Jump to content

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை!

In இலங்கை     July 26, 2019 1:47 pm GMT     0 Comments     1238     by : Litharsan

வேலையற்ற-பட்டதாரிகள்.jpg

அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்கப்படாத பட்டதாரிகளே இன்று தமது விபரங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில், யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய உள்ளவாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ.பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் இன்று பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அரச நியமனத்தில் 2017ஆம் ஆண்டு 6ஆம் மாதத்திற்குப் பின்னரான உள்வாரிப் பட்டதாரிகள், எச்.என்.டீ.ஏ. பட்டதாரிகள் மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் பலருக்கு நியமனம் வழங்கப்படவில்லை.

அரசின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது பதிவுகளை மீளவும் மேற்கொண்ட பட்டதாரிகள் யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடாத்தியிருத்தனர்.

இதன்போது பட்டதாரிகளிடத்தே பாரபட்சம் காட்டாமல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுள்ளனர்.

http://athavannews.com/பாரபட்சம்-காட்டாமல்-வேலை/

 

 

Link to comment
Share on other sites

ஒரு அரசுதான் மட்டும்தான் பட்டாதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது இல்லை.
தனியார் துறை மற்றும் தனி நபர் முயற்சி மற்றும் புதுமை வழிகளில் படித்தவர்கள் ஈடுபடலாம். 

அரசிற்கு எங்கிருந்து பணம் வருகின்றது? குறிப்பாக வரிப்பணத்தில் இருந்து.
வரிப்பணம் எங்கிருந்து வருகின்றது ? பல வழிகள், அதில் ஒன்று உழைப்பவர்கள் செலுத்தும் வரி.  தனியார் துறை வளர்ச்சியே அரச திறைசேரியை நிரப்பும். 

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

ஒரு அரசுதான் மட்டும்தான் பட்டாதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது இல்லை.
தனியார் துறை மற்றும் தனி நபர் முயற்சி மற்றும் புதுமை வழிகளில் படித்தவர்கள் ஈடுபடலாம். 

அரசிற்கு எங்கிருந்து பணம் வருகின்றது? குறிப்பாக வரிப்பணத்தில் இருந்து.
வரிப்பணம் எங்கிருந்து வருகின்றது ? பல வழிகள், அதில் ஒன்று உழைப்பவர்கள் செலுத்தும் வரி.  தனியார் துறை வளர்ச்சியே அரச திறைசேரியை நிரப்பும். 

இலங்கை அரசுக்கு கிடைக்கும் வரி சர்வதேச கடனின் வட்டிக்கு தான் போதுமானது. அரசிற்கு மேலதிக பணம் மேலதிக கடன்களகவும் நாட்டின் வளங்களையும் நிலங்களையும் விற்பதிலும் இருந்தே வருகிறது.

இந்த உதவாக்கரை பட்டதாரிகள் தமது மோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தில் பெட்டிக்கடை போட்டால் தமக்கும் வேலை பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

HNDA, மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர் நியமனத்தினுள் புறக்கணிக்கபட்டமையை கண்டித்தும்,பாக பிரிப்பினையை கைவிட்டு அனைத்து பட்டதாரிகளுக்கும் இவ் ஓருடத்துள் நியமனம் வழங்க வலியுறுத்தியும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமல் தலமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு போன்றவற்றின் ஒழுங்குபடுத்தலில் (27.07.2019) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

67405802_681446735691988_650286129969574

அத்தோடு இன்றயதினம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சில் 29.07.2019 அன்று இப் பிரச்சனை சம்பந்தமாக மகஜர் ஒன்றும் கையளிப்பதற்காக பட்டதாரிகளது கையெழுத்தும் பெறப்பட்டுள் மை குறிப்பிடத்தக்து.

67135457_2429838570439068_56951076722153

https://www.virakesari.lk/article/61315

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Jude said:

 

இந்த உதவாக்கரை பட்டதாரிகள் தமது மோட்டார் சைக்கிள்களை விற்று கிடைக்கும் பணத்தில் பெட்டிக்கடை போட்டால் தமக்கும் வேலை பெற்று மற்றவர்களுக்கும் வேலை கொடுக்க முடியும்.

வன்மையாக கண்டிக்கின்றேன் .....பட்டதாரிகளை உதாவாக்கரை என்று குறிப்பிட்டமைக்கு😄.....அத்துடன் எல்லோரும் பெட்டிக்கடை போட்டால் யார் வாடிக்கையாளர்கள்.....ஏற்கனவே யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் எல்லாம் கடை தொகுதிகளாக நிரம்பிருக்கின்றது...

Link to comment
Share on other sites

On 7/26/2019 at 9:31 PM, பரியாரி said:

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர்.

இந்த பிச்சைகாரப் பட்டதாரிகள் தொல்லை நுளம்புத் தொல்லையைவிட அதிகமாக இருக்கிறது.

பாரபட்சம் பார்க்காமல் அரச வேலை வாய்ப்புக்கு கையேந்தும் இந்த பல்கலைக்கழக உள்வாரி வெளிவாரி பிச்சைகாரப் பட்டதாரிகள் ஏன் பாரபட்சம் பார்த்து க.பொ.த. உயர்தர பட்டதாரிகளையும், க.பொ.த. சாதாரணதர பட்டதாரிகளையும், ஆண்டு 5 புலமைப்பரிசில் பட்டதாரிகளையும், புறக்கணிக்கிறார்கள்?  

Link to comment
Share on other sites

4 hours ago, putthan said:

அத்துடன் எல்லோரும் பெட்டிக்கடை போட்டால் யார் வாடிக்கையாளர்கள்.....

எல்லோரும் பெட்டிக்கடை போட்டிருப்பவர்கள் அல்லரே? இன்றைய வேலை வாய்ப்புள்ள பட்டதாரிகள், வேலை வாய்ப்புள்ள பட்டமற்றவர்கள், மாணவர்கள், ஓய்வு பெற்றவர்கள் ... இப்படி பலரும் பெட்டிக்கடை வாடிக்கையாளராவர். மேலும் எல்லா பெட்டிக்கடைகளிலும் எல்லா பொருட்களையும் விற்கும் அளவுக்கு பெட்டிக்கடைகள் பெரியவை அல்ல. ஆகவே பெட்டிக்கடை வைத்து இருப்பவர்களும் தம்மிடம் இல்லாதவற்றை மற்ற பெட்டிக்கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர் ஆவார்கள்.

4 hours ago, putthan said:

.ஏற்கனவே யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் எல்லாம் கடை தொகுதிகளாக நிரம்பிருக்கின்றது...

யாழ்ப்பாணத்து விளைநிலங்கள் வேலைவாய்ப்பை தருவதில்லை என்பதற்கு இது ஆதாரம் ஆகிறதல்லவா?

மேலும் பெட்டிக்கடைகள் வேலைவாய்ப்பை பலருக்கும் தரும் என்பதையும் உங்கள் ஆதாரம் நிரூபிக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.