-
Tell a friend
-
Topics
-
6
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
காரணம் இந்த சிங்கள பிரதிநிதியின் பொய்களை நம்பியுள்ளனர். அதனாலேயே கொழும்பில் குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு சிறு தொகையாயினும் இழப்பீடு கொடுக்கப்பட்டது ஆனால் வடக்கில் இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. காரணம் கர்தினாலின் சந்தர்ப்பவாத குரல்! அதனாலேயே தங்கள் இழப்புகளை வெளிப்படுத்த தமிழ் ஆயர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென்று கேட்க்கிறார்கள். இதுவும் தமிழருக்கு பதின்மூன்றை கொடுப்பதுபோல் சிங்களம் கூவும்.
-
உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இதுதான் சாமியார்! அதை அவர்கள் யாரையும் குறை கூறாமல், விட்டோடாமல் தாங்குகிறார்கள். பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் அதாவது போதனைக்கும் வாழ்வுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. போதனையை வாழ்வாக்குவதே உண்மையான சாதனை! மனித நேயம் என்று கூவும் தாபனங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனவா? பிறகு எதற்கு வீணான விளம்பரம் இவர்களுக்கு? ஓம்! இல்லையென்றால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மத ஆலயங்களில் கொன்று குவிக்கப்படும்போது ஏன் அது மவுனம் காத்தது? எப்போதாவது தனது பிரதிநிதியை அழைத்து விளக்கம் கேட்டதா? அறிக்கை விட்டதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதா? இன்று தமிழ் ஆயர்கள் தங்களுக்கு தனியொரு பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் பாப்பாண்டவர் அதை செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சிங்கள படுகொலையாளர் அவரை சந்திக்க சென்றபோது மறுப்பாவது தெரிவித்தாரா? முன்னாள் பாப்பானவர் ஒருவர் மறுத்ததாக அறிந்தேன் உண்மை தெரியவில்லை.
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்த 13ஏ சட்டத்தை அமுல்படுத்துவது மற்றுமொரு சீர்குலைந்த அரசியல் பிரச்சினையாகும். இந்த வார தொடக்கத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்களுடனும் (பெரும் வணக்கத்திற்குரிய திபொட்டுவாவே ஸ்ரீ சித்தாராத சுமங்கல தேரர்) அஸ்கிரிய பீடத்துடனும் (பெரும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், முன்னைய ஜனாதிபதிகள் எவரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதைப் பார்ப்பது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார். 13ஏ பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக அரசியலமைப்பில் நிலைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அது பொருந்தவில்லை என்றால், திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை. இரண்டு பீடாதிபதிகளும் மற்ற இரண்டு நிக்காயேகளின் (பிரிவுகள்) தலைவர்களும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு 13A ஐ அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதாக பெப்ரவரி 8ஆம் திகதி தனது கொள்கை அறிக்கையில் உறுதிமொழி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.# sundytimes.lk
-
நீங்கள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிக்கவில்லையா?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.