Jump to content

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

July 29, 2019

polythene.jpg?resize=611%2C320யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

 

http://globaltamilnews.net/2019/127512/

Link to comment
Share on other sites

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

நல்ல முயற்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Paanch said:

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

eceea5148f3a9a5df219bbbaa386c110.jpgimage-450w-467461370.jpg

Quellbild anzeigen

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

கடதாசிப்பைகள் காருக்கும் வேனுக்கும் சரிவரும் கால்மிதித்து செல்லும் சைக்கிழுக்கும் , மோட்டார் சைக்கிழுக்கும் கடதாசிப்பை சரிவராது பாரம் மிகுந்த பொருட்களை வாங்கி சுமந்து செல்ல

அமெரிக்கா எங்கே இலங்கை  எங்கே வளர்ச்சி பெற்ற நாடுகளின் குப்பைகளை கூட இறக்குமதி செய்து  இங்கே அதை  உக்க அல்ல எரிக்கச்செய்திருக்கிறார்கள் அத்தனையும் பிளாஸ்திக்கு, மனித எச்சங்களாம், பொலித்தீன்கள் ஆஸ்பத்திக்கழிவுகள் இதுதான் இலங்கை 

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை

4 hours ago, Lara said:

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

Link to comment
Share on other sites

  1. நெகிழி பைகளை விட மாற்று பொருள்களை, இயற்கையாக மீள் சுழற்சிக்கு உள்ளாகும் பொருட்களை  மலிவான விலையில் தரல்  வேண்டும் 
  2. அங்காடிகளில் சொந்த பைகளை, நெகிழி உட்பட, கொண்டுவருபவர்களுக்கு ஒரு பண சலுகை தரப்படல் வேண்டும்  
  3. பாடசாலைகளில் நெகிழி  பற்றிய அறிவை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் 

 

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Lara said:

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

ஓலைப்பெட்டிகளையெடுத்து பெண்டுகள் கடைக்கு செல்லமாட்டார்கள் இப்ப உள்ளவர்கள்   கன்ட் பேக் தான் பேசனாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை.

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

Link to comment
Share on other sites

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

Link to comment
Share on other sites

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/31/2019 at 12:52 AM, Paanch said:

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

குருவி சுட்டவர்களும் உண்டு குருக்களை சுட்டவர்களும் உண்டு  கூட இருந்து விட்டு ஓடியவர்களும் உண்டு 

On 7/30/2019 at 10:33 PM, ஏராளன் said:

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

குண்டுகளே புலிகள் இல்லாத போது வந்து  வெடித்து விட்டது அவ்வளவு தடையிருந்தும் அத்தனையும் சீ 4 என்று சொல்கிற அதிசக்தி வாய்ந்தது அப்படீருக்க இந்த பொலித்தீன் அப்படி இலகுவில்  கட்டுப்படுத்த முடியாத ஒன்று 

உப்பளங்கள் இருந்தும் உப்பு இறக்குமதி இதுதான் இலங்கை 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.