Jump to content

மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது


Recommended Posts

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

Link to comment
Share on other sites

  • Replies 245
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

poiwl5.jpg

எத்தனை தரம் அசிங்கப்பட்டாலும் திருந்த மாட்டீர்களா?

para103qy5.jpg

Link to comment
Share on other sites

மின்னல் அவர்களே உங்களுக்கு எதிhவாதம் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கல்ல. ஆனால் வீணான ஊடகங்கள் பழி போடும் உங்களை போன்றவர்களது கருத்துக்கு எதிரானதே எனது வாதம்.

நானும் உம்முடன் எதிர்வாதம் செய்யவோ அல்லது பரபரப்பு மீதோ வீண்பழி சுமத்த வரவில்லை நிதர்சன். பரபரப்பு போன்ற ஊடகங்களை நியாப்படுத்த புலிகளின் அறிவிப்பிலேயே பிழை கண்டு பிடிக்கிற உங்களின் தவறை சுட்டிக்காட்டவே எனது பதில் ஆரம்பித்தது. நீங்கள் புலிகளின் பிழையற்ற அறிவிப்பை தவறென்று சொல்லலாம் ஆனால் நாங்கள் பரபரப்பின் தவறை தவறென்றால் அது வீண்பழி என்கிறீர் இது என்ன நியாயம்.?

நீங்கள் நினைப்பது தான் சரி என்பதுவும், நினைப்பது தான் நடந்திருக்கலாம் என்பதுவும் வெறும் விவாதத்துக்கு சரியே தவிர யதார்த்தத்துக்கு புறம்பானவை.

நான் நினைப்பது சரி, நினைப்பது நடந்திருக்கலாமெண்டு எப்ப நிதர்சன் சொன்னேன்? எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டிய ஊடகங்கள் சரியான பாதையில் செல்லவில்லை என்பதே எமது ஆதங்கம். ஒரு சிறிய விடயத்தை ஊதிப் பெருப்பித்து மக்களை முட்டாளாக்கி வருவதையே விமர்சிக்கிறோம். அதுவே அவற்றின் மீதான விமர்சனம். இது தனியே பரபரப்பின் மீது மாத்திரமல்ல. என்பதைப் புரிந்து கொள்ளும்.

நீங்கள் கனடாவில் இருப்பினும் சில விசயங்களை அறியாதவர்களா, அல்லது தெரிந்தும் தெரியாதவராக இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. அதற்காக பரபரப்பு சொன்னால் 100 வீதம் உண்மையாக இருக்கும் என்று சொல்ல வரவில்லை.

நான் கனடாவில் இருந்தால், அதே நாட்டில் இருந்து வெளியாகும் பரபரப்பில் வருகிறவற்றையெல்லாம், நம்ப வேண்டு என்று சொல்கிறீரா? அல்லது பரபரப்பில் வருபபையை நம்புங்கள் என்று இங்கே யாரும் பரப்புரை செய்தார்களா? சரி நான் அறியாத அந்த சில விடயங்களை நீரே சொல்லும் இங்கே உள்ள கள உறவுகளும் அறிந்து கொள்ளட்டும்.

அதை விட்டு, மீண்டும் மின்னல் அவர்களது கருத்துக்கு வந்தால், தமிழீழ இராணுவ இரகசியத்தை யாரோ ஒரு தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர் சொல்லித்தானே இவர்கள் பிரசுரித்திருப்பார்கள்? இதற்க்கும் இல்லை இல்லை, ரிஷி அவர்கள் வானத்திலி பறக்கும் போது பார்த்திருப்பார் என்றால் நான் வரவில்லை. இப்போது நான் சொல்ல வந்தது. என்னவெனில். அந்த செய்தியை, சொல்லியவர் அல்லது, சற்று விசயத்தை சொன்னவருக்கு உங்களிலும் பார்க்க பொறுப்பிருக்கும், அதை விட தமிழ் ஊடகம் என்ற வகையில் பரபரப்புக்கும் அது சார்ந்திருக்கும் தமிழ் தேசியம் தொடர்பான பொறுப்புள்ளது. அதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க முயல்வது சிறு பிள்ளைத்தனம்.

நிதர்சன் பரபரப்பு மிக்-வன்னியில் தரையிறக்கப்பட்டது, விமானி புலிகளின் ஆள் என்று எழுதியதெல்லாம் பரபரப்புக்காரர் தமது கற்பனைக் குதிரையை வன்னிக்கு மேலே பறக்க விட்டே எழுதியுள்ளனர். இதனை தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கிறார்கள் எண்டு நீர் நினைக்கிறதை நான் என்னென்டு சொல்ல? நிதர்சன்.

பரபரப்பில் வருபவையெல்லாம் தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் சொல்லித்தான் பிரசுரிக்கப்படுகின்றன என்று நினைத்து கொண்டா அதன்மீது இப்படி கரிசனை காட்டுறீர்?

தமிழீழ இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் ஒரு செய்தியை வெளியில் சொல்ல வேண்டுமென்றால் பரபரப்பின் வாசர்களிற்கு மட்டும் சொல்ல மாட்டார்கள். உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத விடயமும் வெளியே வரவேண்டுமென்றால் அதனை செய்வதற்கு மக்களை இலகுவில் சென்றடையும் பல பிரபலமான ஊடகங்கள் இருக்கின்றன.

நிதர்சன் பரபரப்பு பத்திரிகையை மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே சிறு விடயத்தையும் ஊதிப்பெருக்கி வெளியிடுகிறார்கள். இவர்கள் எமது போராட்டத்திலும் பார்க்க தமது பத்திரிகையின் விற்பனையையே பிரதானமாக நினைக்கின்றனர்.

சண் டிவி குழுமத்தின் சொத்தின் மதிப்பு 17000 கோடி. இவ்வளவு பெரும் சொத்தைக் கொண்டுள்ளவர்கள் தமது பத்திரிகைகளை விற்க அவர்கள் செய்யும் நரித்தனங்கள் எத்தனை. ஏன் இதனைச் சொல்கிறேன் தெரியுமா? வேறு வழியில் அதிக வருமானம் கிடைத்தாலும் பத்திரிகை விற்பனையிலும் கவனம் செலுத்துவார்கள் என்பதற்கு உதாரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழ ஆதரவாளர்களே தங்கள் கோபங்களை பரபரப்பு, நிதர்சனங்களின் மீதும் கொட்டுகிறார்கள்.

இனோர் உண்மை அரசவாதமும் அதைவிட பலமடங்கு வஞ்சத்தைக் கொண்டிருக்கிறது இவைகளின் மேல்.

உங்கள் பார்வையில் தோன்றும் பாதகமான தீர்வுகளூக்கு (பரபரப்பு எதிர்கால நடவடிக்கையின் தீர்க்கதரிசியாகிறது என்றவகையில்) அதாவது சிங்களத்தலைமைகளுக்கு தோன்றாத ஒன்றை இந்த ஊடகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே என்ற பாணியிலான கவலை வீணானது எனகருதுகிறேன்.

இவற்றை விட பலகோணங்களில் சிங்கள ஊடகங்கள் சொல்லும் போது அவற்றை நிறுத்த எம்மால் முடியுமா?

அரசு எவற்றை தம் பிரச்சினைகளின் திறவுகோல் என்று நம்பத்துவங்குகிறதோ அவற்றைக் கொண்டே புதுப் பிரச்சினைகளை திறக்கவைப்பிப்பதே புலிகளின் போர்த்தந்திரம்.

பரபரப்பு விற்பனையில் பரபரப்பேற்படுத்த முற்படுவது பத்திரிக்கை பாரம்பரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்லவே.

தவிர ரிஷி வருமானத்துக்காக பத்திரிக்கையை நடத்தவில்லை என்பதும் பச்சைக் குழந்தைப் பிள்ளைத்தனமானது.

அது தவறாக நோக்கப் படவேண்டியதும் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்தலைமைகளுக்கு தோன்றாத ஒன்றை இந்த ஊடகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே என்ற பாணியிலான கவலை வீணானது எனகருதுகிறேன்.

அப்படி கவலைப்படவில்லை.

மிக் இறக்கியாச்சுது. அக்கினி வளத்தாச்சு போன்ற விசமத்தனமான புரளிகள் ஏற்கனவே மந்தைகளாகிவிட்ட புலம் பெயர்ந்த தமிழனை கோமா நிலையில் கனவு காண்பவனாகவே வைத்திருக்க உதவும். புலம்பெயர்ந்த மக்கள் முழுவீச்சாக செயல்பட எழவேண்டிய நேரத்தில் கண்ட கண்ட கற்பனைகளை கொடுத்து தேவையில்லாத நம்பிக்கைகளை வளர்த்து அவர்களை செயலற்ற நிலைக்கு இது தள்ளும்.

தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு பத்திரிகை மக்களை திரட்டி செயலுக்கு அணிசேர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த மேற்கில் வாழும் தமிழனுக்கு ஊக்க மாத்திரை அளிக்க முயல்வது நகைப்புக்கிடமானது.

ஊக்க மாத்திரை தேவைப்படுவது தாயகத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே. அவர்கள் இராணுவ துப்பாக்கிமுனையில் தமது உயிரை கைப்பிடித்தபடி வாழ்பவர்கள்.

புகலிடத்தில் அப்படி பயம் இருப்பதாக நினைப்பவர்களும் பயப்படுவதாக சொல்பவர்களும் தமது கடமையை செய்யாது தப்புவதற்கு கூறும் நிண்டிச் சாட்டேயன்றி வேறென்ன.

ஊடக துறை சம்பந்தமான எந்த அடிப்படை அறிவிமில்லாத கோமாளிகள் நடத்தும் கோமாளிக்கூத்தை தயவு செய்து வக்காலாத்து வாங்கி ஊக்குவிக்காதீர்கள். தாயகத் தமிழனை நோக்கி வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வருவதை தவறான முன்னுதாரணமாக்கி எதை எழுதுவது என்ற தீர்க்கதரிசனமின்றி இவர்கள் செய்யும் போக்கிரித்தனம் கேவலமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி கவலைப்படவில்லை.

மிக் இறக்கியாச்சுது. அக்கினி வளத்தாச்சு போன்ற விசமத்தனமான புரளிகள் ஏற்கனவே மந்தைகளாகிவிட்ட புலம் பெயர்ந்த தமிழனை கோமா நிலையில் கனவு காண்பவனாகவே வைத்திருக்க உதவும். புலம்பெயர்ந்த மக்கள் முழுவீச்சாக செயல்பட எழவேண்டிய நேரத்தில் கண்ட கண்ட கற்பனைகளை கொடுத்து தேவையில்லாத நம்பிக்கைகளை வளர்த்து அவர்களை செயலற்ற நிலைக்கு இது தள்ளும்.

தமிழ் தேசியத்தின்பால் அக்கறை கொண்ட ஒரு பத்திரிகை மக்களை திரட்டி செயலுக்கு அணிசேர்க்க வேண்டும். புலம்பெயர்ந்த மேற்கில் வாழும் தமிழனுக்கு ஊக்க மாத்திரை அளிக்க முயல்வது நகைப்புக்கிடமானது.

ஊக்க மாத்திரை தேவைப்படுவது தாயகத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே. அவர்கள் இராணுவ துப்பாக்கிமுனையில் தமது உயிரை கைப்பிடித்தபடி வாழ்பவர்கள்.

புகலிடத்தில் அப்படி பயம் இருப்பதாக நினைப்பவர்களும் பயப்படுவதாக சொல்பவர்களும் தமது கடமையை செய்யாது தப்புவதற்கு கூறும் நிண்டிச் சாட்டேயன்றி வேறென்ன.

ஊடக துறை சம்பந்தமான எந்த அடிப்படை அறிவிமில்லாத கோமாளிகள் நடத்தும் கோமாளிக்கூத்தை தயவு செய்து வக்காலாத்து வாங்கி ஊக்குவிக்காதீர்கள். தாயகத் தமிழனை நோக்கி வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் வருவதை தவறான முன்னுதாரணமாக்கி எதை எழுதுவது என்ற தீர்க்கதரிசனமின்றி இவர்கள் செய்யும் போக்கிரித்தனம் கேவலமானது.

என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நிதர்சனம், நெருப்பு, பரபரப்பு ஊடகங்கள் மீது காட்டப்படும் அதிருப்தி நியாயமாகப் படவில்லை.

அவை புலிகளின் உத்தியோகபூர்வதளம் என்று உரிமை கூறவில்லை.

எனவே அவற்றின் நன்மை தீமை எந்த பின்புலத்தையும் பாதிக்கப் போகிறது என்று சொல்லமுடியாது.

நாம்பார்கின்ற தளத்தில் இருந்து அல்லாமல் வேறுதளங்களில் இருந்து அவற்றின் செயற்பாடுகள் போராட்டதுக்கு உபயோகப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

அரசின் நிழல் ஊடகங்கள் புலிகள் பேச்சுத்தீர்வின் துவக்கத்தில் நிற்க்கும் போதே "ஒன்றுமே இல்லாத தீர்வை பெற இணங்கி விட்டார்களே" என்று புலம்புவார்கள்.

அதில் இருந்து விலகினால் "போராட்டம் மக்களுக்காகவா, மண்ணுக்காகவா மக்கள் அவலத்தைக் கருத்தில் கொண்டு இறங்கிப் போகக்கூடாத?"

என்று புலம்புவார்கள்.

சண்டைப் படாமல் பொறுத்துக் கொண்டு போனால் "சண்டையைத் துவங்கினால் இருக்கின்ற கட்டுப்பாட்டு பிரதேசங்கள் எல்லாம் இராணுவம் பறித்து விடும் என்ற பயத்தினால்தான் போகவில்லை"

என்றும் புலம்புவார்கள்.

எனவே இவர்களே பல ஊடகவேடங்களில் ஊடகயுத்தம் செய்யும் போது அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பும் எமது ஊடகங்களுக்கு உண்டு.

முள்ளை முள்ளால் எடுக்கின்ற மருந்து போல் எம்முடைய ஊடகங்களும் பலவிதமான தளங்களில் பலவிதமான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

எனவே நீங்கள் இவைமேல் கொள்ளும் மனவிசனம் தேவை அற்றது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் ஆகும்.

தவிர ஏகலைவன் காலத்து போர்த்தர்மம் எம்மை வாழ்த்த வேண்டும் என்ற ஆசையும் எமக்கு வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

இந்த ஊடகங்கள் தமிழ்த் தேசியம் சார்பாக எழுதவேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

நான் இதில் கருத்து எழுதுகிறபடியால் பரபரப்பு பத்திரிகையின் எதிரி என்று என்னைக் கருதவேண்டாம்.

பரபரப்பு பத்திரிகை வியாபார நோக்கம் கொண்டதா, இல்லையா என்பதல்ல எனது விவாதம்.

அதாவது பத்திரிகையில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதிற்காக

எல்லாம் எழுதலாம் என்ற கொள்கை கொண்டவர் தான் இந்த ரிஷி.

தான் கனடாவில் விமான நிலையத்தில் தான் தொழில் புரிகிறார்போல் தெரிகிறது, அதுதான் அளவுக்கு அதிகமாக கற்பனையில் மிதக்கின்றார்.

ஜயா நிதர்சன் அவர்களே நீங்கள் விவாதிப்பதிற்கு முன்வருவதிற்கு முன்பு நல்லாக ஜோசித்துத்தான் வந்தீர்களா? உங்கள் விவாதம் வேண்டவாதம் என்பதை ஏன் புரிந்து கொள்கின்றீர்களில்லை?

கனடாவிலை இலவசமாக வெளிவருகின்ற பத்திரிகை எல்லாம் உங்களுக்கு கேவலமாகப் போச்சுதா?

உங்களுக்குத்தெரிந்தது பரபரப்புப் பத்திரிகை மட்டுந்தானா?

முழக்கம், ஈழமுரசு ,உலகத்தமிழர் போன்றவை பத்திரிகை இல்லையா? தமிழ் வியாபாரச் சமூகத்தினர் போதியளவு ஆதரவு கொடுக்கும்போது ஏன் பணத்திற்கு பத்திரிகையை விற்கவேண்டும்?

உங்களுக்கும் பரபரப்பு பத்திரிகை நிறுவனத்திற்கும் பங்கு உள்ளதா?

ஜயா ஊடகத்தர்மம், சமுக அர்ப்பணிப்பு, இப்படிப் பல விடயங்களை மனதில் நிறுத்திக்கொண்டு தான், பத்திரிகையை நடத்தவேண்டும்.

பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு விளம்பரத்திற்காக நிறைய பணத்தைச் செலவழித்து பத்திரிகை நடத்துவதை எப்படிச் சொல்லுவதோ?

ஜயா நிதர்சன் நான் இந்த தலைப்பின்கீழ் உங்கள் கருத்தை அவதாணித்தேன், அளவுக்கு அதிகமாக தமிழ்த்தேசியத்தையும், விடுதலை இயக்கத்தையும் பாதிக்கிற மாதிரி கருத்தை முன்வைக்கின்றீர்கள், நிறுத்துங்கள் இத்துடன்.

Link to comment
Share on other sites

இன்னு IBC இல் விமானம் ஒன்று தெற்கில் இறங்கி ஏறியதாக செய்தி சொல்லியதே யாராவது முழுவிபரம் அறிந்தீர்களா ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேகாலையில் மர்ம விமானம் பறந்ததாக சிறிலங்காப் பொலிஸ் திணைக்களத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் பரபரப்பாய் தான் கருத்து எழுதுகின்றீர்கள். மின்னல் முதல் பண்டிதர் , என்று தொடர்கின்றது. பண்டிதர் அவர்களே, உங்கள் ஊடகத்துக்கான வரை விலக்கணம் என்ன என்பதை கொஞ்சம் எழுதினால் அதை கருத்தில் எடுத்து பத்திரிகை உலகம் செயற்ப்பட வாய்பாயிருக்கும். அதே போல ஊடகங்கள் எல்லாவற்றையும் வழமர்சிப்பதாய் எடுத்துக்கொண்டாலும், விமர்சனம் என்பது இலகுவாய் வைக்கப்படக்கூடியது. உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

கனடாவில் வரும் நீங்கள் சொல்கின்ற பத்திரிகைகளை எல்லாம் பத்திரிகை என்று யாரும் இங்கு வக்காலாத்து வாங்கவில்லை.

உங்கள் கருத்துப்படி எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதால் பரபரப்புக்கு பத்திரிகைத் தரம் வந்துவிடுமோ? :lol::D

ஆக, பத்திரிகைத் துறையில் புகலிட மக்களுக்கு பரபரப்பு அறிமுகப்படூத்திய புதிய விடயம் (novelty) எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுதல். நன்று. நன்று. பரபரப்பின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்!! :P

உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, கனடாவில் ஏராளமானோர் இணையத் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். உண்மையில் பரபரப்பைக் கூட அவ்வாறானவர்கள் வீடுகளில்தான் நான் பரவலாக கண்டேன். தாங்களே கதைகளை இயற்றி அதன் தாக்கம் என்ன என்ற தெளிவின்றி எழுதி மக்களை குழப்புவதை விட தமிழ்நாதம் போன்ற இணையத்தில் வரும் மிகவும் காத்திரமான படைப்புக்களை இணைய வசதி இல்லாத மக்களுக்கு எடுத்துச் செல்லும் மற்றைய பத்திரிகைகளின் சேவை நீங்கள் சொல்வதுபோல கேவலமானது அல்ல. மாறாக கண்டதையும் கற்பனை பண்ணி எழுதி மக்களை முட்டாளாக்க எண்ணும் பரபரப்பை விட அவை பரவாயில்லை . :rolleyes:

களத்தில் விடுதலைப்புலிகள் பின்னகர்வில் ஏற்ப்பட்ட போது அதைப்பற்றிய ஆய்வுகளை செய்யாது, அன்று வென்றார்கள், நேற்று வென்றார்கள் என்று தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்தியில் பரபரப்பு வித்தியாசமே, நான் பரபரப்பின் அபிமானியாக இதைச் சொல்லவில்லை. நீங்கள் சொல்லும் அந்த ஊடகம் தொடர்பாக எங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கின்றேன்.

ஆமாம், ஆய்வு செய்து மட்டும் என்னத்தைக் கிழித்துப் போடுவீர்கள் என்று அறியலாமா? :P :P

ஆக, களத்தில் பின்னகர்வு வந்தால் உங்களுக்குத் தேவை அதைப் பற்றிய இராணுவ ஆய்வு. அவ்வளவே!

அதை பரபரப்பாக சுடச் சுட வேறு தரவேணுமாக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளை முள்ளால் எடுக்கின்ற மருந்து போல் எம்முடைய ஊடகங்களும் பலவிதமான தளங்களில் பலவிதமான எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது.

ஆக, எழுதுவது பொய் தான் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதற்கு காரணம் இருப்பதாகவும் கூறுகிறீர்கள். அதாவது எதிரியின் பொய்ப்பரப்புரைகளை எதிர்கொள்ள நாமும் பொய் சொல்வது அவசியம் என்கிறீர்கள்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு. இவர்களின் பரபரப்பு?

இவர்களின் தொடர் புளுகுகளை கேட்டு மக்கள் சலிப்ப்டையும் போது என்ன நடக்கும்? ஏதோ மாசி 22 எண்டாங்கள். பிறகு புது வருடம் எண்டாங்கள் என்று தொடர்கதையாக நீளும்போது, மக்கள் மனங்களில் சலிப்பு ஏற்படும்போது ?? அதை எதிரி தக்கவாறு பயன்படுத்தினால்?

Link to comment
Share on other sites

நிதர்சன் அவர்களே..விடுதலைப்புலிகளின் தந்திரமான பின்னகர்வு என்று எதிரியினாலேயே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் , உங்களால் சொல்லப்படுகின்ற பரபரப்பு பத்திரிகைக்கும் மட்டும் பின்னடைவாக தோன்றுகின்றதோ?

Link to comment
Share on other sites

கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் ஈழநாடு பரபரப்பு தவிர்ந்த ஏனைஐவகள் விளம்பரங்களை தாங்கி வருபவை இவைகள் இலவச வெளியீடுகள்.இது இருக்கட்டும்.இன்று தாயகத்தில் தாக்குதல் விமானங்கள் எதிர் தாக்குதலை சந்தித்துள்ளன.இதன் வெளிபாடாக இந்தியாவிடம் இலங்கை அரசு சரணடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் அவர்களே..விடுதலைப்புலிகளின் தந்திரமான பின்னகர்வு என்று எதிரியினாலேயே ஏற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் , உங்களால் சொல்லப்படுகின்ற பரபரப்பு பத்திரிகைக்கும் மட்டும் பின்னடைவாக தோன்றுகின்றதோ?

அவர் பின்னகர்வு என்று தான் குறிப்பிட்டார். நான் தான் அவ்வாறு மாறி குறிப்பிட்டிருந்தேன்.

திருத்தியுள்ளேன். நன்றி .

Link to comment
Share on other sites

உங்களில் எத்தனை பேர் ஊடகத்துக்குள் செயற்ப்பட தயாராய் இருக்கின்றீர்கள்? அப்படியிருக்கையில் எப்படி அச் செயற்ப்பாடுகளில் இருப்பவர்கள் நீங்கள் விமர்சிக்க முடியும்? உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.

இப்போது இதுவே வாடிக்கையாகி விட்டது. பிழையைச் சுட்டிக்காட்டினால் நீ வந்து நடத்திப்பார் எண்டு வாயை அடைக்க முயல்வது ஏற்புடையதல்ல.

அடுத்து, கனடாவில் முழக்ம், ஈழமுரசு, சுதந்திரன், இன்னும் ஏராளம் பத்திரிகைகள் வருகின்றன. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு காலத்தில் ரிஷி அவர்கள் தமிழ்நாதத்தில் செய்த புலனாய்வு அரசியை எழுத்தாக்கியே இப்பத்திரிகைகள் பிரிசுரித்திருந்த. நீங்கள் சொல்லும் இந்த பத்திரிகைகளில், (முழக்கம், ஈழமுரசு தவிர) எந்தப்பத்திரிகையில் 20 விகிதத்துக்கு அதிகமாக சமூக சார்ந்து இருக்கின்றன? எத்தனை பக்கங்களில் அவர்கள் விளம்பரம் போடுகின்றனர். பரபரப்பு பணத்திற்க்காய் விற்கப்பட்டாலும், அதன் தரம் பத்திரிகை என்ற தொனியிலே இருக்கின்றது. வெள்ளிக்கிழமை பத்திரிகையை வெளியிட, வியாழக்கிழமை இரவு ஆயிரம் எழுத்துப்பிழைகளுடன், பத்திரிகை என்ற பெயருக்கும் வரும் பத்திரிகைகளை எல்லாம் கேவலமாக தான் என்னால் பார்க்க முடியும். மேலும், இணையங்களிலிருந்து பிரதி செய்து ஏNதூ கனடாவில் இருப்பவர்கள் எல்லாம் கணினிப்பக்கமே போகாதவர்கள் போல பத்திரிகை முழுக்க இணையத்திலிருந்து பிரதி செய்து போடுபவர்கள், அதற்க்கு ஆசிரியர் வேறு, கேவலமான பத்திரிகைகளாகவே என்னால் கணிக்க முடியும்.

நிதர்சன் பத்திரிகையில் விளம்பரம் போடுவது என்ன குற்றமா? விளம்பரத்தால் கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் இலவசப் பத்திரிகைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இலவசப் பத்திரிகைகளுக்குத் தான் தமது விளம்பரத்தைக் கொடுக்க விளம்பர தாரர்கள் தயாராக இருப்பார்கள். பரபரப்பு போன்ற பத்திரிகைகளிற்கல்ல (அதனாலேயோ என்னவோ பரபரப்பில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை).

உம்மைப்போன்றும், என்னைப்போன்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களிற்கு மாத்திரம் பத்திரிகைகள் இல்லை. அனைத்துத் தரப்பினருக்கும் செய்திகள் தெரிய வேண்டும். எனவே இணையச் செய்திகளை பத்திரிகையில் பிரசுரிப்பது தவறல்ல.

எழுத்துப்பிழையில்லாமல் வந்தால் பத்திரிகை தரமான பத்திரிகையா? அமெரிக்க இராணுவத்தின் படங்களைப் போட்டு கவர்ச்சி கரமாக முன்பகத்தை வடிவமைத்தால் அது தரமான பத்திரிகையா? ஒன்று தெரியுமா? ஈழத்தமிழ் பத்திரிகைளிடம் இருக்கும் தரமான எழுத்து பரபரப்பிடம் இல்லை. பேச்சு நடையில் கட்டுரை எழுதப்படுவது பரபரப்பில் மாத்திரம்தான்.

நிதர்சன் இதுவெல்லாம் தேவையில்லாத விடயங்கள். பரபரப்பின் தவறைச் சுட்டிக்காட்டினால் அதற்கு வக்காளத்து வாங்க மற்றப்பத்திரிகைகளில் வரும் தவறுகளை சொல்லி பரபரப்பை நியாப்படுத்தாதீர்கள்.

Link to comment
Share on other sites

மிக் விமானம் தாக்கப்பட்டதன் காணொளியை புலிகள் வெளியிட்டு உள்ளனர்.இந்த வார சிறப்பு பார்வை நிகழ்சியில் இந்த வீடியோ காட்சி வருகின்றது அதில் எடுக்கப்பட்ட சில படங்கள் உங்கள் காட்சிக்கு

1-5.jpg

2-5.jpg

3-5.jpg

4-2.jpg

மற்றும் விடியோவை கான இந்த இனைப்பை சொடுக்குங்கள்

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507

Link to comment
Share on other sites

நெவர்,, நாங்க ஒரு போதும் நம்ப மாட்டம், இது கிராபிக் வேலை.... :huh: :angry:

*உண்மையாகின் ஏன் விமானத்தை சுட்டு விழுத்தியவரின் முகத்தை காட்டவில்லை....

*எந்த இடத்தில் வைத்து தாக்கினார் எண்ட இடத்தையும் காட்டவில்லை...

*அட்லீஸ் எந்த இடத்தில் விமானம் விழுந்தது என்றதைக்கூட காட்டவில்லையே? *** :lol:

அது இருக்க பரபரப்பு ஏதோ சொன்னமாதிரி இருந்திச்சே?? விமானம் வன்னியில தரை......... :lol::lol: உண்மைமாதிரியும் இருக்கெப்பா?? :blink:

அடப்பாவியளா இப்படி பரபரப்பா செய்தியை பரபரப்பில போட்டு லண்டனில எந்த கடையிலையுமே அந்த பேப்பரை இருக்கவிடாமல் பன்னீட்டியளேப்பா, அட லண்டன் யாழ்ப்பாண ரவுனுக்கேயே இல்லை எண்டா பார்த்துக்குங்கோவன். அதுன்ப்பா ஈஸ்ற்ஹாம் பகுதி..:angry:

Link to comment
Share on other sites

ஆகா டங்ளாஷ்..நீங்க சொல்ல வந்தது எனக்கு புரிந்துவிட்டது, வேண்டாமப்பா வம்பு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.