Jump to content

Unconditional Love


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Unconditional Love

 
‘கொன்னுட்டேன்’ - அவளுக்கு வழங்கப்பட்ட காபியில் ஒரு மிடறு உறிஞ்சியபடி சொன்னாள். எனக்கு முன்பாக இருந்த தேநீரை இன்னமும் உறிஞ்சத் தொடங்காமல் வைத்திருந்தேன். அந்தச் சொல்லை, மிக இயல்பாக- கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கை தவறி சிதறடிக்கும் போது இருக்கும் பதற்றம் கூட அவள் வார்த்தைகளில் இல்லை. 
 
வடபழனி சிக்னலில் இருக்கும் இந்த தேநீர் கடையில் அரை மணி நேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துணிப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வந்தவளைக் கடைசியாகப் பார்த்தது. அப்பொழுதும் கூட அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. சிரித்து, சில கணங்கள் நல விசாரிப்புக்குப் பிறகு அதே புன்னகையுடன் விலகிக் கொண்டோம். அதன் பிறகு இன்றுதான் - அவளாகவே அழைத்திருந்தாள். குழந்தையின் படிப்பு, கணவனின் வேலை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அவளும் வேலைக்குச் செல்கிறாளாம். அது எனக்கு புதிய செய்தி.
 
‘என்கிட்ட  என்னவோ சொல்லணும்ன்னு சொன்ன?’ என்று ஆரம்பித்தேன். 
 
‘மனசு நிறைய இருக்கு...ஏதேதோ சொல்லணும்ன்னு நினைச்சேன்...ஆனா ஒண்ணுமில்ல...’ என்று சொல்லிவிட்டுத்தான் மற்றவற்றைப் பேசிக் கொண்டிருந்தாள். பெண்கள் பேச விரும்பவில்லையெனில் கிளறாமல் விட்டுவிடுவதுதான் சரி. பெண்களாகவே எல்லைக் கோடுகளை அழித்து மாற்றி மாற்றி வரைய அனுமதிக்க வேண்டும் என்று ஏதோவொரு புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். அதுவுமில்லாமல் அவளுக்கும் எனக்கும் பெரிய பந்தம் எதுவுமில்லை. சில ஆண்டுகளாக அறிமுகம் உண்டு. ஏதோவொரு ஈர்ப்பு என்பதைத் தாண்டி எதுவுமில்லாத தொடர்பு. சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறாள். அவை முக்கியமான விஷயங்கள் என்று நம்பியிருக்கிறேன். 
 
மனம் உணர்ச்சிகளால் நீர் நிறைந்த பலூனைப் போல ததும்பிக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு கை நீண்டு அதில் ஊசியால் குத்திவிட வேண்டும் என நினைப்பதுதானே மனித இயல்பு? எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும் சுமந்து கொண்டே திரிய முடிவதில்லை. அப்படித்தான் அவள் இன்று என்னை அழைத்திருக்க வேண்டும்.
 
திடீரென ‘ஏமாத்திட்டான்...’ என்றாள். திருமணமான பெண்ணொருத்தி அப்படிச் சொல்லும் போது கணவனை நினைப்பதுதானே இயல்பு.
 
அந்தத் தருணத்தில் அவளிடம் என்ன சொல்ல வேண்டுமென உடனடியாக முடிவெடுக்க முடியவில்லை. அவளது கண்களை மட்டும் பார்த்தபடியே தேநீரை எடுத்து உறிஞ்ச எத்தனித்தேன். கண்கள் கசிந்திருந்தன. அழுகையை மறைத்துக் கொள்ள முயற்சித்தாள். போலியாகப் புன்னகைத்தாள். கைகள் அவசரமாக டிஸ்யூ பேப்பரை எடுத்தன. கீழ் இமைகளில் ஓரமாக ஒத்தியெடுத்தாள்.
 
‘பொண்ணு எப்படி இருக்கா?’
 
‘நல்லா இருக்கா..பாட்டி வீட்ல’
 
‘ஹஸ்பெண்டா ஏமாத்தினது?’
 
‘இல்ல...அவர் ஊர்ல இருக்காரு....’
 
‘........’
 
‘அண்டர்ஸ்டேண்டிங் இல்ல...நிறைய சந்தேகம்..வெளிய கூடப் போகக் கூடாதுன்னு’
 
‘அப்போ...ஏமாத்திட்டான்னு சொன்னது?’
 
‘எங்க ரெண்டு பேருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் இல்லன்னு அவனுக்குத் தெரியும்’
 
‘வேற ஒருத்தனா?’ என்று வெளிப்படையாகக் கேட்கத் தேவையிருக்கவில்லை.
 
‘பொண்ணு உடையுற போதெல்லாம் அவளுக்கு சாஞ்சுக்க ஒரு தோள் தேவைப்படுது...பெரும்பாலும் தோள் கொடுக்கிறவனுக்கு அவ உடம்புதான் தேவைப்படுது’- இப்பொழுது தேநீரை உறிஞ்சியிருந்தால் புரை ஏறியிருக்கும். அதே மாதிரியொரு தோளை எதிர்பார்த்துத்தான் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
 
வழக்கமான ‘ஆல் பர்ப்பஸ் அங்கிள்’ ஒருத்தனின் கதையாகத்தான் அது இருந்தது. அவனுக்கு இவள் ஒருத்தி மட்டுமில்லை- பல தோழிகள். அதை இவள் புரிந்து கொள்ளும் போது நிலைமை கை மீறியிருக்கிறது. 
 
‘எனக்கு அவனின் காதல் தேவையாக இருந்தது...Unconditional Love...எனக்கு மட்டுமேயான காதல்’- சலிப்பேற்றக் கூடிய இந்த வசனத்தை அவள் சொல்ல, இனி இந்த உரையாடலை முடித்துக் கொள்ள வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்த போதுதான் ‘கொன்னுட்டேன்’ என்றாள்.
 
ஒரு வினாடி உலகமே ஸ்தம்பித்துப் போனதாக உணர்ந்தேன். காதல், காமம், கொலை என எல்லாமே எவ்வளவு எளிதாகிவிட்டது? அதை தைரியமாக என்னை வேறு அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். காவல்துறையினர் விசாரிக்கும் போது ‘இவன்கிட்ட எல்லாத்தையும் எப்பவோ சொல்லிட்டேன்’ என்று கை நீட்டினால் என் கையை முறித்து தோளில் தொட்டில் கட்டிவிடுவார்கள். 
 
அதற்குமேல் அவளிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவள் இத்தோடு நிறுத்திக் கொண்டால் போதும் என்றுதான் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தேன்.  அவளாகப் பேசி முடிக்கும் வரைக்கும் குறுக்குக் கேள்வி கூட கேட்காமல், அதே சமயத்தில்  எந்தவிதத்திலும் வார்த்தைகளைச் சிந்திவிடாமல் கவனமாக உரையாடலை முடித்துவிட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது.

அவளது அவனது விவகாரங்கள் தெரிந்த பிறகு, ஒன்றிரண்டு சண்டைகளுக்குப் பிறகு, காதலை முறித்துக் கொண்ட பிறகு, தனது செல்போன் எண்ணை மாற்றிக் கொண்ட பிறகு, இப்படி பல பிறகுகளுக்குப் பிறகு, ஃபேஸ்புக், ட்விட்டர் என சகலத்திலும் அவனை ப்ளாக் செய்து வைத்திருந்தாள். போலியான கணக்குகளைத் தொடங்கி அவனைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கணக்குப்படி நூற்றி நாற்பத்து ஏழு நாட்கள். மனம் கொந்தளித்துக் கொண்டேயிருந்தது. அவனது லீலைகள் தொடர்ந்தபடியேதான் இருந்தன. நூற்றி நாற்பத்தியேழாவது நாள் ஆடி கிருத்திகை நட்சத்திரத்துக்கு முந்தைய நாள் அவளைத் தேடி அலுவலகத்துக்கு வந்துவிட்டான். அவன் மீதான வஞ்சகம் தலை முழுவதும் நிறைந்திருந்தது. இடைப்பட்ட காலத்தில் அவன் தன்னை நோக்கி வருவான் என்றும், வரும் போது கொன்றுவிட வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தாள். அதற்கான திட்டமிடலையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
 
அத்தனை நாட்களுக்குப் பிறகாக அவனைப் பார்த்த போது எந்த பதற்றமுமில்லை. சாலையின் முனையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்கள்.
 
‘மகாதேவ மலைக்கு கிளம்பிட்டு இருக்கேன்...’
 
‘அது எங்க இருக்கு?’
 
‘குடியாத்தம் பக்கம்’
 
‘நானும் வரலாமா?’
 
‘ஒண்ணும் பிரச்சினையில்லையே’
 
‘ம்ம்...உனக்காக’
 
‘நாலு மாசம் என்னைத் தெரியலையா?’
 
‘தெரிஞ்சுது’
 
‘மத்தவங்க சலிச்சு போய்ட்டாங்களா?’
 
அவன் பதிலேதும் சொல்லவில்லை. 
 
‘ஆறேகால் மணிக்குக் கிளம்புவோம். உன் ஃபோன் வேணும்’ என்றாள்.
 
‘ஃபோன் எதுக்கு?’ என்று கேட்க விரும்பினான். வெகு நாட்களுக்குப் பிறகான சந்திப்பு அது. அவள் துரத்திவிடுவாள் என்றுதான் நினைத்து வந்திருக்கக் கூடும். அவள் தன்னோடு வர அனுமதித்ததை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அத்தனை ஆப்களும் பயோமெட்ரிக் லாக் செய்யப்பட்டிருக்கிறது. நம்பிக் கொடுத்தான். 
 
வாங்கியவள் ‘கோயம்பேட்டுல பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை. ‘ஆறேகால்...வேலூர் வண்டி நிக்குற இடம்’. 
 
சாலை திரும்பியவுடன் அவன் மறைந்து போனான். மெட்ரோ ரயிலில் ஏறியவள் கிண்டியில் அவனது செல்போனை அணைத்தாள். நங்கநல்லூர் சாலையில் இறங்கி ஏதோவொரு சாக்கடையில் வீசிவிட்டுத் திரும்பவும் மெட்ரோவில் கோயம்பேடு வந்து நின்றாள்.
 
ஆறேகாலுக்கு அவனும் அங்கிருந்தான். அவன் கையில் பை எதுவுமில்லை.
 
‘வீட்ல சொல்லல..துணி கூட எடுத்துக்கல...என் ஃபோன் எங்க?’
 
‘ஆபிஸ்ல வெச்சுட்டு வந்துட்டேன்....என்கிட்டவும் ஃபோன் இல்ல..ரெண்டு நாளைக்கு அதைப் பத்தி யோசிக்காத...எனக்கே எனக்காக ரெண்டு நாளைக் கொடு...அது போதும்’ அவனுக்கு கை முறிந்தது போலிருந்தது. 
 
வேலூரை அடைந்த போது மகாதேவமலைக்கு செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது.
 
‘ஊர் பேரே புதுசா இருக்கு...என்ன மாதிரியான ஊரு அது? தங்க இடம் இருக்கா?’
 
‘கோவில்தான்...அங்கேயே படுத்துக்கலாம்’
 
‘என்னை பக்திமான் ஆக்கப் போறியா?’ அவள் சிரித்து வைத்தாள்.
 
நேற்றிரவு மழை பெய்திருக்கிறது. இரவு பத்தே முக்கால் மணிக்கு மலையை அடைந்தார்கள். விடிந்தால் ஆடி கிருத்திகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அங்கங்கே ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
 
இருவரும் ஆள் அரவமற்ற இடமொன்றைத் தேடி அமர்ந்தார்கள். என்னென்னவோ பேச வேண்டும் என அவளுக்குத் தோன்றியது. எதுவும் பேசவில்லை. பேசுவதில் அர்த்தமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தாள். 
 
‘இப்படி உம்முன்னு இருக்கத்தான் கூட்டிட்டு வந்தியா?’
 
‘உன் பர்ஸைக் கொடு...பையில் வெச்சுக்கலாம்’- பதில் பேசாமல் கொடுத்தான். அவனிடம் வேறு எதுவும் அடையாளமிருப்பதாகத் தெரியவில்லை. கருப்பு டீஷர்ட், ஜீன்ஸ் அணிந்திருந்தான். 
 
ஒரு பெண் தான் செய்த கொலையை விவரிப்பதை கேட்கும் சூழ்நிலை எந்த ஆணுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். அவள் சொல்லச் சொல்ல, அவளது திட்டமிடலும் நேர்த்தியும் என்னை சில்லிடச் செய்திருந்தன. எனது கண்கள் நிலைகுத்தியிருந்தன.
 
‘தள்ளிவிட்டுட்டேன்’ என்றாள். 
 
எந்தச் சத்தமுமில்லாமல் விழுந்தான். அதே இடத்தில் வெகுநேரம் அமர்ந்திருந்தாள். நள்ளிரவு நெருங்க நெருங்க காவடியோடு ஆட்கள்  மலை மீது ஏறிக் கொண்டிருந்தார்கள். இருள் செறிந்து கிடந்தது. கீழே குனிந்து பார்த்தாள்.  சலனமற்று அமர்ந்திருந்தாள். நள்ளிரவு கடந்து மழை பெய்தது. யாரோ ஒரு பெண்  ‘மழையில நனையாத..கோயிலுக்குள்ள போய்டு’ என்றாள். அவளுக்கு அவ்விடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை. கோவிலை விட்டு வெளியே வந்தாள். அதிகாலையில் முதல் பேருந்து கோவிலை விட்டுக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதல் பூஜை முடிந்திருக்க வேண்டும். பேருந்தில் கூட்டம் நிறைந்து. 
 
‘இதை என்கிட்ட எதுக்கு சொன்ன?’ என்றேன்.
 
அவள் எதுவும் சொல்லவில்லை. 
 
வீட்டுக்குக் கிளம்பினோம். மனம் படபடத்துக் கொண்டேயிருந்தது. அறைக்கு வந்து சேர்ந்த போது ‘தேங்க்ஸ்’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள். பதில் எழுதாமல் அவளது எண்ணை ப்ளாக் செய்துவிட்டேன். 
 
பல நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. மகாதேவமலையில் ஏதேனும் பிணம் கிடைத்ததா என்றோ சென்னையில் காணாமல் போன ஆள் ஒருவனைப் பற்றி ஏதேனும் விசாரிக்கிறார்களா என்றோ செய்திகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.