-
Tell a friend
-
Topics
-
Posts
-
இவரின் அபிவிருத்தியே வடக்கில் சுடுகாட்டில் எரி கொட்டகை அமைத்துக் கொடுப்பதுதான்...இதை அந்தந்த ஊரில்உள்ள சுடலைகளே சாட்ட்சியம் சொல்லும்..ஏன் இப்ப சொல்லி உறுதிப் படுத்த வேணும்... வாய் கொடுத்து வாங்கிக்கட்டக்கூடாது..தம்பி..
-
இனமுரண்பாடு, இனக்கலவரம், இனப்படுகொலை, இரத்த ஆறு, என்கிற எச்சரிக்கை சுருதி மாறி சாதிய முரண்பாடு, சமயமுரண்பாடு, பிரதேசவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று இழுப்பார்கள் அவர்கள், அதற்கு நம்மவர் சிலரும் ஒத்தூதுவார்கள். நரியார் பதவிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தட்டு வைத்து அழைத்தவர்களைப்பார்க்க அது புரிகிறது. தான் போடுற திட்டத்தை இம்மியளவேனும் பிசகாமல் நிறைவேற்றுபவர்களை சிங்களம் நன்றாகவே அறிந்து தக்க நேரத்தில் கையாளுகிறது.
-
இப்படியான பலூனை முதலில் பறக்க விட்டது அமெரிக்கா - - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில், 50 - 60 களில் அடிக்கடி.. அனால் இந்த பலூன் மீளம் உளவு பார்த்தல் - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில் - அமெரிக்கா 1945 களில் தொடங்கிவிட்டது என்ற ஓர் செய்தியும் இருக்கிறது. இது நடக்காதது அல்ல. அனால், சீனாவின் கையாளுதல், அமெரிக்கா துடிப்பை விட, முதிர்ச்சி அடைந்த தன்மையாக உள்ளது.
-
By goshan_che · Posted
2009 க்கு பின்னாக தமிழர் இடையே சாதி வாதங்களும், மதவாதங்களும் உருவேற்றி வளர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலானதும் அல்ல, விபத்தும் அல்ல. இப்படி ஒரு கட்டம் வரும் போது … இதை காரணம் காட்டி பொலிஸ், காணி அதிகாரங்களை தருவதை தவிர்க்கலாம் என்பது பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டம். கிழக்கில்…அதிகாரங்களை பகிர்வது தமிழ்-முஸ்லீம் கலவரத்தை தூண்டும். வடக்கில்…அது சாதி கலவரத்தை தூண்டும். இப்படித்தான் இந்தியா, மேற்க்குக்கு சொல்லி, 13 ஐ யானை தின்ற விளாம்பழம் ஆக்க போகிறார் நரி.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.