Jump to content

கீரிமலைப் பகுதியில் நடமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் புனிதத் தன்மையை கெடுக்கும் செயற்பாடு – யாழ்.பல்கலை விரிவுரையாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg

கீரிமலைப் பகுதியில் நடமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் புனிதத் தன்மையை கெடுக்கும் செயற்பாடு – யாழ்.பல்கலை விரிவுரையாளர்

யாழ். வலி.வடக்கு கீரிமலைப் பகுதியில் நடமுறைப்படுத்தப்படவுள்ள சுகாதார நில நிரவுகை திட்டம் அப்பகுதியில் புனிதத் தன்மையையும், எதிர்கால அபிவிருத்தியையும் சிதைக்கும் திட்டம் என யாழ்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வராஜா இரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வலி.வடக்கு கீரிமலைப் பகுதியில் நடமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் சுகாதார நில நிரவுகை திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் ஊடாக யாழில் உள்ள 17 உள்ளுராட்சி சபைகளினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து காங்கேசன்துறை சீமொந்து தொழிற்சாலைக்காக சுன்னாம்புக்கல் அகழ்வின் போது உருவான பாரிய பள்ளத்தில் கொட்டி நிரப்பும் திட்டமாகும்.

நிலத்தடி நீருக்கு பாதிப்பு இல்லாமல் நிலத்தின் கீழ் பொலுத்தீன் பரவப்பட்டு குப்பைகள் போடப்படும். இருப்பினும் அந்த குப்பை கிடங்குகள் நிரப்புவதற்கு சுமார் 25 தொடக்கம் 30 வருட காலம் எடுக்கும்.

இந்த காலப்பகுதிக்குள் அந்த குப்பைகளை நாடி வரும் பறவைகள், விலங்குகளால் ஏற்படப்போகும் சுகாதார சீர்கோடுகள் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 5 ஆலயங்கள், சித்தர்களின் சமாதிகள் போன்றவற்றின் புனிதத் தன்மையினையும் இல்லாமல் செய்துவிடும். மேலும் அந்த குப்பை கிடங்கின் ஊடாக வெளிவரும் துர்நாற்றம் அந்த பகுதியில் மக்கள் அமைதியான முறையிலும், சுகாதார முறையில் வாழுவதற்கு தடையாக அமையும்.

எதிர்காலத்தில் வலி.வடக்கில் வரப்போகும் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறை முகங்களல் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்படப்போகும் அபரிவிதமான அபிவிருத்திக்கு இத்திட்டம் தடையாக மாறும். தூர நோக்கோடு சிந்திப்பவர்கள் வடக்கின் முற்றமாக கருதப்படும் வலி.வடக்கில் இவ்வாறான ஒரு திட்டத்தினை கொண்டுவர முனையமாட்டார்கள்.

இந்நிலையில் இராணுவ உயர் பாதுகாப்பு பகுதியினையும் இணைத்து நடமுறைப்படுத்தப்படும் இந்த சுகாதார நில நிரவுகை திட்டம் எவ்வாறு உரிய நியம நிதிப்படி நடக்கும் என்று யாராலும் உறுதிபட தெரிவிக்க முடியாது.

யாழ்.மாவட்டத்தினை பொறுத்தவரையில் குப்பை பெரும் பிரச்சினையாக உள்ள போதும், இதனை கொட்டுவதற்கு ஒரு பொருத்தமான இடம் தேவை என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்காது.

ஆனால் குப்பை கொட்டுவதற்கு கீரிமலை பகுதி தெரிவு செய்யப்பட்டதே இங்கு எழுந்துள்ள பிரச்சினையாகும். இத்திட்டத்தினை நடமுறைப்படுத்துவதற்கு தென்மராட்சி மற்றும் புநகரி பகுதிகளில் தகுந்த இடம் உண்டு. இது தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றினை நியமித்து தீர்க்கமான முடிவினை எடுக்க முடியும்.

எனவே கீரிமலைப் பகுதியில் இத்திட்டம் நடமுறைப்படுத்துவதன் தார்பரியத்தை புரிந்து கொண்டு அனைவரும் நடக்க வேண்டும்” என கூறினார்.

http://athavannews.com/கீரிமலைப்-பகுதியில்-நடமு/

 

Link to comment
Share on other sites

சிங்களவனுக்கு அவல் கிடைத்துவிட்டது. இனி தென்னிலங்கை குப்பைகள் எல்லாம் கீரிமலைநோக்கி படையெடுத்து வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.