Jump to content

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்

வீ.தனபாலசிங்கம்

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்த பிறகு நான்கு தசாப்தகாலத்தில் 7 ஜனாதிபதி தேர்தல்களை நாடு சந்தித்திருக்கிறது.இவ்வருட இறுதியில் நடைபெறவிருப்பது 8 வது ஜனாதிபதி தேர்தலாகும்.

sajith.jpg

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்திலேயே ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை காலமும் ஜனாதிபதி தேர்தல்களுக்கு (போட்டியிடுவதை தவிர்த்த இரு சந்தர்ப்பங்களை தவிர)அதன்  வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் ஐக்கிய தேசிய கட்சி பிரச்சினைகளை எதிர்நோக்கியதில்லை. 

1977 ஜூலை பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைத்தபோது பிரதமராக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இருமாத காலத்தில் 1972 குடியரசு அரசியலமைப்புக்கு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றி நிறைவேற்று அதிகார  ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு போட்டியாக கட்சிக்குள்  வேறு எவரும் அந்தப் பதவிக்கு உரிமை கோருவது  குறித்து கனவிலும் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.தனது முதலாவது 6 வருட  பதவிக்காலத்தில் சுமார் ஐந்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் ஜெயவர்தன ( எதிரணி குழப்பநிலைக்குள்ளாகியிருந்த சூழ்நிலையில் ) 1982 அக்டோபரில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றியும் பெற்றார்.

பிறகு  தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஒய்வுபெறும்போது 1988 இறுதியில் அவர் தனது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவை நியமித்தார். ஜெயவர்தன அரசாங்கத்தில் முக்கிய  அமைச்சர்களாக இருந்த காமினி திசாநாயக்க போன்றவர்களும் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு விரும்பிய போதிலும் பிரேமதாசவை மீறி வேறு எவரையும் அந்தக்கட்டத்தில் ஜெயவர்தனாவினால் நியமித்திருக்கமுடியாது. 

1988 டிசம்பரில் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சியின் வன்முறைகளுக்கு மத்தியிலும் பிரேமதாச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான முன்னணியின் வேட்பாளரான முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவைத் தோற்கடித்தார்.

ஜனாதிபதி பிரேமதாச தனது முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் 1993 மே தினத்தன்று கொழும்பில் தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அன்றைய பிரதமர் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் 1994 நவம்பரில் மூன்றாவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். பிரேமதாசவுடனான முரண்பாட்டின்  விளைவாக  ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காமினி திசாநாயக்க மீண்டும் கட்சிக்குள் வந்து ஜனாதிபதி வேட்பாளரானார்.கொழும்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் திசாநாயக்க கொலைசெய்யப்பட்டதை அடுத்து அந்த ஜனாதிபதி தேர்தலில் அவரின் விதவை மனைவி சிறிமா ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

கட்சிக்குள்  காமினி திசாநாயக்கவுக்கு அடுத்த தலைவராக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க அந்தக்கட்டத்தில் வேட்பாளராக விரும்பவில்லை. சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்றைய பிரதமர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சிறிமா திசாநாயக்கவை மிகவும் சுலபமாகத் தோற்கடித்தார்.

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது முதலாவது பதவிக்காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடம் முன்னதாக 1999 டிசம்பரில் நான்காவது ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த விக்கிரமசிங்க அந்த தேர்தலில்தான் முதன் முதலாக ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார். கொழும்பு நகரமண்டப மைதானத்தில் பொதுஜன முன்னணியின் இறுதிப்பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த திருமதி குமாரதுங்க விடம் விக்கிரமசிங்க தேர்தலில்  தோல்வி கண்டார். 

ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவு தொடர்பாக எழுந்த சட்டப்பிரச்சினையொன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விளைவாக ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலை 2005 நவம்பரில் நடத்தவேண்டியதாயிற்று. அதில் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்ச போட்டியிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக மீண்டும் விக்கிரமசிங்கவே களமிறங்கினார். 

இவர்களில் எவருக்கும் ஆதரவு அலை என்று ஒன்று இல்லாத நிலையில் நடைபெற்ற அந்த தேர்தலில் ராஜபக்ச வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. தமிழ்ப்பகுதிகளில் குறிப்பாக வடக்கில் விடுதலை புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு மக்களை பலவந்தப்படுத்தியிருக்காவிட்டால் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பாலும் வெற்றிகிடைத்திருக்கும் என்று நம்பப்பட்டது. ராஜபக்ச சுமார் 28 ஆயிரம் வாக்குகளை குறைவாகப் பெற்றிருந்தால் 50 சதவீத வாக்குகள் என்ற எல்லையைக் கடந்திருக்கமாட்டார் என்று கணிப்பீடுகள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.

தனது முதலாவது பதவிக்காலத்தில் விடுதலை புலிகளுடனான போரை முழுவீச்சில் முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ச ஒவ்வொரு கட்ட வெற்றியின்போதும் சிங்கள மக்களின் ஆதரவை படிப்படியாக அதிகரித்துக்கொள்ளக்கூடியதாக இருந்தது. கட்டம் கட்டமாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் அதை நிரூபித்தன.இறுதியில் 2009 மேயில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ராஜபக்ச தனது செலாவாக்கின் உச்சக்கட்டத்தில் இருந்தார். போர் வெற்றிக்களிப்பில் தென்னிலங்கையை மிதக்கவிடும் அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அவரது அரசாங்கம் முன்னெடுத்தது. 

தனக்கு பெரிதும் வாய்ப்பான அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  ஜனாதிபதி ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்கள் இருந்த நிலையில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக 2010 ஜனவரியில் ஆறாவது  ஜனாதிபதி தேர்தலை நடத்தினார். போர் வெற்றியையடுத்து அன்று தென்னிலங்கையில் இருந்த சூழ்நிலையில் தன்னால் வெற்றிபெறமுடியாது என்பதை நன்கு உணர்ந்த விக்கிரமசிங்க ஏனைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ( போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத் தளபதியாக இருந்த ) ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக களமிறக்கினார்.

ஆனால், போருக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதாக மார்தட்டிக்கொண்டிருந்த ராஜபக்சவிடம் பொன்சேகா தோல்வி கண்டார். தென்னிலங்கை சிங்கள மக்கள் ராஜபக்சவை அமோகமாக ஆதரித்தார்கள்.ஆனால், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். பொன்சேகாவினால் அந்த தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில்தான்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அவரைக் களமிறக்க இணங்கினார்  என்பது சந்தேகமே.

ராஜபக்சாக்களுக்கு தென்னிலங்கையில் அமோகமான ஆதரவு இருந்த சூழ்நிலைகளில் அரசியல் ரீதியாக பாதிக்கப்படுவது தானாக இருந்துவிடக்கூடாது என்பதே விக்கிரமசிங்கவின் தந்திரோபாயமாக இருந்தது என்பது வெளிப்படையானது. தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இருவருடங்கள் இருந்த நிலையில் மூன்றாவது பதவிக்காலத்தை பெறும் நோக்கில் ஜனாதிபதி ராஜபக்ச நடத்திய ஏழாவது ஜனாதிபதி தேர்தலிலும்(2015 ஜனவரி ) விக்கரமசிங்க அதே தந்திரோபாயத்தையே பயன்படுத்தினார். ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அன்றைய எதிரணியின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றியும் கண்டார். உரிய காலத்துக்கு முன்கூட்டியே அந்த்தேர்தலை நடத்தியதில் தான் இழைத்த தவறை ராஜபக்ச பிறகு பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டார்.அதற்கு பிறகு நடந்தவையெல்லாம் அண்மைய வருடங்களின் வரலாறு.

இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறவிருக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இத்தடவை பிரதமர் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே முக்கியமான கேள்வி. மூன்றாவது தடவையும் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் தந்திரோபாயத்தை அவரால் கடைப்பிடிக்க அவரால் முடியாது.அவ்வாறு செய்வதற்கு அவரை கட்சியினர் அனுமதிக்கவும் போவதில்லை என்பது வெளிப்படையானது. இந்த தேர்தல் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிதலைவரும் வீடமைப்பு , நிர்மாணத்துறை அமைச்சருமான சஜித் பியேமதாசவும்  பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவும் தாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு தயாராயிருப்பதாக பகிரக்கமாக கூறுகின்ற அதேவேளை, விக்கிரமசிங்க எதுவும் பேசாமல் இருக்கிறார். கட்சியின் தலைவரே வேட்பாளராக நிற்கவேண்டும் என்று சரத் பொன்சேகா போன்றவர்கள் பகிரங்கமாக பேசுகின்ற வேளையிலும் கூட பிரதமர் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதில்லை. 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவையே நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் அண்மைய வாரங்களாக வலுவடைந்துகொண்டிருக்கிறது. பிரதமரின் விசுவாசிகள் என்று கருதப்பட்ட பல அமைச்சரகளும்  பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட பிரேமதாசவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பிரேமதாசவின் மனைவி  ஜலானி இரு வாரங்களுக்கு முன்னர் அட்டனில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரைாயாற்றும்போது தன்னை ' எதிர்கால முதற்பெண்மணி ' என்று கூட வர்ணித்திருந்தார். இவ்வாறாக எல்லாம் விக்கிரமசிங்கவுக்கு ' செய்திகள் ' அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக அறிவிப்பதற்கு தயங்குகிறார்.பதிலாக, கட்சியின் செயற்குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவெடுக்கும் என்று அறிவித்துவி்ட்டு அவர் பேசாமல் இருக்கிறார்.

சஜித் பிரேமதாசவை வேட்பாளராக களமிறக்கினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பைப் பற்றி நம்பிக்கைகொள்ள முடியும் என்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் அபிப்பிராயம் வலுவடைவது ஒன்றும் இரகசியமல்ல. விக்கிரமசிங்க போட்டியிடுவாரேயானால் ராஜபக்ச முகாமின் வேட்பாளருக்கு  ஈடுகொடுக்க முடியாமல் போகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பல மட்டங்களிலும் நிலவுகின்ற எண்ணம் கட்சிக்குள் அவரின்தலைமைத்துவ நிலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்ற கடுஞ்சவாலை உணர்த்திநிற்கிறது.

ஐக்கிய தேசிய கட்சி பிரதமர் விக்கிரமசிங்கவின் தலைமையில் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அந்த கால்நூற்றாண்டாக கட்சியினால் அடையமுடியாமல் இருக்கிறது. அவரின் தலைமையே தொடருமானால் தங்களின் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் ஆபத்துக்குள்ளாகக்கூடும் என்று கட்சியின் முக்கியமான அரசியல்வாதிகளில் கணிசமான எண்ணிக்கையினர் அச்சங்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் போலத்தெரிகிறது. ஆனால், எதுவுமே நடக்காதது போன்று விக்கிரமசிங்க தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டு திரிகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில் மிக நீண்டகாலம் தலைவர் பதவியில் இருப்பவர் விக்கிரமசிங்க.அதேவேளை அக்கட்சியின் தலைவர்களாக இருந்தவர்களில் எவருமே அவரைப் போன்று இடையறாது தலைமைத்துவத்துக்கு சவாலை எதிர்கொண்டு தாக்குப் பிடித்தவர்களும் வேறு எவரும் இல்லை. தற்போது மீண்டும் அவரின் தலைமைத்துவம் சவாலை எதிர்நோக்குகிறது. இத்தடவை அவரால் அதை சமாளிக்கமுடியுமா?  இந்த கேள்விக்கான பதிலுக்கு நீண்டகாலம் காத்திருக்கவேண்டியதில்லை.

 

https://www.virakesari.lk/article/61405

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.