Jump to content

குறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? என்ன சொல்கிறது மருத்துவம்


Recommended Posts

மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுவதற்காக ஓர் இளம் தம்பதி வந்திருந்தனர். `குழந்தையின்மையால் மனஉளைச்சலுக்கு ஆளான தம்பதியோ...?' என்று நினைத்து அவர்களிடம் பேச ஆரம்பித்த மருத்துவரிடம், `குறட்டைப் பிரச்னை தொடர்பாக ஆலோசனைபெற வந்திருக்கிறோம்' என்றனர். `கணவர் குறட்டை விடுவதால் பெரும் தொல்லையாக இருக்கிறது' என்கிறார் மனைவி. கணவரோ, `நான் குறட்டை விடவே இல்லை' என்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளில் குறட்டைப் பிரச்னை விவாகரத்துவரை செல்கிறது. அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஆனால், நம் ஊரில்...?

குறட்டை என்பது தீர்வுகாண முடியாத நோயா?', `இல்லவே இல்லை... தீர்க்கக்கூடியதுதான்' என்கிறது மருத்துவம்.

32 வயதாகும் எனக்கு இவ்வளவு நாள் குறட்டை பிரச்னை வந்ததில்லை. கடந்த ஒரு மாதமாக தூங்கும்போது குறட்டை வருகிறது. இது எதனால்? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?' என்று #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் ரூபிணி என்ற வாசகர். அவரது கேள்வி மற்றும் சந்தேகத்துக்குப் பதிலளிக்கிறது இந்தக் கட்டுரை.

`குறட்டைப் பிரச்னை ஏற்படக் காரணம் என்ன, அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்' என்று காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகரிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

``குறட்டைப் பிரச்னை என்பது வயதானோருக்கு மட்டுமே வரும் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது இளம்வயதினருக்கும் வர வாய்ப்புள்ளது. தூக்கத்தின்போது சுவாசக்கோளாறு காரணமாக ஏற்படுவதே குறட்டை. மேலைநாடுகளைவிட நம் நாட்டில்தான் அதிக சதவிகிதம் பேர் குறட்டையால் பாதிக்கப்படுகின்றனர். குறட்டைவிடும் பலர் மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதுடன், `தான் குறட்டையே விடுவதில்லை' என்றும் மறுத்துப்பேசுவார்கள். குறட்டை விடுபவர்களின் தூக்கம் ஆரோக்கியமானது அல்ல என்பதை நாம் அறிய வேண்டும்.

 

குறட்டை எதனால் வருகிறது?

நாம் ஒவ்வொருமுறை சுவாசிக்கும்போதும் உள்ளே செல்லும் காற்று மூக்கு முதல் நுரையீரல் வரை பயணம் செய்கிறது. அந்தப் பயணத்தின்போது ஏற்படும் தடங்கல்தான் குறட்டையாக வெளிப்படுகிறது. நாம் தூங்கி ஓய்வெடுக்கும்போது தொண்டைத் தசைகளும் ஓய்வெடுக்கின்றன. அதனால் மூச்சுப்பாதையின் அளவு குறுகிவிடும். அப்போது தளர்வுநிலையில் உள்ள நாக்கும் உள்வாங்கி, காற்று செல்லும் பாதையை மேலும் குறைத்து குறட்டைச் சத்தமாக வெளிப்படும். உடல்பருமன், தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு, டான்சில், அடினாய்டு மற்றும் தைராய்டு பிரச்னைகள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், சைனஸ் போன்றவை இதன் காரணிகளாகும்.

காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகர்
 
காது மூக்கு தொண்டை நிபுணர் எம்.கே.ராஜசேகர்

மூச்சுப்பாதை குறுகுவதால் பிராணவாயு குறைவாகவே உள்ளே செல்லும். இந்தக் குறையை சரிசெய்ய இதயம் மிகவேகமாகத் துடிக்கும். அப்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். குறட்டை விடுவதால் இந்தநிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

 

குறட்டையை தடுக்கும் வழிமுறைகள்!

  • படுத்துக்கொண்டு டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • உடற்பயிற்சிசெய்து உடலைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

  • சளித் தொந்தரவு, மூக்கடைப்பு இருந்தால் தூங்கச் செல்வதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் வேது (ஆவி) பிடிப்பது நல்லது.

  • உறங்கும்போது ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

  • இரவில் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

  • குறட்டையைத் தவிர்க்கும் மருத்துவ உபகரணமான `கன்டினியஸ் பாசிட்டிவ் ஏர்வே பிரஷர்' (Continuous positive Airway pressure - CPAC) என்ற கருவியை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

இவைதவிர, குறட்டைப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை முறைகளும் உள்ளன. எனவே, குறட்டைப் பிரச்னை நீடித்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி அவரது அறிவுரைப்படி செயல்பட்டால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். குறட்டையிலிருந்து நிரந்தரத் தீர்வு காண்பது சாத்தியமே'' என்கிறார் டாக்டர் எம்.கே.ராஜசேகர்.

https://www.vikatan.com/health/healthy/how-to-stop-snoring-causes-aids-remedies-and-solutions

Link to comment
Share on other sites

On 7/27/2019 at 1:21 PM, ampanai said:

குறட்டைவிடும் பலர் மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதுடன், `தான் குறட்டையே விடுவதில்லை' என்றும் மறுத்துப்பேசுவார்கள்.

மறுத்துப்பேசினால் வீடியோ எடுத்துப்போட்டுக்காட்டுங்கள். 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.