Jump to content

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

எல்லாமதமும் நல்லதையே சொல்கின்றது. மனிதர்கள் தான் அதை தவறாக பயன் படுத்துகின்றனர்.

நல்லதுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கணணியை இன்று தவறான வழிக்கு பயன்படுத்துவது போல....😄

நல்லது போல சொல்கிறதே தவிர 
எந்த மதமும் நல்லதை உள்ளதை சொல்ல முடியாது 
இல்லாத கடவுளை இல்லை என்று ஒரு மதமும் சொல்வதில்லை 

எல்லாவற்றையும் துறந்து ...
நிம்மதிக்கு முதல் படி ஆசைகளை துறப்பது 
என்று காடுக்குபோன 

புத்தனுக்கு கோவில் கட்டி 
தமது ஆசைகள் நிறைவேற
புத்தன் அருள் வேண்டி  பூஜை நடக்கிறது.

இந்த வில்லங்கத்தில்தான் புத்த மதம் தொங்குகிறது. 

Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் 25000ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளை இழ‌ந்து இருக்குறோம் / 
பெரும் பாலான‌ போராளிக‌ள் சிறு வ‌ய‌தில் இருந்தே க‌ட‌வுள் ந‌ம்பிக்கையோடு வ‌ள‌ந்த‌வ‌ர்க‌ள் 🙏/

 தை பொங்க‌ல்  கிறிஸ்ம‌ஸ் இது எல்லாம் போராளிக‌ள் கொண்டாடின‌ நிக‌ழ்வுக‌ள் /

த‌மிழீழ‌ வான் ப‌டை 2001ம் ஆண்டு வ‌ன்னியில் ஒரு கோயிலுக்கு அவ‌ர்க‌ளின் விமான‌த்தால் வ‌ந்து  கோயிலுக்கு பூ போட்ட‌தை கோயில் ம‌க்க‌ள் நேரா க‌ண்ட‌வை / இத‌ என்ன‌ சொல்லி ம‌றைக்க‌ போறீங்க‌ள் 😁😁😁😁😁
வ‌ர‌லாறுக‌ளை முத‌ல் ப‌டியுங்கோ பின் விவாதிப்போம் 😉 /

Link to comment
Share on other sites

8 minutes ago, Maruthankerny said:

இரண்டும் ஒன்றுதானே 

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை வாங்குவதற்கும் ஒன்று கிடைத்ததற்காக மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் போராளிக‌ள் தை பொங்க‌ல்   கொண்டாடின‌ போது எடுத்த‌ புகை ப‌ட‌ம்  🙏🙏🙏🙏🙏

FB-IMG-1484395214365.jpg
625-500-560-350-160-300-053-800-900-160-

த‌லைவ‌ர் போராளிக‌ளுட‌ன் சேர்ந்து கிறிஸ்ம‌ஸ் கொண்டாடின‌ ப‌ட‌ம் ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌து , அந்த‌ ப‌ட‌த்தை தேடியும் கிடைக்க‌ வில்லை 😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. ஒன்றைக்கொடுத்து இன்னொன்றை வாங்குவதற்கும் ஒன்று கிடைத்ததற்காக மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றது. 😀

எனது சகோதரருக்கு கான்சர் ....
நான் சாமிக்கு சொல்கிறேன் சகோதரர் சுகம் அடைந்தால் 
எனது உடல்களில் குத்து ஊசிகளை குத்தி கயித்தில் பறவை காவடி என்று 
தொங்குவேன் என்று 

சகோதரர் குணமடைகிறார் ....
நான் கயித்தில் தொங்க வேண்டும் 

சகோதரர் இறந்துவிட்டார் ....
கயித்தில் தொங்க மாட்டேன் 
சுகமாக நான் இருப்பேன் 

இரண்டிலும் கடவுள் வியாபரிதானே? 
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றில் வியாபாரிக்கு லாபம் மற்றதில் நஷ்ட்டம் (கடவுள் என்று ஒருவர் இருந்தால்) கடவுள் இல்லாத இந்த உலகில் இரண்டிலுமே எனக்குதானே நஷ்ட்டம்? 

Link to comment
Share on other sites

2 minutes ago, Maruthankerny said:

எனது சகோதரருக்கு கான்சர் ....
நான் சாமிக்கு சொல்கிறேன் சகோதரர் சுகம் அடைந்தால் 
எனது உடல்களில் குத்து ஊசிகளை குத்தி கயித்தில் பறவை காவடி என்று 
தொங்குவேன் என்று 

சகோதரர் குணமடைகிறார் ....
நான் கயித்தில் தொங்க வேண்டும் 

சகோதரர் இறந்துவிட்டார் ....
கயித்தில் தொங்க மாட்டேன் 
சுகமாக நான் இருப்பேன் 

இரண்டிலும் கடவுள் வியாபரிதானே? 
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றில் வியாபாரிக்கு லாபம் மற்றதில் நஷ்ட்டம் (கடவுள் என்று ஒருவர் இருந்தால்) கடவுள் இல்லாத இந்த உலகில் இரண்டிலுமே எனக்குதானே நஷ்ட்டம்? 

கடவுள் எனக்கு இதை தா நான் உனக்கு இதை செய்கிறேன் என கூறினால் தான் வியாபாரி. கடவுள் இங்கு எதையும் கேட்கவில்லையே. 😀

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்காமல் பதிலை சரியாக புரிந்து கொள்ளுங்கள். 😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ருத‌ங்கேனி அண்ணா / 
நீங்க‌ள் பெரியாரின் தீவிர‌ தொண்ட‌னாய் இருக்க‌ முய‌ற்ச்சி செய்யுங்கோ /
இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் 😁😁😁😁😁/

உல‌கில் ந‌ட‌க்கும் அநீதிக‌ளுக்கு தெய்வ‌ங்க‌ளை குறை சொல்ல‌ முடியாது / 4ங்கு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ஸ்பேனிய‌ன் நாட்டு விமான‌ம் விப‌த்துக்கு உள்ளான‌து , விப‌த்து எப்ப‌டி ந‌ட‌ந்து என்று ஆர‌ச்சி செய்து பார்க்கையில் ( விமான‌ ஓட்டி ப‌டு போதையில் இருந்து இருக்கிறார்  அது தான் அந்த‌ பெரிய‌ விப‌த்து ந‌ட‌க்க‌ கார‌ன‌ம் 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

கடவுள் எனக்கு இதை தா நான் உனக்கு இதை செய்கிறேன் என கூறினால் தான் வியாபாரி. கடவுள் இங்கு எதையும் கேட்கவில்லையே. 😀

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்காமல் பதிலை சரியாக புரிந்து கொள்ளுங்கள். 😎 

தயவு செய்து டென்ஷன் ஆகதையுங்கோ 
எதையும் பேசி தீர்க்கலாம்.

கடவுள் எப்படி கேட்ப்பார்?
கடவுளை உருவாக்கியதே நாம்தானே 
இருந்தாதான் அதை இதை கேட்க 

நாம் செய்வது பற்றித்தான் எனது கேள்வி 
இதை தா    அதை தருகிறேன் என்பது வியாபார முறைமைதானே?
இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? 

சிறுவயதில் நானும் செய்ததுதான் 

Link to comment
Share on other sites

6 minutes ago, Maruthankerny said:

தயவு செய்து டென்ஷன் ஆகதையுங்கோ 
எதையும் பேசி தீர்க்கலாம்.

கடவுள் எப்படி கேட்ப்பார்?
கடவுளை உருவாக்கியதே நாம்தானே 
இருந்தாதான் அதை இதை கேட்க 

நாம் செய்வது பற்றித்தான் எனது கேள்வி 
இதை தா    அதை தருகிறேன் என்பது வியாபார முறைமைதானே?
இதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? 

சிறுவயதில் நானும் செய்ததுதான் 

எனக்கு ரென்சன் இல்லை. 

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என இத்திரியிலேயே எழுதியுள்ளேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பற்றியே என் கருத்து.

இதை தருகிறேன் அதை தா என்பதற்கும் இதை தந்தால்/இது நடந்தால் மகிழ்வுடன் இதை செய்கிறேன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்காதீர்கள் என கூறினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

எனக்கு ரென்சன் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என இத்திரியிலேயே எழுதியுள்ளேன். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பற்றியே என் கருத்து.

இதை தருகிறேன் அதை தா என்பதற்கும் இதை தந்தால்/இது நடந்தால் மகிழ்வுடன் இதை செய்கிறேன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. அதை புரிந்து கொள்ளக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை கேட்காதீர்கள் என கூறினேன்.

நீங்கள்தான் ஒரே விடயத்தை 
வேறு வேறாக திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள்.

தைப்பொங்கல் 
இது வருட வருடம் நாம் சூரியனுக்கு நன்றி சொல்லி செய்கிறோம் 
சூரியனால் நாம் பெறும் பயனாக ... ஒரு நன்றியுடன் சூரியனை வணங்குகிறோம் 
இதை நான் பாராட்டுகிறேன்.

நேர்த்திக்கடன் என்பதே டீல் பேசுவதுதானே?
இதில் முன் பின் என்ன இருக்கு 

நீங்கள் சுகயீனமாக இருந்து சுகம் அடைந்தால் 
நீங்களாகவே கோவிலுக்கு சென்று ஒரு நன்றியாக ஒன்றை செய்வது நன்று.

சுகயீனமாக இருக்குபோது நேர்த்திக்கடன் எனும் பெயரில் டீல் பேசுவதை 
எப்படி வியாபாரம் இல்லை என்று சொல்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( உண்மை ச‌ம்ப‌வ‌ம் 🙏🙏🙏)

என்ர‌ அம்ம‌ம்மா கோயிலுக்கு போய்யிட்டு  வ‌ந்து ஜ‌யாவுக்கு கோயில் பூவை குடுத்த‌வா காதில் வைக்க‌ சொல்லி /
அம்ம‌ம்மா கோயிலுக்கு போயிட்டு நேர‌ம் செல்ல‌ வீடு வ‌ந்திட்டா என்ர‌ கோவ‌த்தில் அம்ம‌ம்மா காதுக்கு வைக்க‌ குடுத்த‌ பூவை ஜ‌யா கோவ‌த்தில் காலால் மிதிச்சார் 😉🤔 /

கொஞ்ச‌ கால‌ம் க‌ழித்து ஜ‌யா எந்த‌ காலால் பூவை மிதிச்சாரோ அந்த‌ காலுக்காள் புழு வ‌ந்த‌து 😓
ஜ‌யாவுக்கு கிட்ட‌ போக‌ ஏலாது கால் அழுகி புழு வெளிய‌ வ‌ர‌ நாத்த‌மும் அதிக‌ம் 😓, நான் சின்ன‌ பெடிய‌னாய்  இருந்த‌ போது ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம் இது  1993ம் ஆண்டு , ஜயா காலால் பூவை மிதிக்கும் போது நான் பிற‌க்க‌ வில்லை , பிற‌க்கு அம்ம‌ம்மா சொல்லி உண்மையை தெரிந்து கொண்டேன் , ஜ‌யா எப்ப‌வோ செய்த‌ கொடுமைக்கு ஆண்ட‌வ‌ர் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து தான் ஜ‌யாவுக்கு த‌ண்ட‌னை குடுத்த‌வ‌ர் 👏👏👏👏👏🙏🙏/

தெய்வ‌ங்க‌ளோட‌ ஒரு போதும் விளையாட‌க் கூடாது , பின்னாளில் அது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் 😉😁

Link to comment
Share on other sites

13 minutes ago, Maruthankerny said:

நீங்கள்தான் ஒரே விடயத்தை 
வேறு வேறாக திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள்.

தைப்பொங்கல் 
இது வருட வருடம் நாம் சூரியனுக்கு நன்றி சொல்லி செய்கிறோம் 
சூரியனால் நாம் பெறும் பயனாக ... ஒரு நன்றியுடன் சூரியனை வணங்குகிறோம் 
இதை நான் பாராட்டுகிறேன்.

நேர்த்திக்கடன் என்பதே டீல் பேசுவதுதானே?
இதில் முன் பின் என்ன இருக்கு 

நீங்கள் சுகயீனமாக இருந்து சுகம் அடைந்தால் 
நீங்களாகவே கோவிலுக்கு சென்று ஒரு நன்றியாக ஒன்றை செய்வது நன்று.

சுகயீனமாக இருக்குபோது நேர்த்திக்கடன் எனும் பெயரில் டீல் பேசுவதை 
எப்படி வியாபாரம் இல்லை என்று சொல்கிறீர்கள்? 

நான் ஒரே விடயத்தை வேறு வேறாக எழுதவில்லை. உங்களுக்கு தான் விளங்கவில்லை.

சூரியனிடம் நாங்கள் எதையும் கேட்டு சூரியன் அதை தருவதில்லை.

கடவுளிடம் கேட்பதால் கேட்கும் போதே சிலர் அது நடந்தால் மகிழ்வுடன் இன்னொன்றை செய்வதாக கூறுவர். அது டீல் கிடையாது. வியாபாரமும் கிடையாது.

மருத்துவர்கள் மருந்தை உணவுக்கு முன் போடு உணவுக்கு பின் போடு என்கிறார்கள். எல்லாம் ஒன்று தானே, எப்படிப்போட்டால் என்ன என்று கேட்பது போல் உள்ளது உங்கள் கேள்வி. ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்26... சைவ சமய ஆர்வக்கோளாறில் அடித்து விடுறீங்களோ... 😀

இங்கே எழுதப்படும் கருத்துக்கள் எவையும் கிறிஸ்தவ மதத்தையோ, அதனை பின் பற்றுபவர்கள் நோக்கி வைக்கப்பட்ட விமர்சனமாக இதை நான் பார்க்கவில்லை.

அவர்களின் சுய லாபங்களுக்காக அல்லது தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்ட  கோட்பாடு ஓன்றை 
கடைபிடிக்கும் ஒரு சில கூட்டத்தார் செய்யும் இந்த மத மாற்ற பிரச்சாரங்கள் குறித்தே இந்த விசனங்கள் எழுதப்படுகின்றன.

ஈழ தேசத்தில் இந்த மேற்கத்தைய மதக் கொள்கைகள் எப்படி வந்தன? எப்போது வந்தன?
பூர்வீகமாக அந்த தேசத்தில் இருந்த மக்கள் எந்த மத அனுஷ்டானங்களை பின்பற்றினார்கள்?
அவர்களின் சுயம் மறைக்கப்பட்டு, புதிய பரிணாமம் கொடுக்கப்பட்டு... இதை எல்லாம் சரி என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 

கனடாவில் இருந்த பூர்வீக செவ்விந்திய குடிகளின் அனைத்து குழந்தைகளையும் அரசியல் / மத அதிகாரத்தை பிரயோகித்து பெற்றோர்களிடம் இருந்து பலவந்தமாக பிரித்து கொண்டு சென்று கிறிஸ்தவ / கத்தோலிக்க மதத்தை போதித்த வரலாறும், அப்படி கொண்டு  செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் பெற்றாரை இழந்த சோகத்தில் மாண்டு போன வரலாறும் உள்ளது....
இதை எப்படி எடுக்கலாம்...

சிங்கள பௌத்தர்கள் இதே செயலை செய்தாலும் முடிந்த வரையில் எதிர்ப்பும், விரட்டி நடிப்பும் தாயகத்தில் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம் அண்மையில் நாவற்குழியில் நடந்த எதிர்ப்பு.

எனக்கு எல்லா மதத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். 
என்னுடைய மதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். 
அதனால், அனாவசியமாக ஆள்சேர்க்கவேண்டாம், இது அந்த அந்த மதங்களை பின்பற்றுவோர்க்கு ஒரு மன உளைச்சலை கொடுக்கிறது. அது தான் உண்மை.
எப்படி என் நிலத்தை இன்னும் ஒருவன் முற்றுகைக்கு உட்படுத்தி தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கிறானோ அதை போலத்தானே இதுவும். அப்படியாயின் வெறுப்பும் எதிர்ப்பும்  வருவது இயற்கை தானே.
என்ன ஒரு வித்தியாசம் சமயம் ஒரு நம்பிக்கை சார்ந்தது ....நிலம் அப்படியல்ல.

பிறப்பு எனக்கு நான் தமிழன் என்றும் சைவன் என்றும் அடையாளத்தை தந்திருக்கிறது.
ஞானம் எல்லா மதத்தையும்  நேசிக்கும் பக்குவத்தையும், உண்மையை தேடுவதில் ஆர்வத்தையும் தந்திருக்கிறது. இடைத்தரகர்களின் பரிந்துரையால் தான் சிக்கல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sasi_varnam said:

பையன்26... சைவ சமய ஆர்வக்கோளாறில் அடித்து விடுறீங்களோ... 😀

இங்கே எழுதப்படும் கருத்துக்கள் எவையும் கிறிஸ்தவ மதத்தையோ, அதனை பின் பற்றுபவர்கள் நோக்கி வைக்கப்பட்ட விமர்சனமாக இதை நான் பார்க்கவில்லை.

அவர்களின் சுய லாபங்களுக்காக அல்லது தவறாக சொல்லிக்கொடுக்கப்பட்ட  கோட்பாடு ஓன்றை 
கடைபிடிக்கும் ஒரு சில கூட்டத்தார் செய்யும் இந்த மத மாற்ற பிரச்சாரங்கள் குறித்தே இந்த விசனங்கள் எழுதப்படுகின்றன.

ஈழ தேசத்தில் இந்த மேற்கத்தைய மதக் கொள்கைகள் எப்படி வந்தன? எப்போது வந்தன?
பூர்வீகமாக அந்த தேசத்தில் இருந்த மக்கள் எந்த மத அனுஷ்டானங்களை பின்பற்றினார்கள்?
அவர்களின் சுயம் மறைக்கப்பட்டு, புதிய பரிணாமம் கொடுக்கப்பட்டு... இதை எல்லாம் சரி என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா? 

கனடாவில் இருந்த பூர்வீக செவ்விந்திய குடிகளின் அனைத்து குழந்தைகளையும் அரசியல் / மத அதிகாரத்தை பிரயோகித்து பெற்றோர்களிடம் இருந்து பலவந்தமாக பிரித்து கொண்டு சென்று கிறிஸ்தவ / கத்தோலிக்க மதத்தை போதித்த வரலாறும், அப்படி கொண்டு  செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் பெற்றாரை இழந்த சோகத்தில் மாண்டு போன வரலாறும் உள்ளது....
இதை எப்படி எடுக்கலாம்...

சிங்கள பௌத்தர்கள் இதே செயலை செய்தாலும் முடிந்த வரையில் எதிர்ப்பும், விரட்டி நடிப்பும் தாயகத்தில் இன்றும் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உதாரணம் அண்மையில் நாவற்குழியில் நடந்த எதிர்ப்பு.

எனக்கு எல்லா மதத்திலும் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் எல்லா மதத்தையும் மதிக்கிறேன். 
என்னுடைய மதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். 
அதனால், அனாவசியமாக ஆள்சேர்க்கவேண்டாம், இது அந்த அந்த மதங்களை பின்பற்றுவோர்க்கு ஒரு மன உளைச்சலை கொடுக்கிறது. அது தான் உண்மை.
எப்படி என் நிலத்தை இன்னும் ஒருவன் முற்றுகைக்கு உட்படுத்தி தன்னை நிலை நிறுத்த முயற்சிக்கிறானோ அதை போலத்தானே இதுவும். அப்படியாயின் வெறுப்பும் எதிர்ப்பும்  வருவது இயற்கை தானே.
என்ன ஒரு வித்தியாசம் சமயம் ஒரு நம்பிக்கை சார்ந்தது ....நிலம் அப்படியல்ல.

பிறப்பு எனக்கு நான் தமிழன் என்றும் சைவன் என்றும் அடையாளத்தை தந்திருக்கிறது.
ஞானம் எல்லா மதத்தையும்  நேசிக்கும் பக்குவத்தையும், உண்மையை தேடுவதில் ஆர்வத்தையும் தந்திருக்கிறது. இடைத்தரகர்களின் பரிந்துரையால் தான் சிக்கல். 

உற‌வே நான் முத‌ல் இந்த‌ திரியில் எழுதின‌ ப‌திவை வாசியுங்கோ , அதில் எல்லா தெய்வ‌ங்க‌ளும் ஒன்று என்று தான் எழுதினான் ம‌ற்றும் என‌க்குள் ம‌த‌ வெறி ஒரு போதும் இருந்த‌து இல்லை என்றும் கூட‌ எழுதி இருக்கிறேன் /

நான் என் ஜ‌யாவை ப‌ற்றி எழுதின‌து நூற்றுக்கு நூறு உண்மை , பொய்யை எழுதி நாம் சாதிக்க‌ போர‌து எது ஒன்றும் இல்லை , உண்மையை உள்ள‌ ப‌டியே எழுத‌ தான் என் ம‌ன‌சு என‌க்கு இட‌ம் கொடுக்கும் /

என‌க்கும்
முஸ்லிம் 
கிறிஸ்த‌வ‌
இன்னும் ம‌ற்ற‌ ம‌த‌த்தை சேர்ந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் தோழிய‌ல் இருக்கின‌ம் , நாங்க‌ள் பெரிசா ம‌த‌த்தை ப‌ற்றி அல‌ட்டி கொள்வ‌து இல்லை /

என‌க்கு என் ம‌த‌த்தின் மேல் ந‌ம்பிக்கை இருக்கு , என்ர‌ அம்ம‌ம்மா என்னை வ‌ள‌த்த‌ வித‌ம் அப்ப‌டி ,

இந்த‌ திரியில் நான் ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்த‌ வில்லை /

சில‌ போலிக‌ள் என்ர‌ சொந்த‌த்துக்கை இருக்கின‌ம்  ம‌த‌ம் மாறி அவையின் கேலி கூத்தை தான் வெளிப்ப‌டையாய் எழுதி நான் /

இந்த‌ திரியில் இனி எழுதுவ‌தை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் என்று என‌க்கு தோனுது , 
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்  😉😁 /

Link to comment
Share on other sites

2 hours ago, பையன்26 said:

பெண் போராளிக‌ள் தை பொங்க‌ல்   கொண்டாடின‌ போது எடுத்த‌ புகை ப‌ட‌ம்  🙏🙏🙏🙏🙏

FB-IMG-1484395214365.jpg
625-500-560-350-160-300-053-800-900-160-

த‌லைவ‌ர் போராளிக‌ளுட‌ன் சேர்ந்து கிறிஸ்ம‌ஸ் கொண்டாடின‌ ப‌ட‌ம் ஊட‌க‌ங்க‌ளில் வ‌ந்த‌து , அந்த‌ ப‌ட‌த்தை தேடியும் கிடைக்க‌ வில்லை 😉😁

மிகவும் தவறான கருத்து இது. கண்டிக்கதக்க கருத்தும் ஆகும்.

விடுதலைப் புலிகள் தைப் பொங்கலை கொண்டாடியது தமிழர் பண்டிகை என்ற காரணத்தினால் ஆகும்.அது சைவ / இந்துப் பண்டிகையாக அல்ல. அதே போல் அவர்கள் ஒரு போதும் எந்த மதப் பண்டிகையையும் கொண்டாடியதும் இல்லை. அதே நேரம் ஒவ்வொரு போராளியும் தான் சார்ந்த மத நம்பிக்கையை கடைப்பிடிப்பதற்கு தடை ஏதும் விதிக்கப்படவும் இல்லை.

விடுதலைப் புலிகளின் வழக்கத்துக்கு ஏற்றால் போலத்தான் யாழ் இணையமும் தமிழர் பண்டிகை என்பதால் தைப் பொங்கலுக்கும் மட்டுமே முகப்பில் banner போட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றது. வேறு எந்த மதப் பண்டிகைகளுக்கும் யாழ் இணையம் இவ்வாறு செய்வதில்லை.

 ஊடக அறிவும் வரலாற்று அறிவும் இல்லாதவர்களால் நடாத்தப்படும்  செய்தி தளங்களில் தான் இவ்வாறான தவறான தகவல்கள் பல பரப்பட்டு வருகின்றன. உண்மைகளை தேடி அறியுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.