Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவ்வளவு சந்தொசமான செய்தி.

வானூர்தி எதிர்ப்பு பிரிவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='{கரன்}' டடெ='ஆப்ர் 30 2007, 02:58 PM' பொச்ட்='294726']

சில புகைப்படங்கள் உள்ளது பாருங்கள்

[உர்ல்=க்ட்ட்ப்://னிதர்சனம்.cஒம்/?அர்ட்=22716]நிதர்சனம்[/உர்ல்]

[/ஃஉஒடெ]

தயவுசெய்து ஊடகங்களை விளம்பர பொருளாக மாற்றாதீர்கள்.. இந்த தாக்குதலின் பின்னணியில் மறைந்து கிடக்கும் அந்த போராளிகளின் உழைப்பை இவ்வாறு நவீன ரக தானியங்கி தொழிற்நுட்ப படங்களை போட்டு கேவலப் படுத்தாதீர்கள்..

இது முழுக்க முழுக்க போராளிகளின் குறி பார்க்கும் தன்மைதான் காரணம்

Link to comment
Share on other sites

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

Link to comment
Share on other sites

யாழில் மீண்டும் வான் புலிகளின் விமானங்கள் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டதாக ஒரு செய்தி கூறுகிறது . இது உண்மையா?

இப்ப அங்கே விடிஞ்சிருக்கும்தானே! செய்தி ஒன்றையும் காணேல்லையே?

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

Link to comment
Share on other sites

COLOMBO - The new capability of the Tamil Tigers to carry out airborne attacks has not only made them a rarity among the world

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

வணக்கம் வாருங்கள், பார் எல்லாம் பூட்டினால்தான் யாழ் பக்கம் வருவீங்கள் போல இருக்கு :D பேசாம ரோட்ல பொற ஒருத்தன உருட்டுக் கட்டையால பொட்டுட்டு அவன் வச்சிருக்கு துப்பாக்கிய எடுத்து வச்சுக்கோங்க :D

Link to comment
Share on other sites

மீண்டும் யாழில் ஒரு நல்ல செய்தியுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியாக இருக்குது ஆனா இஞ்சை இந்த ஒட்டுப்படைகளின் அட்டகாசத்தின் மத்தியின் எதுவும் வாயை திறந்து கதைக்க வயித்தாலை போகுது........ சா......தமிழனுக்கு சிங்களவன் எதிரி எண்டு நீங்கள் எழுதுகிறீங்கள் ஆனா ஊரிலை (அரசுகட்டுப்பாடு இடங்களில்) சிங்களவனை விட தமிழனுக்கு தமிழன்தான் கொள்ளி வைக்கிறான் ஏதோ வாயை மூடித்திரியும் எமக்கு இப்பிடியான செய்திகள் மகிழ்சியை கொடுத்தாலும் அதை வீட்டுகுள்ளையே இருந்து கொண்டாட வேண்டியிருக்கு எதுக்கு சொல்லுறன் எண்டா வெசாக் எண்டு 5நாளுக்கு "பார்" எல்லாத்தையும் மூடிப்போட்டாங்கள் குறுக்காலை போணவங்கள்

மீனும் வாங்க முடியாதே மார்கட் பூட்டி இருக்குமே

Link to comment
Share on other sites

அரசின் குண்டுவீச்சு "மிக்' விமானத்தை

சுட்டு வீழ்த்தியதாகப் புலிகள் அறிவிப்பு

ஆனால் அரசு அடியோடு மறுப்பு

கொழும்பு,மே1

அரச விமானப்படைக்குச் சொந்தமான "மிக் 27' ரக குண்டுவீச்சு விமானத்தை தமது விமான எதிர்ப்பு அணியினர் நேற்றுப் பிற்பகல் சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகள் அறி வித்துள்ளனர்.

எனினும் இத்தகவலை அரச விமானப்படை வட்டாரங்கள் அடியோடு மறுத்திருக்கின்றன.

இரணைமடுவில் அமைந்துள்ள தமிழீழ வான்படையின் ஒடு தளத்தின்மீது குண்டு வீசுவதற்காக நேற்றுப் பிற்பகல் 2.30 மணி யளவில் அரசின் "மிக் 27' ரக விமானம் அந்தப்பகுதியை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, தமது தானியங்கி விமான எதிர்ப்பு முறை (அதtணி ச்ஞிtடிதிச்tஞு ச்டிணூ ஈஞுஞூஞுணஞிஞு ண்தூண்tஞுட்) மூலம் அது தாக்கப்பட்டது எனவும் அதன்போது குண்டுபட்ட "மிக்' போர்விமானம் பாரிய வெடிப்புச் சத்தங்களுடன் வேகமாகச் சென்று அரச கட்டுப் பாட்டுப் பகுதியிலுள்ள கடல்ஒன்றில் வீழ்ந்ததாகவும் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் "உதயனு'க்குத் தெரிவித்தார்.

கட்டுநாயக்கா விமானத்தளத்திலிருந்து வழமையான தாக்குதல் நடவடிக்கைக் காக அனுப்பப்பட்ட தமது தாக்குதல் விமானங்கள் அனைத்தும் எந்தவிதமான பாதிப்புகளுமின்றி நேற்று மாலையி லேயே தமது தளத்திற்குத் திரும்பியுள் ளன என்று இலங்கை விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

""விமானப்படையின் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டனர் என புலி கள் கூறுகின்றமையானது அவர்களின் வெறுங்கனவு. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வதந்தி'' என்று பாதுகாப்பு அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.

சர்வதேச செய்தி நிறுவனத்துக்கும் உறுதி செய்யப்பட்டது

தானியங்கி எதிர்ப்பு முறைகொண்டு ஜெற் விமானத்தை தாக்கியதாக

வான்புலிகளின் தானியங்கி எதிர்ப்புப் பிரிவு உறுதி செய்திருக்கிறது என்று விடு தலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் ஏ.எவ்.பி. செய்தியாள ருக்கு கிளிநொச்சியிலிருந்து தொலை பேசி மூலம் ஊர்ஜிதம் செய்தார் என்று அந்த நிறுவனத்தின் செய்தியாளர் தெரி வித்திருக்கிறார்.

தாக்குதலுக்குள்ளான ஜெற் விமானம் தமது பகுதிக்குள் விழவில்லை என்றும் இளந்திரையன் செய்தியாளரிடம் மேலும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் 2006 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் தொடக்கம் விடுதலைப் புலி களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், இலங்கை விமானப் படையின் ஜெற் விமானங்கள் தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை நடத்திவருகின்றன.

விடுதலைப் புலிகள் கடந்த மாதம் தொடக்கம் தாமும் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இலகு விமானங் களைப் பயன்படுத்தி இராணுவ மற்றும் கேந்திர நிலையங்கள் மீதான தாக்குதல் களை அவர்கள் கடந்த மாதத்தில் நடத்தி னர் என்றும் ஏ.எவ்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உதயன்

Link to comment
Share on other sites

பார்க்க நல்லத்தான் இருக்கு

உண்மையிலேயே இவை புலிகளினுடையதா??????

விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்

Link to comment
Share on other sites

பின்னால் உள்ள விளம்பரப்படம் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது

Link to comment
Share on other sites

படம் எங்கிருந்து பெறப்பட்டது???

நீங்களாக எடுத்துப்போட்டு இடங்களை காட்டிக்கொடுத்து விடாதீர்கள் உண்மையான படங்கள் என்றால்...................

Link to comment
Share on other sites

உண்மையான படங்கள் என்றால் அனுமதியோடு தானே வெளியிட்டிருக்கிறீர்கள்????

Link to comment
Share on other sites

இது நிச்சயம் உண்மையான படமல்ல பின்னால் இருக்கும் விளம்பரங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றது விளம்பரங்கள் இருகின்ற வகையில் அது ஒரு மக்கள் நடமாஅட்டமுள்ள இடம் இப்படி இடத்தில் எதிரிக்கு தகவல் கசியவிடப்படும் கடைசி வரை புலிகள் இப்படியான ஒரூ மோட்டு வேலையை செய்ய மாட்டார்கள்

அத்துடன் படத்தில் இருக்கும் புலி வீரர்கள் ஒட்டப்பட்டது உற்று பார்த்தால் தெட்டதெளிவாக தெரிகின்றது.மற்றது ஒரு சமச்சீரற்ற நிலத்தில் படத்தில் காட்டப்பட்ட நிலமானது ஒரு விவசாய நிலம் போல இருக்குது இப்படி பட்ட இடத்தில் விமானத்தை நிற்பாட்டிவிட்டு உடனே தேவைக்கு பறப்பில் ஈடுபட முடியாது

அத்துடன் இப்படி வெட்ட வெளியில் அனைத்து விமானக்களையும் உருமறைப்பு செய்யாமல் நிற்பாட்ட போவதுமில்லை.ஒன்றாக அனைத்து விமானங்களை தரிப்பிலிடவும் போவதில்லை

ஒருவேளை டம்மி விமானங்களாக இருக்கலாம்.ஆனால் இப்படமானது கம்பூட்டர் சித்து விளையாட்டால் மிக அற்புதமாக வடிவமைக்கபட்டிருப்பதே உண்மை

Link to comment
Share on other sites

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

முதலில் படம் இருந்தது இப்போது நிருவாகம் எடுத்துவிட்டது போல

:rolleyes:

Link to comment
Share on other sites

என்னப்பா ஆளாளுக்கு படம் படம் என்கிறியள் என்ரை கண்ணுக்கு ஒரு கோதாரியும் தெரியல்லை

மேலே இணைக்கப்பட்டிருந்த படம் நீக்கப்பட்டுள்ளது :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பர்களே.

மிக் விழுத்தியதற்கு குரவை கூவுவதை விட பிரயோசனமாக ஏதேனும் செய்ய முடியாதா? யாழின் சகோதரக்களமான ஆங்கிலக்களத்தில் செய்ய முயற்சிக்கிறார்கள்.

http://www.eelamist.com/forum/viewtopic.php?f=1&t=434

இந்த மிக் செய்த அட்டூழியங்களை இங்கே ஆவணப்படுத்துவோம். இந்த மிக்கினால் தமிழ் மக்கள் அடந்த துயரத்தை இங்கு ஆதாரத்துடன் இணையுங்கள். இணைக்கும்போது தமிழ்நெற், பிபிசீ பொன்ற தளங்களிலுள்ள செய்தியாக இருக்க வேண்டும். நன்றி.

சில உதாரணங்கள். (மேலுள்ள இணைப்பிலிருந்து)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20785

Tamilnet, BBC, Reuters, AF , international media போன்ற இடங்களிலிருந்து ஆதாரத்துடன் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம்.

சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

"மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்:

விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது.

சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன.

மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது.

இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

Link to comment
Share on other sites

:rolleyes: வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D வீழ்த்தப்பட்டது கபீர் விமானம் என்றெண்ணி செய்தி வெளியிட்டு விட்டனரோ???

அல்லது கிபீர் மற்றும் மிக் 27 இரண்டும் வீழ்த்தப்பட்டனவா???

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

*************************

சகோதரன் நெடுக்காலை போவான் அவர்களே நீங்கள் எந்தவிதமான ஆதாரத்தை எதிர்பார்க்கின்றீர்கள்? களத்திற்கு வந்தாலும் பொறுக்கி எடுத்து சில பாகங்களையாவது உங்களுக்கு காண்பிக்கலாம், ஆனால் நீங்கள் அங்கு வருவீங்களோ?

Link to comment
Share on other sites

மிக்கும் விழேல்ல கிபீரும் விழேல்ல அப்படின்னுதான் அரசு சொல்லுது. புலிகள் மட்டும் தான் ஒருதலைப்பட்சமா சொல்லி இருக்கினம்..! எதுக்கும் ஆதாரமில்ல..! புலிகள் உத்தியோகப்பூர்வமா அறிவிச்சத்தை அரசு நையாண்டி பண்ணுது..! :D:lol::rolleyes:

கொழும்புக்கு மிக் 29 திரும்பி வரவில்லை என்று அரசு கூறுகின்றது. நெடுக்ஸ்ம், அரசும் அது சுடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.அப்போ நிச்சயமாக மிக் 29 கோவிச்சுக்கொண்டோடி விட்டதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.