Jump to content

பிரபாகரன் பெயரை சொல்லக்கூட உங்களுக்கு தகுதியில்லை! டக்ளஸ் கடும் ஆதங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா?

இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்த மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி நீங்கள் உரையாற்றியிருந்தீர்களா இல்லையா?..

அதைவிடவும், புலிகளின் தலைமை இல்லாதொழிந்த போது மனிதநாகரீக பண்புகளை அடகு வைத்து நீங்கள் விருந்து படைத்து வெற்றி விழா கொண்டாடியது உண்மையா இல்லையா என்று கேட்கிறேன்.

புலிகளின் தலைமையை அரசியல் ரீதியாக மட்டும் விமர்சித்து வந்த நாங்கள் கூட நீங்கள் செய்தது போல் ஒரு அசிங்கமான, அநாகரீகமான இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.

நீங்கள் நினைத்திருந்தால் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம். ஆனாலும் அதை நீங்கள் விரும்பியிருக்கவில்லை. வன்னியை நோக்கிய படை நகர்வு நடந்த போது பணப்பெட்டி அரசியலும், சவப்பெட்டி அரசியலும் சேர்ந்து உங்களில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தீர்கள்.

அழிவு யுத்தத்தை நிறுத்தி மக்களை காப்போம் வாருங்கள் என்று நான் உங்களிடம் தனித்தனியாகவும், பகிரங்கமாகவும் கேட்டிருந்தேன். நீங்கள் வரவில்லை.

எனது அழைப்பை ஏற்று நீங்கள் வந்திருந்தால் அன்று முள்ளிவாய்க்காலில் புலி சிங்க யுத்தத்தின் நடுவே அகப்பட்டு எமது மக்கள் குருதியில் சரிந்து மடிந்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சுலாபங்களுக்காக அடிக்கடி உச்சரிக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட இன்று உயிருடன் இருந்திருப்பார்.

முள்ளி வாய்க்கால் அழிவுகள் நடந்த போது உங்களிடமிருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவராவது உங்கள் நாடாளுமன்ற பதவிகளை துறந்து எதிர்ப்பை தெரிவித்தீர்களா? இல்லை.

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.

ஆகவே புலிகளின் தலைவர் பிரபாகரனின் இழப்பிற்கு மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் இழப்பிற்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள். சவப்பெட்டி அரசியல் வாதிகளும். பணப்பெட்டி அரசியல் வாதிகளுமே.

கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போக நினைப்பது போல், ஒரு கல்முனை விவகாரத்திற்கு கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்பு குறித்து இந்த சபையில் பேச விளைந்திருப்பது தமிழ் மக்களையும் ஏமாற்றி உங்களையே நீங்களும் ஏமாற்றும் செயல் என்றே தமிழ் மக்கள் இன்று பேச தொடங்கியுள்ளார்கள்.

முப்பது வருடங்களாக போராடி எதை சாதித்தீர்கள் என்று கேட்டு எமது விடுதலை இயக்கங்களின் களமுனை தியாகங்களை கொசைப்படுத்தினார் உங்கள் தலைவர்களில் ஒருவர்.

அப்போதாவது நீங்கள் அது குறித்து உங்கள் தலமையை நோக்கி ஒரு கேள்வி எழுப்பியிருந்தால் அந்த முப்பது வருட போராட்டத்தில் ஈடுப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை நீங்கள் உச்சரிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அர்த்தப்படும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.tamilwin.com/parliment/01/221612?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரடியே...  காறித் துப்பி  விட்டது.  இதுக்குப் பிறகும்.... 

ஹ்ம்ம்...  "சுடலை யானம்" என்று... இதை சொல்வார்கள்.
டக்ளசிற்கு வந்த...  புத்தி,  சம்பந்தன், சுமந்திரன் கோஸ்ட்டிகளுக்கும்...   
வரும் நாள், நெருங்கிக் கொண்டு உள்ளது.

அந்த நேரம்.... உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள்.....
பேச்சு, மூச்சு... இல்லாமல் அடங்கிப் போய் இருப்பார்கள்.

விளக்குமாறு.... அரசியல் செய்ததால்... வந்த வினை, இது.  

Link to comment
Share on other sites

டிலானில் இருந்து டக்ளஸ் வரை பிரபாகரனின் பெயரை உச்சரித்து அரசியல் செய்ய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிளசும் தன் கடமைக்கு புலிகளை தொட்டு பேசியிருக்கிறார். நல்ல விடயமொன்றை சொல்லியிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளுக்கு  காலம்கடந்து ஞானம்வருவது  வாஸ்தவம் தான். ஆனால் இதை நான் டக்கிளசின் தேர்தல் உத்தியாகதான் பார்க்கிறேன். அவர் விடுதலைப்புலிகள் பற்றி மனம் திருந்தியதாகவோ படிப்பினை பெற்றுக்கொண்டதாகவோ சொல்லமுடியாது ஏனெனில் அவர் எடுத்த எடுப்பிலேயே கூட்டமைப்பை சாடுவதன் மூலம் புலி அனுதாபத்தை விதைத்து தனது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்ள மக்களை திசைதிருப்பவே புறப்பட்டிருக்கிறார்போல்  தெரிகிறது. 

கூட்டமைப்பின் கையாலாகத்தனத்தையும்  அதன் மக்கிப்போன அரசியல் சாணக்கியத்தையும் தூசுதட்டி காட்டுவதால் தான்செய்த அடாவடிகளையும் இனத் துரோகத்தையும் தமிழினத்திற்கு மறைக்கப் பார்க்கிறார். ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து மந்திரி பதவிகளை வைத்துக்கொண்டிருந்து செயற்பட்ட டக்கிளஸ் இனத்திற்காக செய்வதற்கு பல இருந்தும் சந்தர்ப்பங்கள் தவறவிட்டது உண்மை. அந்த காலக்கட்டத்தில் மற்றைய தமிழ் கட்சிகளை இணைத்து செயற்படுபவராக காட்டிக்கொள்ளவுமில்லை. ஆகவே அவர்கள் செய்திருந்தால் நானும் செய்திருப்பபேன் என்று இப்போது சொல்வது அபத்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் அப்படித்தான் அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் அதனை சுட்டிக்காட்டும் நீங்கள் எப்படி ஊருக்குள் ரொம்ப யோக்கியமோ?

பிரபாகரன் ஒரு  கொலைகாரன், புலிகளின் உயிர் கொடைகளை தியாகம் என்றெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது,

புலிகள் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பினால் நான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று காலம் முழுவதும் கூவி கூவியே வயிற்று பிழைப்பு அரசியல் செய்தவர் நீங்கள் ,

நீங்கள் ஒருகாலம் ஆசைப்பட்டபடி இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை நீங்கள் ஏன் அரசியலைவிட்டு ஒதுங்கவில்லை  செயலாளர் நாய்அகம் அவர்களே? 

பிரேமதாஸ காலத்திலிருந்து மஹிந்த காலம்வரை   ..விடுதலை போராட்டம் என்ற ஒன்றை சிங்களவர்களுடன்  தோளோடு தோள் நின்று  பயங்கரவாதமாக காண்பித்ததற்கு கையூட்டாய்   பெட்டி பெட்டியாய் பணமும், மது மாது என்று காலம் முழுவதும் கை நீட்டி எச்சில் சோறு வாங்கி தின்று ஏப்பம் விட்டவர்கள் நீங்கள்,

  உங்களுக்கு மட்டும் புலிகள் பற்றியும் அதன் தலைவர் பற்றியும்  அவர்கள் அழிவுபற்றியும்  நெகிழ்ந்துபேசும் யோக்கியதையை யார் தந்தது?

நீங்கள் ஒருகாலம் ஆசைப்பட்டபடி இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை நீங்கள் ஏன் அரசியலைவிட்டு ஒதுங்கவில்லை  செயலாளர் நாய்அகம் அவர்களே?

புலிகள் பற்றியும் அவர்கள் போராட்டம்,தலைமை,தியாகம்பற்றி பேச இன்று இலங்கையில் தமிழர் சார்பில் அரசியல் செய்யும் எவருக்கும் உரிமையில்லை நீங்களுட்பட.

காலம் சிறிது நகர்ந்து சென்றால் எப்படியெல்லாம்  பிணம் தின்னி கழுகுகள் மயில் வேஷம் போட்டு தங்களை அழகாக காண்பிக்க முயற்சி செய்கின்றன.

என்ன செய்வது அதனையும் நம்புவதற்கு நம்மில் நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து சொன்ன அனைவரும் டக்கி செய்த ஆள்கடத்தல் கொலைகளை எல்லாம் மறந்திட்டியள் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியன்!!!  புலிகளை அழிச்ச சந்தோசத்திலை  மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தேக்கை எங்கை போச்சுது புத்தி????

Ãhnliches Foto

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கூறியதை இன்று உணர்கின்றார்கள்.

Bild

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது  போல், புலிகளுக்கு எதிரான போர் அன்று, இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்:

தமிழீழ தேசியத் தலைவர்
   மேதகு வே. பிரபாகரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

அவ்வாறு நீங்கள் உங்கள் பதவிகளை துறந்திருந்தால் 23 வது நாடாளுமன்ற உறுப்பினராக நானும் ஒருவனாக எனது பதவியை துறந்திருப்பேன்.

விழுந்து விழுந்து சிரிக்க வைத்த பகிடி காலையில எழும்பி இரவு படுக்கபோகுமட்டும் கூட்டமைப்பை திட்டினாலும் அடித்து பிடித்தாலும் அண்ணன் தம்பி பார்வைதான் இவர் சைக்கிள் கப்புக்குள்  பிளேன் பறக்க விடுறார் .

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

குத்தியன்!!!  புலிகளை அழிச்ச சந்தோசத்திலை  மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தேக்கை எங்கை போச்சுது புத்தி????

Ãhnliches Foto

தேர்தல் அண்மிப்பதால் தமிழினப் படுகொலைகாரகளின் கைக்கூலிகள் தங்களுக்குள் யார் மேலானவர் என்று காட்ட தங்களை ஆன்மீகவாதியாக, அதாவது உலகத் தமிழினம் போற்றும் தேசியத் தலைவர் பிரபாகரனைப்  போற்றுபவர்களாக, வேடம் போடுகின்றனர்!

Link to comment
Share on other sites

மகிந்தவும் ரணிலும் ஆளுக்காள் 180 பாகையில் நின்றாலும் எப்போதும் தமிழினத்துக்கு 90 பாகையில் தான் நிற்பர். அவர்கள் இதுவரை தங்களின் பாதையில் இருந்து துளியும் திரும்பவில்லை.

தமிழரசுக்கட்சியின் கைக்கூலிப் பட்டாளம் சிங்களக் கொலைகாரக் கும்பல் ஒன்றினது தலைவன் ரணிலுடன் 0 பாகையில் நிற்கும் போது இன்னொரு சிங்களக் கொலைகாரக் கும்பல் ஒன்றினது தலைவன் மகிந்த 180 பாகையில் தான் நிற்பார்.

தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறி தேர்தலில் வெற்றிபெற்ற தமிழரசுக்கட்சியின் கைக்கூலிப் பட்டாளம் தான் 90 பாகை திரும்பி ரணிலுடன் பிச்சையெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.