Jump to content

டிஸ்கவரி சேனலின் Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு: ஆகஸ்ட் 12-ம் தேதி ஒளிபரப்பு


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Jul__351055324077607.jpg

பியர் கிரில்ஸ் உடன் இணைந்து காட்டுக்குள்ளான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர்  வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற  நிகழ்ச்சி மேன் Vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். யாரும் செல்லாத  காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது, காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர்  கிரில்ஸ் காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி? என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார். 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பியர் கிரில்ஸ் உடன் காடுகளில் பயணம் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ், 180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு பிரதமர் மோடியின் மறுபக்கம் தெரிய போகிறது. விலங்கு பாதுகாப்பு மற்றும்  சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்திய வனப்பகுதிக்கு சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு  ஒளிபரப்பாகிறது. இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள்  அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி விளக்கம்:

இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, ‘நான் பல ஆண்டுகளாக காடு, மலை என இயற்கை சூழ்ந்த இடங்களில் வாழ்ந்துள்ளேன். இந்த காலங்கள் என்  வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின’ என்று கூறியுள்ளார். அரசியலை தாண்டி இயற்கையில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று  நினைத்த போது இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பு வந்ததால் அதை மறுக்காமல் ஏற்றேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

இயற்கையை பாதுகாப்பது, இயற்கையோடு இணக்கமாக வாழ்வது, உலகத்திற்கு இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியம் குறித்து காட்ட  வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பியர் கிரில்ஸ் உடனான இந்த பயணம் சிறப்பான அனுபவமாக இருந்தது.  அவர் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=513974

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி ManVsWild பியர் கிரில்ஸ்: காட்டுக்குள் என்ன செய்கிறார் இந்தியப் பிரதமர்?

#ManVsWildபடத்தின் காப்புரிமைDISCOVERY

டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான மேன் vs வைல்ட் ஷோவில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அத் தொடரின் நாயகன் பியர் கிரில்சுடன் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தோன்றுவார் என்பது இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

யார் இந்த பியர் கிரில்ஸ்?

பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர். ஆனால் இவருக்கு எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என்று பல முகங்கள் உண்டு.

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் நாயகன் இவர்தான். ஆள் அரவமற்ற காடுகளில், மலைகளில், பாலைவனத்தில், பனிப் பிரதேசத்தில், எரிமலை அருகில் தொலைக்காட்சி குழுவினருடன் இறக்கிவிடப்படுவார் பியர் கிரில்ஸ், பல கிலோ மீட்டர்கள் அந்தக் கடுமையான சூழ்நிலைகளில் பயணித்து, அங்கு கிடைக்கும் இயற்கையான, தாவர, மாமிச உணவுகளை உப்பு சப்பில்லாமல் சாப்பிட்டு உயிர் பிழைத்து, மனிதர்கள் வாழும் பகுதிக்கு எப்படி தப்பித்து செல்கிறார் என்பதே ஷோவின் ஈர்ப்பு.

இந்த சாகசப் பயணங்களுக்கு தம் படப்பிடிப்புக் குழுவினரோடு செல்வார் கிரில்ஸ்.

எல்லா சவால்களையும் முறியடித்து பியர் எப்படி உயிர்பிழைக்கிறார் என்பதே இந்த ஷோ. குறிப்பிட்ட நேரத்தில் சரியான திட்டமிட்ட இலக்கை கிரில்ஸ் அடையும்போது ஷோ முடியும்.

#ManVsWildபடத்தின் காப்புரிமைDISCOVERY

பிரிட்டனில் வெற்றிகரமாக ஓடிய இந்த ஷோ தற்போது சில ஆண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது. 15 பகுதிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஷோ 2006ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி ஒளிப்பரப்பானது.

தன்னுடைய பணிக் காலத்தில், காடுகள் மற்றும் மலைகளில் தான் கற்ற பாடங்களை நடைமுறையில் இவர் பயன்படுத்துவார். தன்னுடன் ஒரே ஒரு பையை மட்டுமே கொண்டு செல்லும் பியர் கிரில்ஸ், தண்ணீர், உணவு என எதையுமே கொண்டு செல்ல மாட்டார்.

பயணத்தின்போது வனாந்திரங்களில் தென்படும் உயிரினங்களை சாப்பிட்டும், ஓடை நீரை குடித்தும் இரவை கழிப்பார். இப்படியான ஒருவரோடு இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இணைந்தால் என்னாகும்?

நரேந்திர மோதியின் தெரியாத பக்கங்கள்

இன்று காலை டீஸர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பியர் கிரில்ஸ், 180 நாடுகளை சேர்ந்த மக்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தெரியாத பக்கங்களை தெரிந்துகொள்ள உள்ளனர் என்றும், சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் கலந்து கொள்கிறார் என்றும் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோதியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து பியர் கிரில்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் போது நரேந்திர மோதி ஷூட்டிங்கில் இருந்தாரா?

இந்திய காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இனி இந்த உலகத்துக்கு உண்மை தெரியவரும் என்றும், புல்வாமாவில் படையினர் கொல்லப்பட்ட நேரத்தில் பிரதமர் நரேந்திர மோதி பியர் கிரில்ஸுடன் ஷூட்டிங்கில் இருந்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்த ஷோவுக்காக பாஜக தொண்டர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். காரணம், ஷோவின் டீசர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்.

#ManVsWildபடத்தின் காப்புரிமைDISCOVERY

"வெல் கம் டூ இந்தியா"

4 வீல் டிரைவ் காரில் காடுகளுக்கு மத்தியில் பயணப்பட்டு கொண்டிருக்கிறார் நரேந்திர மோதி. பியர் கிரில்ஸ் ஆவலோடு காத்திருக்கிறார். பியரை பார்த்த மகிழ்ச்சியில், வெல் கம் டூ இந்தியா என்று வரவேற்கிறார் மோதி. இப்படியாக விரிகிறது அந்த ஷோவின் டீசர். பின்பு, அடர்ந்த வனப்பகுதிகளில் மோதியை அழைத்து செல்வது, தற்காலிகமாக தயாரிக்கப்பட்ட படகில் பயணிப்பது என பல சிலிர்ப்பூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

https://www.bbc.com/tamil/india-49149606

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, text

புலிக்கு... வந்த சோதனை.  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.