Jump to content

பாடா அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்.


Recommended Posts

Image may contain: one or more people

 

பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 
. 
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில் 
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ 
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற 
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய் 
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
- 2017

 

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 

ஓர வஞ்சமின்றி எல்லாத்துக்கும் அஞ்சலி பாடலாமே!

Link to comment
Share on other sites

Gowinநல்ல கருத்து. எனக்கு ஏனோ தோன்றாமல் போய்விட்டது. நன்றி நண்பரே. 

Link to comment
Share on other sites

BLACK JULY 1983 . கறுப்பு ஜூலை 1983 - வ.ஐ.ச.ஜெயபாலன்

நன்றி அருள்மொழிவர்மன், நன்றி நுணாவிலான். இத்தகைய அன்பு மட்டும்தானே தமிழ் கவிதைகளை வாழவைக்கிறது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடுகாட்டில் நின்று மனசு புலம்பினால் அது இப்படித்தான் இருக்கும்......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.