Jump to content

ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? #TechBlog சாய்ராம் ஜெயராமன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? #TechBlog

சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ்
ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?படத்தின் காப்புரிமைVALERY HACHE

"எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன.

அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை மையமாக கொண்டு நடந்த நூதன கொள்ளைகளின் மூலம் சுமார் 21.4 கோடி ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, 233 புகார்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 179 புகார்களுடன் டெல்லி இரண்டாமிடத்திலும், 147 புகார்களுடன் தமிழ்நாடு மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்தாண்டு தமிழ்நாட்டில் மட்டும் 3.6 கோடி ரூபாய் தானியங்கி பணம் எடுக்கும் மையங்களை முதலாக கொண்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளைகளுக்கு அடிப்படையாக உள்ள கார்டு ஸ்கிம்மிங் டிவைஸ் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த கட்டுரை.

ஸ்கிம்மிங் கருவி என்றால் என்ன?

ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் அட்டை (டெபிட் கார்டு) அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) சொருகும் இடத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டு, அதன் மூலம் குறிப்பிட்ட அட்டையின் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருவருக்கு தெரியாமலே பதிவு செய்துக்கொள்ளும் கருவியே ஸ்கிம்மிங் கருவியாகும்.

ஸ்கிம்மிங் கருவியின் மூலம் வங்கி அட்டையின் எண், தனிப்பட்ட குறியீட்டு எண் (சிவிவி) போன்றவை சேகரிக்கப்படும் நிலையில், ஒருவரது கடவுச்சொல் பணம் எடுக்கும் இயந்திரத்தின் தட்டச்சு செய்யும் இடத்தில் மிகச் சிறிய கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்டுபிடிக்கப்படும். மிகவும் அரிதான நேரங்களில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் கடவுச்சொல் பதிவிடும் இடத்தில் அதே வடிவமைப்பை கொண்ட உறை மேலே விரிக்கப்பட்டு அதன் மூலம் கடவுச்சொல் திருடப்படும்.

ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் வங்கி அட்டையை சொருகும் இடத்தில்தான் ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்படுகிறது. அதாவது, நீங்கள் வழக்கமாக வங்கி அட்டை சொருகும் இடம் புதிதாக நீண்டு வளர்ந்ததை போன்றோ அல்லது அசாதாரணமாகவோ காட்சியளிக்கும்.

அப்படி உங்களுக்கு சந்தேகம் இருக்கும் அசாதாரணமான பகுதியை சிறிதளவு அசைத்து பார்த்தாலே அது இணைக்கப்பட்ட இடத்திலிருந்து பிரிய ஆரம்பிக்கும்.

இலங்கை இலங்கை

அதே போன்று, நீங்கள் கடவுச்சொல் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே ஏதாவது புள்ளி அளவில் கேமரா தென்பட்டாலும் எச்சரிக்கையாக இருங்கள்.

சில சமயங்களில், ஏ.டி.எம் அட்டையின் கடவுச்சொல் தட்டச்சு செய்யும் பலகையின் மேலே அதே போன்ற மற்றொரு உறை ஒட்டப்பட்டு உங்களுக்கு தெரியாமலே கடவுச்சொல் பதிவுசெய்யப்படும். எனவே, நீங்கள் கடவுச்சொல் தட்டச்சு செய்யுமிடத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது தென்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

திருடிய தகவலை வைத்து என்ன செய்வார்கள்?

பெரும்பாலான வேளைகளில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் கருவி மற்றும் கேமராவை வைக்கும் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து வந்து அவற்றை எடுத்து, அதில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒப்பீடு செய்து அதேபோன்றதொரு போலியான கார்டை தயார் செய்கின்றனர்.

பின்பு, அவற்றை பயன்படுத்தி வேறுபட்ட தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களிலிருந்து வங்கி கணக்கின் உரிமையாளருக்கு தெரியாமலே பணம் எடுத்து துடைத்துவிடுக்கின்றனர். இந்த முறையில் பணம் எடுப்பவர்களை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பிடித்துவிடுகின்றனர்.

ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், காவல்துறையினரிடம் சிக்குவதை தவிர்க்கும் வகையில், ஓர் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஸ்கிம்மிங் கருவியின் விவரங்களை உடனுக்குடன் இணையதளம் மூலம் தெரிந்துகொண்டு அதை பயன்படுத்தி இணையம் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

பணம் போனால் திரும்ப கிடைக்குமா?

பொதுவான காந்தத்தை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களே இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனைகளை களையும் பொருட்டே, மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இஎம்வி (EMV) எனும் சிப் ரக கார்டுகளை வைத்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு தொடக்கம் முதல் கட்டாயப்படுத்தியது.

அதாவது, இந்த புதிய இஎம்வி ரக அட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் தனியே கிரிப்டோகிராம் (Cryptogram) எனும் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்ட எண்கள் ஒதுக்கப்படும். எனவே, இந்த ரக கார்டை ஸ்கிம்மிங் செய்து புதிய கார்டை உருவாக்க முடியாது என்று வங்கிகள் உறுதியளிக்கின்றன.

இலங்கை இலங்கை

இருந்தபோதிலும், இந்தியாவிலுள்ள சுமார் இரண்டு லட்சம் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதிகூட இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம்.

"நாடுமுழுவதும் சரியான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற எதுவுமே இல்லாத பணம் எடுக்கும் மையங்கள் பெருமளவில் இருக்கின்றன. அவற்றின் தரத்தை உயர்த்தி, பிரச்சனைகளை களையாமலே புதிய தொழில்நுட்பங்களை கொண்ட வங்கி அட்டைகளை மட்டும் பயன்படுத்துவதில் பயனில்லை" என்று அவர் கூறுகிறார்.

நூதனமான வழிகளின் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி பணத்தை திரும்ப கொடுக்குமா? என்று அவரிடம் கேட்டபோது, "கண்டிப்பாக கொடுக்காது. பணத்தை இழந்தவர்கள் அதுகுறித்த விவரங்களை வங்கியிடம் தெரிவித்து தக்க பாதுகாப்பு நடவடிக்கை (வங்கி அட்டை அல்லது இணையதள கணக்கின் பயன்பாட்டை நிறுத்துவது) எடுத்துவிட்டு, பிறகு காவல்துறையிடம்தான் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். இதுவே பணம் எடுக்கும் இயந்திரம் மற்றும் பிற வங்கி சார்ந்த காரணங்களினால் பறிபோன பணம் தொடர்பாக சரியான ஆதாரம் கொடுக்கும் பட்சத்தில் வங்கிகள் பணத்தை திரும்ப வழங்கிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/science-49108503

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.