Jump to content

அமர்நாத் யாத்ரிகர்கள் உடனே வெளியேற காஷ்மீர் அரசு உத்தரவு: "பயங்கரவாத அச்சுறுத்தல் காரணம்"


Recommended Posts

அமர்நாத் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில்கொண்டும் அமர்நாத் பயணிகள் உடனடியாக பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறவேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மாநில உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி நிலவுவது குறிப்பிடத்தக்கது.
 

இதனிடையே, இந்திய ராணுவத்தின் பொதுக் கட்டளை அதிகாரி கே.ஜே.எஸ்.தில்லான் இன்று வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநில கோடைகாலத் தலைமையகமான ஸ்ரீநகரில் நடத்திய செய்தியாளர் கூட்டம் ஒன்றில் காஷ்மீரில் அமைதியைக் குலைக்க பாகிஸ்தான் ராணுவம் முயல்வதாக குற்றம்சாட்டினார்.

 
Government orderபடத்தின் காப்புரிமை Government of Kashmir

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆட்கொல்லி நிலக் கண்ணி வெடியும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரைஃபிள் துப்பாக்கியும் அமர்நாத் பயணத் தடத்தில் இந்தியப் படையால் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஐ.இ.டி. எனப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு, டெலஸ்கோப் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டதாக இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அமர்நாத் பாதையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எம் 24 வகை ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றும் செய்தியாளர் சந்திப்பில் காட்டப்பட்டது.

https://www.bbc.com/tamil/india-49207632

 

M-24 அமெரிக்க ஸ்நைப்பர் ரக துப்பாக்கி, மற்றும் பாகிஸ்தான் தொழிற்சாலை அடையாளங்களுடன் கூடிய கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் இந்தியாவிற்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகள் அமர்நாத் யாத்திரையை கெடுக்கும் வகையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பெரும் தாக்குதல் முயற்சி இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் பயன்படுத்த இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணிவெடி மற்றும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-24 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் அமைதியை கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சினார் படைப்பிரிவு கமாண்டர் மற்றும் இந்திய ராணுவத்தின் லெப்டினண்ட் ஜெனரலான கே.ஜே.எஸ்.தில்லான், பாகிஸ்தானின் வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணிவெடி மற்றும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம்-24 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாதிகளுடன் இணைந்து பாகிஸ்தான் ராணுவமும் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். 

முன்னதாக, காஷ்மீரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 10,000 துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மேலும், 25 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது. அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அமர்நாத் கோயிலுக்கு யாத்திரை செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் மாநிலம் வந்துள்ள சுற்றுலா பயணிகளும் திரும்பிப் போகுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் திரும்பிப் போக காஷ்மீர் அரசு அறிவுறுத்தியுள்ளது. 

https://www.ndtv.com/tamil/army-says-confirmed-intel-of-terrorists-backed-by-pakistan-army-trying-to-disrupt-amarnath-yatra-2079416

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரில்.... நடக்கும், வேடிக்கைகளை பார்க்க,
பொய்யிலே பிறந்து... பொய்யிலே... வளர்ந்த, 
இந்திய அரசியல் வாதிகளின் நாடகமாவே... எனக்கு தெரிகின்றது.
தங்களது கட்சியின் செல்வாக்கை  அதிகரிக்க, பொய்யான பிரமையை... உருவாக்கி,
முட்டாள்  வட இந்தியர்களை... ஏமாற்றுகின்றது  என்றே... நினைக்கின்றேன்.

இப்படியான செயல்களால்... கோபம் கொண்ட  பாகிஸ்தான், 
சீனாவுடன்  கூட்டு சேர்ந்து... இந்தியாவுக்கு கொடுக்கத்  தொடங்கினால்...
அதனை இந்தியா... தாங்க மாட்டாது என்பதே, உண்மை நிலவரம்.  

புலி வருது, புலி வருது... என்று மக்களை பயப்படுத்தினால்,
உண்மையாகவே... (பாகிஸ்தான், சீனா) புலிகள் ஊருக்குள் வந்து விடும். 
கவனம்... இந்திய அரசியல்வாதிகளே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.