Jump to content

தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடாதீர்கள்; சபையில் சம்பந்தன் காட்டம்


Recommended Posts

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு பேசிய அவர் மேலும் கூறியதாவது;

போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது.

சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர , பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இதனால் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே. தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை.நாட்டை பல வழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான் சமஷ்டிக் கட்சியின் கொள்கை.ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.நாடு சக்திமிக்க ஒன்றாக மாற வேண்டுமானால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

சமூக , கலாசார உரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையை உங்களால் மறுக்க முடியுமா?1956 ஆம் ஆண்டில் இருந்து வட கிழக்கு மக்கள் மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த அரசு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்கு கிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வு தாமதமாகிறதா என்று தமிழ் மக்களும் நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இது சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகிறது.

எல் எல் ஆர் சி அறிக்கையின் சிபாரிசுகளை நிறைவேற்றுங்கள்.சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சி செய்தால் அது தவறு. அப்படிச் செய்தால் நீங்கள் தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்ற அரசாக ஆகிவிடுவீர்கள்.எனவே உச்சபட்ச அதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்றார்.

http://thinakkural.lk/article/32281

Link to comment
Share on other sites

"பிளவுபடாத நாட்டுக்குள் தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

பிளவுபடாத நாட்டுக்குள் முறையான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இல்லாவிட்டால் இந்த அரசாங்கம் தொடர்ந்து பயணிக்க முடியாதநிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். 

அத்துடன் அரசாங்கம் தேசத்துக்கும் சர்வதேசத்துக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எமது நாடு தொடர்பான நம்பிக்கை சர்வதேசத்திடம் இல்லாமல் போகும். 

பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடடார்.

 

https://www.virakesari.lk/article/61217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழர்களை ஏமாற்றிய அரசுகள் இதுவரை வெற்றியடைந்ததாகத் தான் வரலாறு கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ யெஸ் நாங்கள் ஏமாற மாட்டோம் 
தலீவரு சம்மந்தம் அவர்கள் அப்படியொரு நிலையை 
தமிழர்களுக்கு விடமாட்டார்.

ஒரு தமிழனாக சிங்களவர்களை பங்குக்கு நானும் எச்சரிக்கிறேன். 

Link to comment
Share on other sites

புதிய அரசியலமைப்பு துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சபையில் உறுப்பினர்கள் போதியளவு பிரசன்னமாகியிருக்காத நிலைமை அவதானிக்ககூடியதாக இருந்தது.

 

குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றிய அவர், தமிழ் மக்களுக்கு அதியுச்ச அதிகார பரவலாக்கம் அவசியம் என்றும், அது ஒன்றிணைந்த பிரிக்கப்படாத இலங்கைக்குள் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது சிங்களத் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எவ்வாறிருப்பினும், இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதை தவிர்த்து, தமிழ் மக்கள் வேறு எந்த தீர்வினையும் ஏற்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாதமை சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு கூட்ட மதிப்பெண் என்று கூறப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 இற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த நிலையில், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட்ட மதிப்பெண் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவினால் குறித்த விடயம் சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

இதையடுத்து, கோரம் ஒலிக்கப்பட்டதன் பின்னர் கூட்ட மதிப்பெண்ணுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை சபையில் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தன் தனது உரையை தொடர்ந்தார். 

எவ்வாறிப்பினும், அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரசன்னம் போதியளவில் இல்லாமை குறித்து அவரும் சுட்டிக்காட்டியிருதார்இதேவேளை, குறித்த விவாதத்தில் தாம் உரையாற்றிய சந்தர்ப்பத்திலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை போதியளவு இருக்கவில்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார். 

குறித்த விவாதத்தில் உரையாற்றி தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார், தவறுகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை திருத்திக்கொண்டு சரியான பாதையில் செல்ல அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

http://www.hirunews.lk/tamil/221014/புதிய-அரசியலமைப்பு-குறித்து-த-தே-கூட்டமைப்பு-ஒத்திவைப்பு-வேளை-பிரேரணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

புதிய அரசியலமைப்பு துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சபையில் உறுப்பினர்கள் போதியளவு பிரசன்னமாகியிருக்காத நிலைமை அவதானிக்ககூடியதாக இருந்தது.

---------

எவ்வாறிருப்பினும், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாதமை சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.  நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு கூட்ட மதிப்பெண் என்று கூறப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 இற்கு குறையாமல் இருத்தல் வேண்டும். இந்த நிலையில், சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட்ட மதிப்பெண் இல்லாத காரணத்தினால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவினால் குறித்த விடயம் சபாபீடத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

roflphotos-dot-com-photo-comments-20190411190919.jpg

சம்பந்தனின் கருத்துக்களை.... தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் கணக்கில் எடுப்பதில்லை என்று தெரிந்து விட்டது. 
இந்த அவமானத்திற்கு பின்.. சம்பந்தன் அரசியலை விட்டே ஒதுங்குவது தான்...  மானஸ்தனுக்கு அழகு.

 

Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் கருத்துக்களை.... தமிழர் மட்டுமல்ல, சிங்களவரும் கணக்கில் எடுப்பதில்லை என்று தெரிந்து விட்டது. 
இந்த அவமானத்திற்கு பின்.. சம்பந்தன் அரசியலை விட்டே ஒதுங்குவது தான்...  மானஸ்தனுக்கு அழகு.

முற்றிலும் உண்மை. இவர்கள் சபையில் பேசும்பொழுது சகல சிங்களவர்கள் 'வெளிநடப்பு' செய்கிறார்கள்.

ஒரு கொள்கை இன்றி சகலதிற்கும் நடாத்தும் இணக்க அரசியலின் விளைவே இது.    

 

 

Link to comment
Share on other sites

On 7/25/2019 at 4:35 PM, ampanai said:

புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சம்பந்தன் செத்த பிணங்களுக்கு முன்னால ஒப்பாரி வைக்கிற மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

மக்களின் ஆதரவை பெறுவதற்காக சம்பந்தனின் நாடகம் அரங்கேற்றம் - அனந்தி விசனம்

தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா தெரிவித்துள்ளார் என முன்னாள் வடக்கு மாகாண சபை மகளிவர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்.

ananthi.jpg

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு  ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ வழங்கிவிட்டு, தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா பாராளுமன்றத்திலே கூறியிருப்பது, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில், மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா மிகவும் காட்டமாக கருத்துத் தெரிவித்திருந்ததை தொலைக்காட்சி ஊடாக பார்க்கக் கூடியதாக இருந்தது. உண்மையில் இன்னும்  3 மாத காலங்களில் ஜனாதிபதித் தேர்தல் வருகின்றமையால் மூன்று மாத காலம் தான் இந்த அரசு ஆட்சியில் இருக்கப் போகின்றது.

இந்நிலையில் தான், இத்தனை வருடங்கள் 2015 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என மூன்றும் கட்சிகளும் இணைந்து ஆட்சி மாற்றத்தினை கொண்டுவந்து இத்தனை வருடங்கள் கடந்த நிலையில், இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா தெரிவித்துள்ளார். 

உண்மையில் அவர்களுடைய பதிவி  இருக்கின்ற ஒரு வருடமோ இரண்டு வருடமோ முன்னதாக இந்த அழுத்தத்தை பிரயோகத்திருக்க வேண்டும். ரணிவில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியலிருந்து நீக்கப்பட்ட 51  நாள் குழுபத்தில் இருந்து அண்மையில் பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லாம் பிரேரணை வரை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ இந்த அரசுக்கு வழங்கிவிட்டு இப்பொழுது கூறுவதென்பது எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில் மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் கூறுவதற்காகவே இவ்வாறான கருத்திதை தெரிவித்துள்ளதாக பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில் இவர்கள் இதயசுத்தியுடன் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கா தீர்வு எட்டப்படவேண்டும் என்ற நிலை இருந்திருதால் இவர்கள் ஆரம்பகாலத்தில் இருந்தே இரண்டு கட்சிளுக்கும் ஆட்சி அமைக்கின்ற ஆதரவை கொடுத்தது போன்று, இவர்களுக்கான அந்த அழுத்தங்களையும் பிரயோகித்திருக்க வேண்டும்.

சம்பந்தர் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்போதும் கூட இந்த அழுத்தத்தை பிரயோகித்திருப்பதாக நான் எந்த ஒரு ஊடகத்திலும் அறியக்கூடியதாக இருக்கவில்லை. ஆனால் இந்த மூன்றுமாத காலத்திற்குள் ஜனாதிபதியோ பிரதமரோ எதனையும் செய்துவிடுவதற்கு வாய்ப்பேதும் இல்லை. விரும்பினால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக கம்பரெலியா உதவித்திட்டத்தையும், வேலையற்றவர்களுக்கான வேலை வாய்ப்பினையும் இந்த மூன்று மாதகாலத்திற்குள் வழங்காலாம். 

ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று வருவதன் ஊடாகத்தான் எங்களுடைய பல பிரச்சினைகள் நில ஆக்கிரமிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விடுதலை உட்பட பல விடயங்கள் தீர்க்கப்பட வேண்டிய சூழலை கொண்டு வந்திருக்காலம்.  மேலும் வடக்கு மாகாண சபையில் இருந்போது இந்த வடமாகத்திற்குட்பட அமைச்சுக்களினுடைய பல பிரச்சினைகளை தன்னும் அல்லது அந்த வடக்கு மாகாணதுக்குரிய வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய நிதிகளுக்குகூட அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுக்காதவர்கள் தான் இந்தக் கூட்டமைப்பினர். 

இப்பொழுது பிரதமருடைய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு துணைபோகாத காரணத்தினால் அவர்களுக்கு 50 மில்லியன் வரையான அபிவிருத்திக்கான நிதி வழங்குவதாக பேசப்பட்டிருந்தது. ஆனால் வடக்கு மாகாணத்துக்குரிய முன்னாள் மகளிர் விவகார அமைச்சராக நான் இருந்த காலத்தில் ஐந்து மாவட்டங்களுக்குமுரிய மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமுக சேவை, கூட்டுறவு, தொழில்துறை என்ற வகையில் அத்தனை பிரிவுக்குமே எங்களுகக்கு வழங்கப்பட்டது வெறும் 83 மில்லியன்.

வெறும் 83 மில்லியனை மாணகத்துக்குரிய அமைச்சிற்கு தந்து விட்டு, தன்னுடைய ஆட்சிக் கவிழ்ப்பிற்கு துணைபோகாத காரணத்தினால் 50 மில்லியன்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடைய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையில் வெளிப்படையான கூட்டமைப்பினுடைய வாக்குவங்கியை அதிகரிப்பதற்கான ஒரு இலஞ்சமே.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்மைப்பினர்  வடக்கு மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை, அழுத்தங்களைக்கூட நகர்த்த முடியாத நிலையில் நாங்கள் மாகாண சபையில் ஒரு தீர்வு திட்டத்தை எழுதினோம். இந்த தீர்வுத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் ஐயா இருந்தபோது அதைக் கையளித்தோம்.

அதேபோன்று சபாநாயகரிடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா கையளித்திருந்தார். ஆனால் அந்த தீர்வுத்திட்டம் எதுவுமே வராத நிலையில் இப்பொழுது இவர்கள் மக்களை ஏமாற்றுகின்ற செயலில் இந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தில் பிரயோகித்திருக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/61283

Link to comment
Share on other sites

On 7/26/2019 at 6:33 PM, ampanai said:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கு  ஒரு நிபந்தனையில்லாத ஆதரைவ வழங்கிவிட்டு, தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கின்ற போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத காரணத்தினால் நாங்கள் உங்களுக்கு தருகின்ற ஆதரவை விலக்கிக்கொள்ளக்கூடிய சூழல் ஒன்று உருவாகியிருக்கின்றது என சம்பந்த ஐயா பாராளுமன்றத்திலே கூறியிருப்பது, எதிர்வரும் தேர்தல் காலங்களில் தாங்கள் வாக்குப் பெறும் நோக்கில், மக்களிடம் நாங்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்திருந்தோம் என்ற செய்தியைக் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றால் முயற்சியை அம்மையார் அப்பிடியே பிட்டுப்பிட்டு வைச்சிருக்கார்!

இதுக்கு மேலையும் மானம் ரோஷம் உள்ளதுகள் கூட்டமைப்பில இருக்காதுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.