Jump to content

கைப்பிடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைப்பிடி

 
சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ என்று விட்டுவிட்டேன். இதனை ஓர் உதாரணத்திற்காகச் சொல்கிறேன். 
 
தொழில்நுட்பம் நம்மைவிடவும் படுவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்டத்திலாவது சலித்து நிற்கும் கணத்திலிருந்து நாம் முந்தைய தலைமுறை ஆள் ஆகிவிடுவோம். அதன் பிறகு எந்தக் காலத்திலும் அதை எட்டிப் பிடிக்கவே முடியாது. 
 
தகவல் தொழில்நுட்பம் மாதிரி மாறிக் கொண்டேயிருக்கும் துறைகளில் பணியாற்றும் நண்பர்கள் இதில்தான் கவனமாக இருக்க வேண்டும். சற்றே ஏமாந்தாலும் ‘பழைய ஆட்கள்’ ஆகிவிடுவோம். அதுவும் பதினைந்து இருபது வருட அனுபவங்கள் இருக்கிறது என்று சொல்கிறவர்கள் பல வீட்டு பிச்சை உணவைக் கலந்துண்டு வாந்தி எடுக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. ஒன்றில் ஆழமாகவும், பிறவற்றில் மேம்போக்காகவாவது அறிவிருந்தால்தான் வேலைச் சந்தையில் நம் மதிப்பைக் கூட்டும். அப்படி எல்லாவற்றிலும் வாய் வைத்த நாய் என்பதுதான் நம்மை தப்பிக்கவும் வைக்கும். 
 
‘சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்தான் என் ஏரியா’ என்று வெகு காலம் நினைத்துக் அதை மட்டுமே படித்துக் கொண்டிருந்தேன். இன்னொரு பக்கம் க்ளவுட் பயங்கரமாக சிறகு விரித்துக் கொண்டிருந்தது. அப்பொழுதே சுதாரித்து க்ளவுடின் அடிப்படை அம்சங்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என விட்டுவிட்டேன். திடீரென்று இனி சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்டும், க்ளவுட்டும் இணையும் என்றார்கள். தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. ஒவ்வொரு தொழில்நுட்பமும் இப்படித்தான். ஏதாவதொரு கட்டத்தில் இன்னொரு நுட்பத்துடன் இணையும். வடிவேலு சொல்வது போல- ரயில் நிலையத்து தண்டவாளங்களைப் போல எப்பொழுது கட்டிப்பிடிக்கும், எப்பொழுதும் பிரியும் என்றே தெரியாது. அதனால், புதிய சொற்கள் காதில் விழும் போதே ‘அது என்ன’ என்கிற ஆர்வக்கோளாறு வந்துவிட்டால் இன்னமும் கால ஓட்டத்திலேயே இருக்கிறோம் என்று பொருள்.
 
பிக்டேட்டா, க்ளவுட் என்றெல்லாம் கேள்விப்படும் போது சர்வதேச சஞ்சிகைகளில் வரும் சில கட்டுரைகளை வாசித்தால் ஓரளவுக்கு பாதை புலப்பட்டுவிடும். 
 
ஆரக்கிள் ஆப்ஸில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் ‘இதில்தான் பணியாற்றுகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்படிக் குறிப்பிடுவது அதே துறையில் பணியாற்றும் சில நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஏதேனும் சந்தேகமெனில்- கூச்சமேயில்லாமல் அழைத்துக் கேட்பேன். சமூக வலைத்தளங்களின் பயனே அதுதானே?
 
இப்பொழுது டேட்டா அனலிடிக்ஸ் துறையிலும் சில நண்பர்களைப் பிடித்து வைத்திருக்கிறேன். ஜெய்சங்கர் எக்ஸெல் புலி. பூபதியும் அதே மாதிரிதான். மண்டை காயும் போது அழைத்துப் பேசினால் ‘அனுப்புங்கண்ணா முடிச்சு அனுப்புறேன்’ என்று வாங்கி வேலையை முடித்துக் கொடுத்துவிடுகிறார்கள். கொச்சின் ராதாகிருஷ்ணன் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அவரது மகன் ஐஐடி சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதாகிருஷ்ணன் இன்னமும் படிப்பின் மீதான மோகம் குறையாமல் பிக்டேட்டாவில் ஐஐஎம்மில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். செம மண்டை. ஒரே பிரச்சினை அவர் சொல்வதெல்லாம் தலைக்கு மேல் வெள்ளம் போவது போலவே இருக்கும்.
 
கடந்த ஒரு வருடத்தில் பிக் டேட்டா, டேட்டா அனலிடிக்ஸ் ஆகியவற்றில் ஒரு கைப்பிடி அளவுக்குக் கூட கற்றுக் கொள்ளவில்லைதான் என்றாலும் நம் பணி சார்ந்த, துறை சார்ந்த நெட்வொர்க்கை அமைத்து வைத்துக் கொள்வது நம்மைக் கூர்படுத்திக் கொள்ள உதவும் என்பது நன்கு புரிந்திருக்கிறது.
 
வாசிப்பது, நட்பு வட்டாரத்தை விரிவாக்கம் செய்வது என எல்லாவற்றையும் விட இரண்டு முக்கியமான இணைய தளங்கள் இருக்கின்றன. சுயகற்றலுக்கு உதவக் கூடிய தளங்கள்.
 
 
வெறுமனே அலசிப்பாருங்கள். இந்தத் தளங்களில் கிட்டத்தட்ட அனைத்துத் துறை சார்ந்த படிப்புகளும் இருக்கின்றன. சான்றிதழ் தேவையெனில் காசு கொடுக்க வேண்டும். அறிவை மட்டும் வளர்த்துக் கொள்வதாக இருந்தால் இலவசம்தான். பெரும்பாலும் எந்த நிறுவனத்திலும் சான்றிதழ்களை மதிப்பதேயில்லை. ‘தெரியுமா? தெரியாதா?’ என்று மட்டும்தான் கேட்கிறார்கள்.  அதனால் சான்றிதழ்கள் அவசியமேயில்லை.

வோக்ஸ்வேகன் நிறுவனத்தில் பணியாற்றும் சங்கர் என்றொரு நண்பர் ‘இதை நிசப்தத்தில் எழுதுங்க’ என்று வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் சில நண்பர்களிடம் இத்தளங்களைப் பற்றித் தெரியுமா என்று கேட்டால் பலரும் தெரியவில்லை என்றே சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறை என்றில்லை ஆசிரியர்கள் உட்பட அத்தனை பேருக்கும் பயன்படும் தளங்கள் இவை.
 
இரண்டு தளங்களிலும் கணக்கு வைத்திருக்கிறேன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன். முதலில் இத்தளங்களில் என்ன இருக்கின்றன என்று அலசி ஆராய்ந்துவிட வேண்டும். பிறகு தமக்கு பொருத்தமான, விருப்பமான பாடங்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு அதன் பின்னர் ‘எப்பொழுது படிக்க போகிறோம்’ என்கிற திட்டமிடலைச் செய்து கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் உணர்ச்சிவசப்பட்டு, காணாத நாய் கருவாட்டைக் கண்டமாதிரி எல்லாவற்றையும் மேயத் தொடங்கினால் உருப்படியாக எதையுமே படித்து முடிக்க மாட்டோம். 
 
சமீபத்தில் ஒருவர் ‘எங்கீங்க எனக்கு நேரமே இல்லை’ என்றார். ஆனால் இராத்திரி ஒரு மணிக்கு ஃபேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்கிறார். நேரமெல்லாம் நாமாக ஒதுக்கிக் கொள்வதுதான். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். கடலலளவுக்குக் கற்றுக் கொள்ளலாம். ‘அப்புறம் ஏன் கைப்பிடி அளவுக்குக் கூட நீ கற்றுக் கொள்ளவில்லை?’ என்று குறுக்குசால் ஓட்டாமல் அறிவை வளர்த்துக் கொள்ளவும். ஆமென்!
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.