Jump to content

பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.!

display-1564657731.jpg

சென்னை : தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இணைந்து முக்கிய தொடரில் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார்.

சிங்கப்பூர் அணி டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டியில் ஐந்து நாடுகளுடன் விளையாடியது. சிங்கப்பூர் அணிக்காக ஆடினார் சுரேந்திரன் சந்திரமோகன் என்ற தமிழர்.இந்த தொடரில் சிங்கப்பூர் அணி முதல் இடம் பெற்று கோப்பை வென்றது. அதற்கு முக்கிய காரணம் சுரேந்திரன் தான்.

ஐந்து நாடுகள்

டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டித் தொடரில் சிங்கப்பூர், நேபாள், கத்தார், குவைத், மலேசியா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன. இந்த தொடர் ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச டி20 போட்டிகளாக நடந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றது. மூன்று போட்டிகளில் வெற்றி இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் தலா நான்கு போட்டிகளில் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதின.

இதில் சிங்கப்பூர் - குவைத் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அது தவிர மீதமிருந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற சிங்கப்பூர் அணி ஏழு புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து கோப்பையை வென்றது.

சுரேந்திரன் அட்டகாசம்

சுரேந்திரன் சந்திரமோகன் இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் தன் அணியில் அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். சிங்கப்பூர் அணியின் துவக்க வீரராக களம் இறங்கிய சுரேந்திரன் 3 டி20 போட்டிகளில் 105 ரன்கள் குவித்தார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.

யார் இந்த சுரேந்திரன் ?

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமகளூர் கிராமத்தில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் சுரேந்திரன். அங்கே வேலை செய்யவே சென்றாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்து 2013ஆம் ஆண்டில் அந்த அணியில் சேர்ந்தார். பேட்ஸ்மேனாக தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வந்த அவர், 2019 ஆசிய பகுதி உலகக்கோப்பை டி20 தொடரிலும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

https://tamil.mykhel.com/cricket/surendran-chandramohan-from-tamilnadu-stars-for-singapore-cricket-in-asia-final/articlecontent-pf45009-016366.html

Link to comment
Share on other sites

14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெருமகளூர் கிராமத்தில் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றார் சுரேந்திரன். அங்கே வேலை செய்யவே சென்றாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் சேர முயற்சி செய்து 2013ஆம் ஆண்டில் அந்த அணியில் சேர்ந்தார். பேட்ஸ்மேனாக தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வந்த அவர், 2019 ஆசிய பகுதி உலகக்கோப்பை டி20 தொடரிலும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

பெருமையான விடயம். வாழ்த்துக்கள் !

இவருக்கு சிங்கப்பூர் நாட்டின் குடி உரிமை கொடுத்தாலும் கொடுக்கும். ஆனால், பிறந்த நாட்டில் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் சுரேந்திரன்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

பாராட்டுக்கள் சுரேந்திரன்.......!   👍

இன்னும் ஓர் நிகழ்வு ஆணழகன் போட்டிக்கு வெளிநாடு சென்ற ஓர் தமிழனுக்கு இலங்கையில்  நாலு மாபிள் பிளேட் கொடுக்கப்பட்டுள்ளது எவ்வளவு பெருமையா  இருக்கு இலங்கையை நினைக்கையில் 🥴🥴🥴🥴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.