Jump to content

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

July 29, 2019

polythene.jpg?resize=611%2C320யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

 

http://globaltamilnews.net/2019/127512/

Link to comment
Share on other sites

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

நல்ல முயற்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

eceea5148f3a9a5df219bbbaa386c110.jpgimage-450w-467461370.jpg

Quellbild anzeigen

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

கடதாசிப்பைகள் காருக்கும் வேனுக்கும் சரிவரும் கால்மிதித்து செல்லும் சைக்கிழுக்கும் , மோட்டார் சைக்கிழுக்கும் கடதாசிப்பை சரிவராது பாரம் மிகுந்த பொருட்களை வாங்கி சுமந்து செல்ல

அமெரிக்கா எங்கே இலங்கை  எங்கே வளர்ச்சி பெற்ற நாடுகளின் குப்பைகளை கூட இறக்குமதி செய்து  இங்கே அதை  உக்க அல்ல எரிக்கச்செய்திருக்கிறார்கள் அத்தனையும் பிளாஸ்திக்கு, மனித எச்சங்களாம், பொலித்தீன்கள் ஆஸ்பத்திக்கழிவுகள் இதுதான் இலங்கை 

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை

4 hours ago, Lara said:

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

Link to comment
Share on other sites

  1. நெகிழி பைகளை விட மாற்று பொருள்களை, இயற்கையாக மீள் சுழற்சிக்கு உள்ளாகும் பொருட்களை  மலிவான விலையில் தரல்  வேண்டும் 
  2. அங்காடிகளில் சொந்த பைகளை, நெகிழி உட்பட, கொண்டுவருபவர்களுக்கு ஒரு பண சலுகை தரப்படல் வேண்டும்  
  3. பாடசாலைகளில் நெகிழி  பற்றிய அறிவை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

ஓலைப்பெட்டிகளையெடுத்து பெண்டுகள் கடைக்கு செல்லமாட்டார்கள் இப்ப உள்ளவர்கள்   கன்ட் பேக் தான் பேசனாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை.

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

Link to comment
Share on other sites

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 12:52 AM, Paanch said:

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

குருவி சுட்டவர்களும் உண்டு குருக்களை சுட்டவர்களும் உண்டு  கூட இருந்து விட்டு ஓடியவர்களும் உண்டு 

On 7/30/2019 at 10:33 PM, ஏராளன் said:

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

குண்டுகளே புலிகள் இல்லாத போது வந்து  வெடித்து விட்டது அவ்வளவு தடையிருந்தும் அத்தனையும் சீ 4 என்று சொல்கிற அதிசக்தி வாய்ந்தது அப்படீருக்க இந்த பொலித்தீன் அப்படி இலகுவில்  கட்டுப்படுத்த முடியாத ஒன்று 

உப்பளங்கள் இருந்தும் உப்பு இறக்குமதி இதுதான் இலங்கை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.