Jump to content

வெளிநாட்டு மோகத்தில் லண்டன் சென்ற யாழ் இளைஞனின் வாழ்வில் நடந்த சோகம்!


Recommended Posts

இந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான்.

இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது.

உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும்.

இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், சொர்க்கம்தான் என்று எண்ணி யாழிலிருந்து லண்டன் சென்ற கஜன் என்ற இளைஞனின் துயரம் கலந்த வாழ்க்கையின் சிறிய அனுபவ பகிர்வு பின்வருமாறு..

எனது சொந்த ஊர் மானிப்பாய், எனது ஊரில் நண்பர்களுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன், அப்போதுதான் எல்லோருக்கும் வரும் வெளிநாட்டு மோகம் எனக்கும் வந்தது, வெளிநாட்டில் இருப்பவர்கள் எங்கள் ஊருக்கு வரும்போது சொகுசு வாகனங்கள், உயர் தர தொலைபேசி, உடம்பு நிறைய நகைகள் என வருவார்கள் எங்களுக்கு பார்க்கும் போது நாமும் இப்படி வரவேண்டும் என நினைத்து வெளிநாட்டுக்கு செல்ல தயாரானேன்.

தந்தை, தாய், சகோதரிகள் என அனைவருடனும் சண்டை போட்டேன், அடம்பிடித்து வெளிநாடு செல்லத்தான் வேண்டுமென்று சொன்னேன் எனது தொந்தரவு தாங்காமல் வீட்டில் உள்ள சொத்துக்கள், நகைகள் என்பவற்றை விற்று எனக்கு லட்ஷக்கணக்கான ரூபாய் பணத்தை தந்தார்கள், நான் முகவர் ஊடக நாலு நாடுகள் கடந்து ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்தேன்.

அதற்கு பின்புதான் எனது வாழ்க்கையில் துயர நாள் ஆரம்பமானது, தங்க இடமில்லாமல், சாப்பாடு இல்லாமல் தவித்து, கஸ்ரப்பட்டு சொல்லனா துன்பங்களை அனுபவித்தேன், இரவுகளில் தூக்கம் வராது கண்ணீர்தான் வரும், ஏண்டா வந்தோம் என ஒவ்வொரு வினாடியும் தோன்றும், நான் அனாதையாகிவிட்டேனே என அழுவேன் அதற்கு பின்பு பல போராட்டங்களின் பயனாக இளமையை தொலைத்து தற்போதுதான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு லண்டன் வரும் போது வயது 26 தற்போது 33 வயது கிழவன் மாதிரி ஆகிவிட்டேன் என்னோடு படித்த நண்பர்கள் எல்லோரும் யாழில் திருமணம் முடித்து குழந்தைகளை பெற்று சொந்தங்களுடன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

நான் இங்கு தனிமரமாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்பத்தான் எனக்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள்.

இப்போது இங்கிருந்து சொந்த ஊரில் இருக்கும் நண்பர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது, அப்படி வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இப்போதுதான் தெரிகிறது வாழ்க்கையென்றால் என்ன? நிம்மதி எங்கிருக்கிறது என்று.. தாயகத்திலிருந்து வெளிநாடு வருவோருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல் வருமா..

https://www.ibctamil.com/srilanka/80/124789?fbclid=IwAR07mu725yjaNSD746y1s1XgPWFc_2OofIea_KG6dr2moBAy_6ypUmWupZ8

Link to comment
Share on other sites

 

Quote

 

இப்போது இங்கிருந்து சொந்த ஊரில் இருக்கும் நண்பர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது, அப்படி வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இப்போதுதான் தெரிகிறது வாழ்க்கையென்றால் என்ன? நிம்மதி எங்கிருக்கிறது என்று.. தாயகத்திலிருந்து வெளிநாடு வருவோருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல் வருமா..

 

உண்மைதான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.