Jump to content

``காதலாலும் சாதியாலும்” - வ.ஐ.ச.ஜெயபாலன் , விகடன்.காம்


Recommended Posts

``காதலாலும் சாதியாலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறேன் ..." கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன். 

IMG_20190724_112643.jpg
வ.ஐ.ச.ஜெயபாலன் ( கிராபியென் ப்ளாக் )

வ.ஐ.ச.ஜெயபாலன்... ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் எழுதிய ‘சூரியனோடு பேசுதல்’, `நமக்கென்றொரு புல்வெளி’, `ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’, `ஒரு அகதியின் பாடல்’, `வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்’ உள்ளிட்ட படைப்புகள் மிக முக்கியமானவை. 

 

IMG_20190724_113138.jpg

வ.ஐ.ச.ஜெயபாலன் 
கிராபியென் ப்ளாக்

 

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் நெருங்கிய நண்பர் ஜெயபாலன். பாலு மகேந்திராவின் சிஷ்யரான வெற்றிமாறன் இயக்கிய `ஆடுகளம்’ திரைப்படத்தில் `பேட்டைக்காரர்' பாத்திரத்தில் நடித்து, புகழ்பெற்றார். `தன்னைத் தேடி வரும் பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது' என்கிற கொள்கையில் இருப்பவர். தற்போது, சென்னை பெசன்ட்நகர் கடற்கரைப்பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். மாடியில் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துப் பராமரிக்கிறார். கடலை பார்த்தபடியே நம்மிடம் பேசினார். 

``இலங்கையரான நாங்கள் வாழ்க்கையில் 30 வருடங்களைப் போரில் இழந்திருக்கிறோம். அதற்கு முந்தைய இளமையையும் போருக்குப் பிந்தைய முதுமையையும்கூட இனஒடுக்குதல் சூழலிலோ அல்லது புலம்பெயர்ந்த சூழலிலோதான் வாழவேண்டியிருக்கிறது. விடுதலைக்கான போராட்டத்தில் உடலையும் மனதையும் தாக்குப்பிடித்து வாழ்வது எங்களுடைய விதியாக இருக்கிறது.

 

IMG_20190724_111517.jpg?w=1200&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன் 
கிராபியென் ப்ளாக்

 

அக வாழ்க்கையில் காதலால் மனஅழுத்தம் வந்திருக்கிறது. புறவாழ்க்கையில் சாதிய ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் தந்தையுடன் மோத நேர்ந்தது. அத்துடன் தொடர்ந்த இன விடுதலைப் போராட்டங்களால் தமிழர் எம் வாழ்வையும் வாய்ப்பையும் மறுத்ததால் மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. புலம்பெயர்வதால் ஏற்படும் பிரிவு சார்ந்த மனஅழுத்தம் எப்போதும் உண்டு. 

இலக்கியத்தில் `பிரிவு' என்பது பாலை நிலத்தின் இயல்பு. போர் நிலமும் பாலைதானே. வீரம் விழையும் பாலை. தொடர் மரணங்களும் தவிர்க்கமுடியாத புலப்பெயர்வுகளும் போரில் பாலையான ஈழ மண்ணில் இயல்பு. 

 

IMG_20190724_111610.jpg?w=1200&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன் 
கிராபியென் ப்ளாக்

 

போரையும் புலம்பெயர்தலையும் வெற்றியையும் தோல்வியையும் சிறுவயதிலிருந்தே எதிர்கொண்டதால் இலங்கைத் தமிழர்களான நாங்கள் அழுத்தங்களுக்கு ஈடுகொடுத்து வாழப் பழகிவிட்டோம். 

பால்யவயதில் தோழிகளின் நட்பைக் காதலென்று நினைத்து அந்த நட்பு உடைந்தபோது ஏற்பட்ட சிறிய மனஅழுத்தங்களை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. வளர்ந்தநிலையில் போருக்கு ஈடுகொடுத்து, சங்ககால கவிஞனைப்போல எதற்கும் அஞ்சாமல் `நெற்றிக் கண்ணைக் திறப்பினும் குற்றம் குற்றமே' என இடித்துரைப்பவனாக வாழ்ந்தேன்.

IMG_20190724_111836.jpg?w=1200&auto=form

 

வ.ஐ.ச.ஜெயபாலன் 
கிராபியென் ப்ளாக்

 

சமூகத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்து வாழ்ந்த காலங்களில் உயிருக்கு ஆபத்து வந்தபோதுகூட நான் அவ்வளவு மனஅழுத்தங்களுக்கு ஆட்பட்டதில்லை. ஒருவேளை மனஅழுத்தங்களோடு வாழ்வதே எங்களது வாழ்க்கைமுறையாக மாறிவிட்டது என்பதே காரணமாக இருந்திருக்கலாம். 

கடைசி யுத்தத்தின்போது மிகவும் நெருக்கடியான காலத்தில் நான் வன்னியோடு தொடர்பில் இருந்தேன். அதுதான் என்வாழ்வின் மிக மோசமான மனஅழுத்தம் நிறைந்த காலம். 
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு துறையில் மட்டும் இருக்கவில்லை. ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு முன்பே, 16 வயதில் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான வன்முறையைக் கையில் எடுக்க நேர்ந்தது. அதனால் 20 - 27 வயதுகளுக்கிடையே பலதடவை என்னை என்கவுன்டரில் கொல்ல சாதி ஆதிக்கச் சார்புக் காவல்துறை திட்டமிட்டது. 

IMG_20190724_104550.jpg?w=1200&auto=form

 

வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

 

அதன்பிறகு மீண்டும் படித்து பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவனாக தொடர்ந்து மூன்று வருடங்கள் செயல்பட்டேன். அதுவும் சவாலான வாழ்க்கையாக இருந்தது. போராளி மனம்கொண்ட நான், இன நெருக்கடிகளில், தனி மனிதனாக சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தேன். மாணவனாக, போராளியாக, கவிஞனாக பல்வேறு பரிமாணங்களில் இருந்ததால் ஒரு துறை சார்ந்த நெருக்கடிக்கு இன்னொரு துறை சார்ந்த சந்தோஷங்கள் மருந்தாகின.

வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன். ஆனால், எல்லோரையும் மன அழுத்தத்தில் இருந்து காப்பாற்றும் அனுமனாகவும் சஞ்சீவி மலையாகவும் எப்போதும் உள்ளனரே தோழர் தோழியர்கள். 

 

IMG_20190724_112946.jpg

வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

 

கடைசி யுத்தத்தின்போது மிகவும் நெருக்கடியான காலத்தில் நான் வன்னியோடு தொடர்பில் இருந்தேன். அதுதான் என்வாழ்வின் மிக மோசமான மனஅழுத்தம்நிறைந்த காலம். 

ஒரு பக்கம் கடல். மறுபக்கம் மலர்கள். இவையிரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்க்கையை எப்போதும் ரசிக்கிறேன். அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்றும் கருதுகிறேன். 
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்

அந்தக் காலத்தில்தான் `ஆடுகளம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. போரின் தோல்வியை உணர்ந்த ஒருதருணத்தில் படப்பிடிப்பை மறந்து மோட்டார் சைக்கிளில் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பிசாசுபோல மரணவேகத்தில் தென் தமிழகத்தில் சுற்றியிருக்கிறேன்.

 

de135ad1-a54a-4557-80ab-ed3c4596c6d4.jpg

தனுஷ் உடன் வ.ஐ.ச.ஜெயபாலன்
ஸ்டில் ராபர்ட்

 

 இயக்குநர் வெற்றிமாறன் துரோணரைப் போன்ற ஒரு  முழுமையான ஆசான். அவருடைய அர்ச்சுனன் தனுஷ்; ஒரு ஏகலைவனாக ஈழத்து வேட்டுவனாக நான் வெற்றிமாறனிடம்தான் நடிப்புக் கலையைப் பயின்றேன்.  

மற்றபடி இயல்பாகவே ஈழத் தமிழர்கள் மனஅழுத்தத்தை தாங்கக்கூடியவர்கள்தான். அழுத்தம் பொதுவிதியாக இருந்தாலும் அதைத் தாங்கும் ஆற்றல், வல்லமை வாய்க்கும் சூழல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது என்றே சொல்வேன்! 

`நான் ஒரு அதிர்ஷ்டக்கார கவிஞன்' என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் விரும்புகிற நீலியை (கடல்) நான் காதலியாக வைத்திருக்கிறேன். கடலுக்குத் தெரியாமல் என்னுடைய மாடித் தோட்டத்தில் நிறைய பூ மற்றும் காய்கனிச் செடிகளையும் வைத்திருக்கிறேன். இப்படியொரு வாழ்க்கை எனக்குக் கிடைத்திருப்பதை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 

IMG_20190724_112929.jpg

 

வ.ஐ.ச.ஜெயபாலன்
கிராபியென் ப்ளாக்

 

ஒரு பக்கம் கடல். மறுபக்கம் மலர்கள். இவையிரண்டுக்கும் இடையிலான வாழ்க்கை எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்க்கையை எப்போதும் ரசிக்கிறேன். அதைவிட வேறு எதுவும் பெரிதல்ல என்றும் கருதுகிறேன். வாழ்வதுதான் பெரிது; அதுதான் இனிமையானது. தனித்தும் சமூகமாகவும் வாழ்வதுதான் கடமை. அந்த வகையில் நான் மனஅழுத்தங்கள் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்!” என்கிறார் வ.ஐ.ச. ஜெயபாலன்.

 

 

https://www.vikatan.com/health/writer-v-i-s-jayapalan-speaks-about-his-stress-relief-techniques?fbclid=IwAR32jdNJbCNQJFWJjuOEZkoVqFJCDs2TaD6boGJqUJqEloLA7csUavPd8Nw

 

 

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி நியானி. தொழில் நுப்ப அறிவிலியான என்னால் சரியாக இணைக்க  இயலவில்லை. உதவியமைக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.