Jump to content

அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர் திகாம்பரம்


Recommended Posts

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான விடயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இன்று காலை 7.30 அளவில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது.

இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்தார்.

இதன்போது, கருத்து வெளியிட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இதற்கான நிதியை தனது அமைச்சிலிருந்து வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சுக்குட்பட்ட நிதியிலிருந்து அதனை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனி திகாம்பரம், அப்படியான ஒரு ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு விடயத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்ய வேண்டாம் என்றும் நவீன் திசாநாயக்கவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர், அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

எவ்வாறாயினும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு விடயத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாத பட்சத்தில் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை கைவிட நேரிடும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி அரசியல் கட்சியாக அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கு முன்னர் இந்த கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.

இல்லாத பட்சத்தில் புதிய கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/221355/அமைச்சரவை-கூட்டத்தில்-இருந்து-வெளியேறிய-அமைச்சர்-திகாம்பரம்

Link to comment
Share on other sites

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிக்க முடியாதளவு பொருளாதாரம் வீழ்ச்சி -தினேஷ் 

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிப்பதற்கு முடியாதளவுக்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, எனினும் அரசாங்கத்தின் நிகழ்வுகளுக்கு கோடிக்கணக்கான பணம் விளம்பரத்துக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் என்பது மேலதிக சட்டமாகும். அதனை பயன்படுத்திக்கொண்டு தேவையான  சட்ட திட்டங்களை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு அதனை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. தாக்குதல் இடம்பெற்று 3மாதம் கடந்தும் நாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை இந்த அமைச்சரவைக்கு முடியாமல் போயுள்ளது. அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்ல நேரம் நெருங்கிவருவதால் இதுதொடர்பாக சிந்திப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கின்றது. 

அதேபோன்று கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தின் பிரகாரம்  செயற்படுத்தி இருந்தால் இந்த அவசரகால சட்டத்தை மேலும் நீடித்துக்கொள்ள தேவை ஏற்பட்டிருக்காது. அத்துடன்  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை இன்னும் அரசாங்கத்துக்கு கீழ் கொண்டுவர முடியாமல் போயுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/61637

Link to comment
Share on other sites

பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா? ; சபையில் திலகராஜ் கேள்வி

தோட்டத்தொழிலாளர்களுக்கான. 50ரூபா  கொடுப்பனவு தொடர்பில் சபை முதல்வர் வழங்கியிருக்கும் பதிலும் பிரதமர் அமைச்சரவைக்கு வழங்கியிருக்கும் முன்மொழிவும் வேறானவையாக இருக்கின்றது. 

அத்துடன் பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனி பிரதிநிதியா எனவும் சந்தேகம் எழுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட எம்.பி எம். திலகராஜ் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன விசித்திரமான வினா ஒன்றை எழுப்பியுள்ளார். அதாவது அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டும் என. அதற்கு பதிலளித்த சபை முதல்வர் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50ரூபா  கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியருப்பதாக கூறியுளலளார். 

ஆனால் அதற்காக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்ய 600 மில்லியனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. 

உண்மையில் 50 ரூபா  என்ற தொகைக்கு வெளியில் இலங்கையின் முன்னணி ஏற்றுமதி கைத்தொழிலான பெருந்தோட்ட துறையில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதனை வலியுறுத்தவே நாம் அரசாங்கத்தை தலையிட செய்தோம். 

எனவே தற்போதைய முறைமையில் இருந்து பெருந்தோட்டத்துறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான அமைச்சர் நவீன திசாநாயக்க மக்களின் பிரதிநிதியாக அல்லாது கம்பனிகளின் பிரதிந்தியாகவே செயற்பட்டு வருகிறார். எனவே இந்த துறை சிறுதோட்ட தொழிலாக மாற்றப்படல் வேண்டும். எதிர்வரும் தேர்தல்கள் எதுவாயினும் எமது பிரதான நிலைப்பாடு இதுவாகவே இருக்கும். 

எனவே அரசாங்கம் பாராளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/61657

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.