Jump to content

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

vikari.jpg

பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். 

 

https://www.virakesari.lk/article/61677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டம்….

August 3, 2019

Jaffna-hindu-Protest.jpg?resize=696%2C45இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதனூடாக இலங்கைவாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/127988/

Link to comment
Share on other sites

ஓர் எதிர்ப்பு நடவடிக்கையைச் செய்யும் போது அதில் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செய் வதே சிறப்பானது. அது கனதியாகவும் இருக்கும்.

இதைவிடுத்து அவரவர் தத்தம் கடன் கழிப்புக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவ தென்பது இந்து மதத்துக்கு ஆரோக்கியமான தல்ல என்பதை சம்பந்தப்பட்ட இந்து அமைப்புகள் சிந்தித்தாக வேண்டும்.

துண்டம் துண்டமாக கூட்டம் நடத்துவது, துண்டம் துண்டமாக எதிர்ப்புப் போராட்டம் செய் வதானது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுலயும் மாவையர் நிற்கிறமாதிரி இருக்கு 

இது சிங்கள பெளத்த நாடு என்று சொன்ன ஆட்களே நம்ம கிட்ட இருக்கு அப்படி இருக்க இந்த மெளனமான  போராட்டமென்பதே தோல்வியடையும் என்பது எல்லோருக்கும் தெரியும் 

சில நேரம் இந்த போராட்டத்த வைத்து மாவையர் போர் வெடிக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.

20190803_092209.jpg

அந்த அமைப்­பின் ஏற்­பாட்­டில் நல்லை ஆதீ­னம் முன்­பாக நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்று  முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

போராட்­டத்­தின் முடி­வில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­து­வ­ரும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் வர­லாற்­றுக் காலம் முதல் அமைக்­கப்­பட்­டி­ருந்த இந்து ஆல­யங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தும் ஆலய வளைவு உடைக்­கப்­ப­டு­வ­தும், பௌத்­தர்­கள் வாழ்ந்­தி­ராத பிர­தே­சங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­டு­வ­தும் இலங்கை வாழ் இந்­துக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யி­ருப்­பதை நன்கு உணர்ந்த நிலை­யில் இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­ய­மா­னது அமைதி வழி­யில் மேற்­படி அதர்ம செயல்­க­ளைக் கண்­டித்­தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தி­யும் அகிம்மை முறை­யில் கவ­ன­வீர்ப்பை இந்து சம­யப் பேர­வை­யு­டன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளது.

இலங்­கை­யின் ஜனாதிபதி, பிரதமர் மற்­றும் இந்­திய தலைமை அமைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் இந்து சமய விவ­கார அமைச்­சர் ஆகி­யோ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு இந்­துக்­கள் அனை­வ­ரும் அச்­ச­மின்றி சமய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தி உத­வு­மாறு தய­வாக வேண்­டு­கின்­றோம்.

இலங்கை வேந்­தன் இரா­வ­ணண் காலம் முதல் இந்­துக்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு பாரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்த கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் பகு­தி­யை­யும் அங்­கி­ருந்த ஆல­யங்­க­ளை­யும் தடை­யே­து­மின்றி மீள­வும் அமைத்து வழி­பாடு செய்­ப­வ­தற்­கும் இந்­தப் பகுதி சைவத் தமி­ழ­ரின் நிர்­வா­கத்­தின் கீழ் தொடர்ந்து இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தல். இந்­தப் பிர­தே­சத்­துக்கு அண்­மை­யில் பௌத்த விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடுத்­தல். வவு­னியா வெடுக்­கு­நாறி சிவன் ஆல­யத்­துக்­குச் செல்­லும் பாதை­யூ­டாக தடை­யின்றி போக்­கு­வ­ரத்­துச் செய்­வது, அடி­வா­ரத்­தி­லி­ருந்து மலை உச்­சிக்­குச் செல்­வ­தற்­கான ஏணிப் படி­களை அமைக்க பொலி­ஸா­ரும் தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் தடை ஏற்­ப­டுத்­தாது இருத்­தல்.

மத­நல்­லி­ணக்­கத்­தைச் சிதைக்­கும் நோக்­கில் இடித்து அழிக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திருக்­கே­தீச்­சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்­தில் சமா­தா­ன­மான முறை­யில் மீள அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து மத நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­தல்.

தொல்­லி­யில் திணைக்­க­ளம் நடு­நி­லைமை தவறி பக்­கச்­சார்­பா­கச் செயற்­பட்டு பௌத்த வர­லாற்­றுச் சின்­னங்­கள் காணப்­ப­டாத இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தி வரு­வதை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தோடு அத்­தி­ணைக்­க­ளத்­துக்கு தகு­தி­யான சைவத் தமி­ழர் களை­யும் நிய­மித்து குறித்த திணைக்­க­ளம் பக்­கச்­சார்­பின்றி செயற்­படு வதை உறு­திப்­ப­டுத்­து­தல்.

20190803_093332.jpg

மத­மாற்­றங்­க­ளைத் தடை செய்­தல்.

முல்­லைத்­தீவு செம்­ம­லைப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­யா­தி­ருத்­தல்.

நீரா­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தி­யில் பௌத்த மத வழி­பாட்­டுத் தலங்­கள் இருந்­த­மைக்­கான ஆதா­ரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்­க­ளமே கூறி­யுள்ள நிலை­யில் அங்கு விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடை செய்­ய­தல்.

வடக்கு, கிழக்கு பிர­தே­சத்­தில் பௌத்த மேலா­திக்க செயற்­பா­டு­களை நிறுத்­து­தல்.

மேலே விவ­ரிக்­கப்­பட்ட எமது நியா­ய­மான கோரிக்­கை­களை சாத­க­மா­கப் பரி­சீ­லித்து அவற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து மத நல்­லி­ணக்­கத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத் தித் தரு­மாறு அன்­பு­டன் வேண்­டு­கின்­றோம், என்­றுள்­ளது.

 

https://www.virakesari.lk/article/61904

Link to comment
Share on other sites

தேர்தல் வருவதால் கொழுந்துவிட்டு எரியும் இந்து சமய பிரச்சனைகளை தமிழரசுக்கட்சி கும்பல் கைகளில் எடுத்துள்ளனர்.

ஆனால் இந்துக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரையில் இதுபோன்ற ஏமாற்றுக் கும்பல்களும் இருக்கத்தான் செய்யும்!

Link to comment
Share on other sites

On 8/3/2019 at 12:32 PM, கிருபன் said:

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டங்கள் வெற்றியளிக்கட்டும்!

இந்த போராட்டத்துக்குள்ளேயும் ஆர்னால்ட் தன்ற கேவல புத்திய காட்டிருக்கார்! அதெப்பிடி எந்தவொரு மதமும் தோன்ற முதல்ல இருந்த இந்து சமயம் "எம் மதமும் சம்மதம்" என்று சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று கூறுகின்ற நம்மவர் களில், சிலர் இலங்கையின் ஆதிச் சமயம் இந்து சமயம் என்ற உண்மையைக் கூறமறுக் கின்றனர்.
 
அது மட்டுமன்றி, அதன் தொன்மையை அங்கீகரிப்பதன் ஊடாகவே இலங்கையில் தமிழினம் வாழ முடியும் என்ற நிதர்சனத்தையும் மறந்து போகின்றனர்.
 
இதுவே மிகப்பெரிய துரதிர்ஷ்டமாகும்.
 
அதாவது இந்து சமயம் ஆதியானது என்பதை யாழ்ப்பாண நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ விமல தேரர் குறிப்பிட்டுள்ளதுடன் இந்து சமயத்தை எதிர்க்கின்றவர்கள் உண்மையான பிக்குகள் அல்ல எனவும் அவர் துணிச்சலோடு கூறியுள்ளார்.
 
அதேநேரம் கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பெளத்த மதத்துக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
 
ஆனால் மன்னார் ஆயர் அவர்கள் திருக்கேதீச்சரத்து நுழைவாயில் வளைவை நிறுவு வதற்குத் தடை செய்து வருவதுடன் மதத்தின் பெயரால் தனக்கு இருக்கக்கூடிய மரியாதைத் தகைமையினைப் பயன்படுத்தி, மன்னார் பிரதேச சபைத் தவிசாளரான முஸ்லிம் இனத்தவரைத் தனது ஆயர் இல்லத்துக்கு அழைத்து;
 
திருக்கேதீச்சர நுழைவாயில் வளைவு அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கூறியுள்ளார். முஸ்லிம் இனத்தவரான மன்னார் பிரதேச சபைத் தலைவர் தமது இனத்துக்கு இப்போ திருக்கின்ற பாதகமான சூழ்நிலையில், வளைவுக்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளார்.
 
நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினம் உருப்படுமா என்பதை தமிழ் மக்கள் முத லில் தீர்மானிக்க வேண்டும்.
 
Link to comment
Share on other sites

விகாரைகள் அமைப்பதை எதிர்ப்பதோடு மதம்மாற்றுவதில ஈடுபடும் கிறீஸ்தவ மதம்மாற்ற   வெறியர்கள் கும்பலையும் ஒருகை பாக்கவேண்டிய தேவை இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.