Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று

Link to comment
Share on other sites

இயக்கம் ஒன்று என்று சொன்னால் அதை 10 ஆக்கி,100 ஆக்கி சனத்தை முட்டாள் ஆக்குவதே வேலை. எந்த ஊடகத்திலும் வராத செய்தி என்னும் போதே தெரியவில்லையா? இது பரபரப்பின் செய்தி என்று

இதற்கு தான் சொல்லுறது தூயவன் மாதிரி அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று

:P

Link to comment
Share on other sites

காசு கொடுத்து பேப்பர் வாங்கிற ஆக்கள் இப்படியான பேப்பருக்குக்; கொடுக்கிற காசை வேறு ஒரு பேப்பருக்கு(கனடாவிலை) கொடுத்தால் கொஞ்சமாவது நன்மையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பில் வரும் உள்ளே நடந்த கதை தொடருக்கு பலர் இரசிகர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, இந்தியா அகிய நாடுகளின் இலங்கைத்திவில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் எமதுதமிழர்களின் போராட்டம் எவ்வாறு இழுபட்டுப் போகிறது என்பதனை அறியக்கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

பரபரப்புக் கனவு

:icon_idea:

சிலசமயங்களில் கனவுகள்கூட நிஜமாகவும்மிருக்கலாம் ஏனெனில் இன்று தமிழர்கள் தான் உலகிற்கு போர்கலைகளை கற்பித்துக்கொண்டுள்ளார்கள்..

......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.

Link to comment
Share on other sites

இங்கு பத்தி பத்தியாக எழுதுகிறவர்கள் ஏன் அந்தப் பரபரப்புப் பத்திரிகையில உள்ள விசயத்தைச் சுருக்கமாகத்தரக்கூடர்து. இதிலிருந்தே தெரியுது இதுக்குள்ள ஏதோ பிசினஸ் நோக்ம் இருக்குதெண்டு. பேப்பரை வாங்கிப் பார்க்கட்டுமெண்டு விட்டிடடினம்.

இது என்ன நம்ம நாட்டு ஈபீடீபீயின் தினமுரசு மாதிரி வண்ணப்பதிப்பா? பேசாமல் பரபரப்புக்குப் பதிலாக புரளி என வைத்தால் நல்லாய் இருக்கும். விடுதலைப்புலிகளே சுடப்பட்டதை உறுதி செய்யும்போது இது யாரப்பா இப்படி கதை கட்டுவது?

விது என்ன இந்த பத்திகையின் முகவர் நீரோ?

Link to comment
Share on other sites

ரிஸி மீண்டும் கற்பனை குதிரையை தட்ட விட்டு எழுதிவிட்டார் வாங்குங்கள் ஜேர்னலை பெருக்குங்கள் உங்கள் அறிவை :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளுகு என்று சொல்ல வெளிக்கிட்டால் எல்லாவற்றையும் புளுகு என்று சொல்ல முடியும். பரபப்பில் சில எதிர்வுகூறல்கள் உண்மையனா போது அதைப்புரளி என்று சொல்ல நீங்கள் யாரும் வரவில்லை. குறிப்பிட்டு சொன்னால், புலனாய்வாளர் முத்தாலிப் தொடக்கம் தானியங்கி விமான எதிர்பு கருவிகள் வரை அவர்கள் ஏற்கனவே ஊகித்து எழுதியவையே, அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை. அதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சல விசயங்களில் அவசரப்பட்டு, கருத்து வைப்பதே சிலருக்கு தொழிலாகி விட்டது. தங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்யும் போது தன்னிச்சையாக வரும் ஈகோவாக கூட இருக்கலாம்.

தினமுரசுடன், பரபரப்பை ஒப்பீடு செய்வது பொருந்துமா? தெரியாது ஆனால், ஒன்று மட்டும் சொல்ல முடியும் பரபரப்பு மேல் பலருக்கு ரொம்ப தான் எரிச்சல். பரப்பு ஜேர்னலை வாங்கி போருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒருவர் கேட்டார் என்ன "இந்தியன்ஸ் சிட புத்தகம் எல்லாம் படிக்கிறீங்க என்று" அவர் பெயரைப்பார்க்கல புத்தக வடிவை பாத்திட்டார் போல, மொத்தத்தில், இந்தியாவுக்கு வெளியே தரமான ஈழத்தமிழர்களது சஞ்சிகையாக வெளிவருது பரபரப்பு ஜேர்னல். அதை விட பரபரப்பின் விற்பனையை அதிகரிக்க, இப்பிடி செய்திகளை போட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை என்றே நினைக்கிறேன். காரணம் அவர்களது வாசகர்கள், எப்போது வாசகர்களாகவே இருப்பார்கள்...

இச் செய்தி உண்மையா பொய்யா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புலிகள் சுடப்பட்டது என்று அறிவித்தமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். என்னும் பரபரப்பின் வாதம் சரியாக கூட இருக்கலாம்.

இந்த செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய....

பொது வாக மிக் ரக விமானங்கள் தாங்குதலுக்கு உள்ளாகும் போது விமானி பாது காப்பாக தப்பித்துக்கொள்ள வழியிருக்கின்றது. எனவே குறிப்பிட்ட விமானத்தில் இருந்த விமானி எங்கே வந்திறங்கினார்? தாக்கப்பட்டது இரணைமடுவில் எனில் அவர் எந்த இடத்தில் இறங்க கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை பொதுவா யோசித்து பாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hi Guys,

You are wrong about Rishi. He is a very good Air Traffic controller. He knows very well about Air defense Technology. got it. Ningka ninaippathu poola Paraparappu Gosip paper illai.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா விமானப்படைக்கு ஈடாக தமிழ் மக்களிடமும் ஒரு மிக் விமானம் இல்லையே என்ற புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் குறையைப் போக்க, அரசின் மிக் விமானத்தையே இறக்கி புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பரிசளித்த ரிசி அவர்களின் பெருந்தன்மையை என்ன வென்று புகழ்வது.

கற்பனையின் உச்சத்தை தொட்ட இவர் ஒரு நவீன பூசலார் நாயனார்.

இவரை 64 ஆவது 'நாய'னாராக சேர்த்து இனிமேல் தொழுவோமாக.

Link to comment
Share on other sites

வீரவெலவில் 2வது விமான நிலையம் அமைக்கத் திட்டம்

சிறீலங்கா அரசாங்கம் அதிஸ்டலாபச் சீட்டு விற்பனை செய்வதன் மூலம் கொழும்பிற்கு தெற்காக 160 மைல் தொலைவில் வீரவெல பகுதியில் இரண்டாவது விமானநிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி அதிஸ்ரலாப சீட்டுகளின் விலை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் இருந்து இரட்டிப்பு மடங்காக்கப்படும் என தெரியவருகிறது.

இதன்படி இவ்வாறான அதிஸ்ரலாப சீட்டுகள் யூன்மாதத்தில் இருந்து கைத்தொலைபேசியூடாகவும் மற்றும் தொலைபேசியூடாகவும் விற்பனை செய்வதற்குரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

நவீனரக ராடர்கள் தொடர்பான இலங்கையின் கோரிக்கையை இந்தியா தீவிர பரிசீலனை

இலங்கைக்கு நவீன ரக ராடர் கருவிகளை வழங்குவது தொடர்பாகவும், ஏற்கனவே வழங்கப்பட்ட ராடர் கருவிகளை பரிசீலிப்பதற்கு நிபுணர்களை அனுப்புவது தொடர்பாகவும் இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருவதாக த ரெலிகிறாப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தரெலிகிறாப் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் முப்படை தளபதிகள், புலனாய்வுத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்துகொண்ட உயர்மட்டக் கூட்டத்திலேயே இவ்விடயம் ஆராயப்பட்டுள்ளது.

இந்தியா முன்னதாக இந்திரா 2 டி ரக ராடர்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இந்நிலையில் புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் தமக்கு இந்திரா 3 டி ரக ராடர் கருவிகளை தருமாறு இலங்கை பாதுகாப்புத்துறை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

மேலும் முன்னர் வழங்கப்பட்ட ராடர்களின் செயற்படுநிலை, வினைத்திறன் தொடர்பாக ஆராய உயர்மட்ட குழுவை அனுப்புமாறு இலங்கை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த இரண்டு ரக ராடர்களும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் வடிவமைக்கப்பட்டு பாரத் எலக்ட்றோனிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.

மேலும் இலங்கைக்கு வழங்கப்படும் ராடர் கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை விமானப் படைக்கு இந்தியா பயிற்சியளித்து வருகின்றது.

மேற்படி விடயங்களை பாதுகாப்பு அதிகாரிகள் இக்கூட்டத்தில் முன்வைத்துள்ளனர்.

எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லையென பாதுகாப்புத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/

இவ்வளவும் இருந்தும் என்ன பிரயோசனம்

Link to comment
Share on other sites

அதில் இன்னோன்றை குறிபிடலாம், தமிழீழ விடுதலைப்புலிகள் முதலில் கிபிர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவித்து பின்னர் மிக் ரக விமானம் என்று அறிவித்தமை.

நிதர்சன்

பரபரப்புக்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக நீர் கதையளக்காதையும். கிபிரைச் சுட்டது என்று புலிகள் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கவில்லை. கிபிர் இரணைமடுவில் வைத்து சுடப்பட்டதாகவும், அது புகையைக் கக்கியவாறு தென்பகுதி நோக்கிச் சென்றதைப் பொது மக்கள் பார்த்ததாகவும் தமிழ்நெட் இணையமே செய்தி வெளியிட்டது. அச்செய்தி வந்து சில மணி நேரத்தின் பின்னர் புலிகளின் படைத்துறைப் போச்சாளர் இளந்திரையன் மிக் விமானம் சுட்டுவிழ்த்தப்பட்ட ஊடகங்களிற்கு உறுதிப்படுத்தினார். இளந்திரையனோ அல்லது புலிகளின் வேறு எந்த பிரமுகரோ கிபிர் சுட்டு விழுத்தப்பட்டதாகத் தெரிவிக்க வில்லை.

எனவே ஊடக விபச்சாரிகளிற்கு வக்காளத்து வாங்குவதற்காக புலிகள் முரண்பட்ட தகவலை வெளியிட்டதாக இங்கை வந்து கதையளக்காதையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்வது போல பரபரப்புக்கு வக்காளத்து வாங்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. ஆனாலும், ஊடகங்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் விமர்சன எல்லைகள் கடந்து, பிரதிகளை அதிகம் விற்க வேண்டும் என்பத்காக பரபரப்பு அப்படி செய்திகளை வெளியிடுகின்றது என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அ, ஆ. தெரியாமல் இணையம் நடத்துவது போலவோ, இல்லை பத்திரிகையில், 3/4 பங்கு விளம்பரத்தை அள்ளி வரும் கனடிய பத்திரிகைக்குள பரபரப்புக்கு வித்தியாசப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறும் போது விசமத்தனமான விமர்சனங்களை, குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டது போன்று " ஊடக விபச்சாரிகள்" என்று விமர்சிப்பதன் மூலம் விமர்சனம் செய்யும் உங்களையும், செய்யும் விதத்தையும் என்னால் உணர முடிகின்றது.

இப்படி விமர்சனங்களை முன் வைக்கும் நீங்கள் அது தொடர்பான அல்லது ஊடகம் தொடர்பாக விமர்சனத்தை எழுதும் மனநிலையை உடையவரா? என்பது கேள்விக்குறியே!

பரபரப்பை நீங்கள் எத்தனை தடவை வாசித்தீர்களே தெரியாது. ஆனால், தமிழில், அல்லது நாட்டு நடப்பு தெரியாத கிணற்று தவளைகள் அதை வெளியிடவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பத்திரிகைகள், இணையம் போல அல்ல, விரும்பியதை எழுதி விட்டுப்போக, அல்லது ம்றவனதை பிரதி செய்து எழுத,

நீங்கள் செய்திகளை, முதலில் பார்ப்பவராக, இருந்தால், முதலில் விமானம் சுடப்பட்டவுடன் வந்த தமிழ் நெற் செய்தியை பார்த்திருக்க வேண்டும். கிபிர் விமானம் இரனைமடுவில் சுடப்பட்டது. அது புகைந்து கொண்டு, சென்றதை மக்கள் பார்த்துள்ளனர். தமது தானியங்கி விமான எதிர்ப்பு கருவி இயங்கியே கிபிரை சுட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர் என்றே செய்தி வந்தது. அவ்வேளை இளந்திரையன் அண்ணா எந்த அறிவித்தலையும் ஊடகங்களுக்கு வழங்க வில்லை.

வக்காளத்து பக்கச்சார்வு. இவை எனக்கு ஒவ்வாதவை...!

Link to comment
Share on other sites

நிதர்சன்

பரபரப்பு சொன்ன மாதிரியே புலிகள் மிக் விமானத்தை வன்னியில் தரையிறக்கிறது உண்மையென்று வைத்துக் கொண்டால், அதனை வெளியே தெரியாது விடவேண்டுமென்பதற்காகவே சுட்டுவிழ்த்தப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு.

புலிகள் மறைக்க முயன்ற விடயத்தை (போராட்ட ரகசியத்தை) கிணற்றுத் தவளை அல்லாதோரால் நடத்தப்படும் பரபரப்பு பரகசியப் படுத்துவது எதற்கு? போராட்டத்தின் நலனிலும் விட தமது பத்திரிகையின் விற்பனையிலேயே அவர்கள் கரிசனை காட்டுகிறார்கள்; என்பது உங்களிற்கு விளங்கவில்லையா?

இப்படி எழுதுபவர்களை ஊடகவிபச்சாரிகள் என்று சொல்வதில் தப்பில்லை.

நிதர்சன் இதே மிக் சுடப்பட்டது தொடர்பாக புலிகளின் இராணுவ அதிகாரிகள் சொன்னதாக தமிழ்நெட்டில் வெளியிட்பட்ட செய்தி

Military officials of the Liberation Tigers told TamilNet that their anti-aircraft defence system is automatically activated when an intrusive aircraft is detected in Ira'naimadu area

இதில் கிபிர் எண்ட சொல் பயன்படுத்தப்படவில்லை. பரபரப்பு மீதான விமர்சனத்தை வேண்டாத விமர்சனமாக கருதும் நீர் நீர் புலிகளின் (தவறில்லாத) அறிவிப்பை தவறு எண்டு சொல்கிறீரே?

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரி மின்னல். இவைகளும் ஒரு துரோகச் செயகளாக தான் கணிக்கப்படும் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் இந்தத்தலைப்பில் தொடர்ந்து விவாதிப்பது எமது இயக்கத்திற்கு பல பாதகங்கள் இருக்கிறது.

அதாவது தலைப்பிற்கும் எங்கள் விவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.

நாம் கருத்துக்களை முன்வைக்கின்றபோது தமிழ்த்தேசியத்திற்கும், விடுதலை இயக்கத்தின் ராணுவ சம்பந்தமாகவும் பாதிப்புக்கள் இல்லாது இருந்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

உங்கள் பிரச்சனைகளின் மத்தியில் எனக்கு ஒரு கேள்வி? இலங்கை இல்லை சிறீலங்கா அரசிடம் கிபீர் விமானங்கள் தற்போது இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Falling for your own propaganda

சிங்கள அரசின் பரப்புரை யந்திரங்கள்

கிழக்கில் புலிகளை தோற்கடித்து விட்டோம்

95% புலிகள் பலம் அழிக்கப்பட்டு விட்டது

விமானத் தாக்குதல்களால் புலிகள் பலமிழப்பு

போன்ற பொய்யான பரப்புரைகளை சிங்கள மக்களுக்கும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் ராசதந்திரிகளுக்கும் சொல்லிச்சொல்லி, கடைசியில் தாமே உண்மை நிலைய மறந்து சிங்கள மக்களும் மறந்து திரிசங்கு சொர்க்க நிலையில் இருக்கிறார்கள். அதே தவறை நாமும் செய்ய முடியாது.

பணம் உழைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

  • பிச்சை எடுப்பது
  • களவு எடுப்பது
  • வழிப்பறி
  • கொள்ளை
  • தாலிக்கொடி அறுத்தல்
  • கள்ளக் காட் அடித்தல்

இப்படிப் பல.

ஆனால்

போராட்டத்தை விற்றல்

என்பது அதில் ஒன்றல்ல :mellow::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம். நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை. நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் சொல்வது போல விடுதலையை விற்று பிழைப்பு நடாத்த வேண்டிய அவசியம், ரிஷிக்கோ பரபரப்பு நிர்வாகத்துக்கோ இல்லை. ஏனெனில், எனக்கு தெரிந்தவரை ரிஷி அவர்களுக்கு பரபரப்பைபில் வரும் வருமானத்தை விட அதிக வருமானம் அவரது தொழில் கிடைக்கிறது.

பண்டிதர், (பெயரில மட்டும்) சொல்வது போல பணம் சேர்க்க, போய் பிச்சை எடுக்கலாம். ஏன் விரும்பினால் விபச்சாரமும் செய்யலாம். (அந்தளவுக்கு தமிழர் இன்னும் கீழ்த்தரமாகவில்லை என்று நினைக்கின்றேன்) ஆனால் குறிப்பிட்ட ஊடகங்களை தாக்குதை தொழிலாக கொண்டு கருத்து வைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. இணையத்தில் இலவசமாய், பரபரப்பு வராததால சிலருக்கு கோபம் தான் என்ன செய்வது. இலவசமாய் கொடுத்த குப்பையில எல்லா போடுகின்றீர்கள். அதனால் தான் காசுக்கு விற்பனை செய்கின்றார்கள் போல!

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.