Jump to content

`டைப் செய்ய வேண்டாம்; நினைத்தாலே போதும்!’ - ஃபேஸ்புக்கின் அடுத்த `பிக்’ ப்ளான்


Recommended Posts

`இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் - கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிலிப்சிபி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மூளையில் எலெக்ட்ரோகார்டிகோகிராஃபி கொண்டு அவர்கள் மூளையின் செயல்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. அப்போது, அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு சத்தமாகப் பதிலளிக்குமாறு கூறப்பட்டது. நோயாளிகள் பேசும்போது, மூளையின் செயல்பாடுகளை அல்காரிதம் பதிவுசெய்தது. 76 சதவிகிதம் அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே, அந்த வார்த்தைகளை அந்த அல்காரிதம் சரியாகக் கணித்திருக்கிறது. இதன்மூலம், பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாகக் கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக். இது விரைவில் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

https://www.vikatan.com/technology/gadgets/facebook-is-getting-closer-to-reading-your-mind

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக்கின் கனவு: மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் கருவியை உருவாக்க திட்டம்

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைMICHAEL BRENNAN

மக்கள் மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் திறனுடைய கருவியை உருவாக்கும் திட்டம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.

மூளை செயல்பாட்டை பேச்சாகப் புரிந்துகொள்ளும் இயந்திர அல்கோரிதம்களை உருவாக்கும் ஆய்வுக்கு ஃபேஸ்புக் நிதி உதவி அளித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் கைகால் வலிப்பு நோயாளிகளில் சிலருக்கு மூளையில் எந்த இடத்தில் வலிப்புக்கான மூலம் உருவாகிறது என்பதை பதிவு செய்வதற்காக மூளையில் மின் முனைகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய நோயாளிகளின் உடலில் இந்த தொழில் நுட்பம் வேலை செய்தது.

நிமிடத்திற்கு 100 சொற்களை புரிந்துகொள்ளும் வகையில் உடம்புக்குள்ளே பொருத்தப்படும் தேவை இல்லாமல், வெளியிலேயே அணிகிற கருவி ஒன்றை கண்டுபிடிக்க முடியும் என்று ஃபேஸ்புக் நம்புகிறது.

தசை சுருக்கம்

எளிய, பல விடைகளைக் கொண்ட கேள்விகள் சிலவற்றுக்கு சத்தமாக விடையளிக்கும்படி நோயாளிகளிடம், சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டனர்.

பேச்சு திறனிழந்தோருக்கு இந்த பணி உதவும் என்று எட்டி சாங் (வலது) மற்றும் டேவிட் மோசஸ் நம்புகின்றனர்.படத்தின் காப்புரிமைUCSF Image captionபேச்சு திறனிழந்தோருக்கு இந்த பணி உதவும் என்று எட்டி சாங் (வலது) மற்றும் டேவிட் மோசஸ் நம்புகின்றனர்.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியை, 75 சதவீத முறையும், அவர்கள் தேர்ந்தெடுத்த விடையை, 61 சதவீத முறையும் அடையாளம் காண்பதற்கு அல்காரிதம்கள் கற்றுக்கொண்டன.

"இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையில் பேச்சை குறிவிலக்கம் (டிகோடிங்) செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது" என்று தெரிவிக்கும் பேராசிரியர் எட்டி சாங், "இங்கு ஒருவர் கேட்கின்ற கேள்விகள், அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில்கள் என உரையாடலின் இரு பக்கங்களையும் குறிவிலக்கம் (டிகோடிங்) செய்வதற்கான முக்கியத்தவத்தை இதில் காட்டுகிறோம்" என்கிறார்.

"பேச்சு என்பது ஏதோ வெற்றிடத்தில் தோன்றுவது அல்ல என்கிற நமது நம்பிக்கையை இது உறுதி செய்கிறது. பேச்சு குறைபாடு உடைய நோயாளிகள் சொல்ல முயல்வதை குறிவிலக்கம் (டிகோடிங்) செய்கிற எந்தவொரு முயற்சியும், அவர்கள் செய்தி பரிமாற முயலுகிற எல்லா பின்னணியையும் கணக்கில் எடுத்துகொண்டு மேம்படுத்தப்படும் என்று அவர் விளக்குகிறார்.

"தற்போது, எஞ்சிய கண் அசைவுகள் அல்லது தசை சுருக்கத்தை கணினி இடைமுகத்தை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தி, பக்கவாதத்தால் பேச முடியாமல்போன நோயாளிகள் மெதுவாக சொற்களை செல்வது குறைக்கப்பட்டுள்ளது" என்கிறார் எட்டி சாங்.

"ஆனால், பலவேளைகளில் சரளமாக பேசுவதற்கு தகவல்களை வழங்க வேண்டிய திறன் அவர்களது மூளையில் இன்னும் உள்ளது. அவர்களிடம் இருப்பதை வெளிப்படுத்த நமக்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது" என்று சாங் குறிப்பிடுகிறார்.

"பாதுகாப்பான இடம்"

விஞ்ஞானி டேவிட் மோசஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். "குறைவான சொற்களை பயன்படுத்தி இதனை நாம் சாதித்துள்ளதை மனதில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஆனால், எதிர்கால ஆய்வுகளில் மூளையின் இருப்பதை மொழிபெயர்ப்பதில் நெகிழ்வுத்தன்மையும், துல்லியமும் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்".

ஒயர்படத்தின் காப்புரிமைUCSF

"நிகழ்நேரத்தில் 1,000 சொல் பட்டியலில் நிமிடத்திற்கு 100 சொற்களை குறிவிலக்கம் செய்யலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சொல் தவறு விகிதம் 17%-க்கு குறைவாக இருக்கும்" என்று ஃபோஸ்புக் அதன் வலைப்பூவில் எழுதியுள்ளது.

"பேச்சை இழந்த நோயாளிகளுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக மின்முனைகள் பொருத்துவதை பயன்படுத்தி இந்த கருத்தை நிரூபிப்பதன் மூலம், அல்கோரிதம்களை குறிவிலக்கமாக்குவதிலும், வெளியில் அணியக்கூடிய கருவி உருவாக்குவதில் நமது மேம்பாடுகள் பற்றி சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தகவல் அளிக்கும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி திரையில் பார்ப்பதைவிட அல்லது மடிக்கணினியை திறப்பதைவிட, கண்களை பார்த்துகொண்டு, எதையும் தவறவிடாமல் பயனுள்ள தகவல்களையும், பின்னணியையும் நம்மால் பராமரிக்க முடியும்.

இந்நிலையில், மூளை ஹேக்கிங் கருவியை மனிதரிடத்தில் சோதனை செய்வதை தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென எலன் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இத்தகைய ஆய்வுகளின் அறநெறிகளையும், எதிர்காலத்தில் இது வழங்கும் வாய்ப்புகளையும் ஆராய்வதற்கான நேரம் இது என்று களப்பணியாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

"எனக்கு சுதந்திரமான எண்ணத்திற்கும், கற்பனைகளுக்கும், அவற்றின் தோற்றத்திற்குமான பாதுகாப்பான இடம் மூளை" என்று நியூரோ அறநெறியிலாளர் பேராசிரியர் நிட்டா ஃபராஹானி எம்ஐடி மீளாய்வில் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/science-49191733

இது சரி வந்தால் எனக்கு ரொம்ப சுலபமா இருக்கும், ஆனால் நினைக்கிறதெல்லாம் எழுதினால் மோசமா இருக்குமே! எடிற் பண்ற வசதியையும் தாங்கடாப்பா.

Link to comment
Share on other sites

கத்தி எல்லார் வீட்டிலும் உள்ளது. ஆனால், நம் முன்னோர்கள் 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு" என்கிறார்கள் !

"பேச்சை இழந்த நோயாளிகளுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக மின்முனைகள் பொருத்துவதை பயன்படுத்தி இந்த கருத்தை நிரூபிப்பதன் மூலம், அல்கோரிதம்களை குறிவிலக்கமாக்குவதிலும், வெளியில் அணியக்கூடிய கருவி உருவாக்குவதில் நமது மேம்பாடுகள் பற்றி சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தகவல் அளிக்கும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது."

அதேவேளை எம்மவர்கள் காதல் பற்றிய பாட்டுக்கள் மூலம் இந்த தொழில்நுட்பத்தை நீண்டகாலம் பயன்படுத்தி வருகிறார்கள் 🙂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

ஓம் என்ன என்ன நீங்க நினைக்கிற எனக்கு விளங்குது என்று சொல்வது நமக்கு மட்டும் உள்ளால கேட்குது என்ன அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

அப்பிடி என்னத்த இசகு பிசகா யோசிச்சிருப்பீங்க?!
எங்க சுழிச்சு ஓட பாக்கிறீங்க?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.