அது வரவேற்கத்தக்கது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் கைதிகள் கட்டாயம் விடுதலை செய்யப்பட வேண்டியது அவசியமானது எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49094659

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.