Jump to content

யாழ் பெண் வைத்தியர் வெளிநாட்டில் மானத்தை இழந்தார்!!


Recommended Posts

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த யாழ் பெண் வைத்தியர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணாண வைத்தியரே கனடாவில் குடியிருக்கிறார்.

அங்கு மருத்துவ பட்டம் பெற்று, ரொறொன்ரோ மருத்துவமனையில் கடமையாற்றி வந்தார்.

இதன்போது, புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.

அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் அவரது மருத்துவர் உரிமம் பறிக்கப்பட்டது. நீண்ட மௌனத்தின் பின்னர், தன்மீதான குற்றச்சாட்டை வைத்தியர் மறுத்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சிகிச்சைக்காக வந்த ஒருவர் என்னை மிரட்டினார். ஆபாச செல்பிக்களை அனுப்பச் சொன்னார். குறுஞ்செய்திகளை மருத்துவக் கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார்” என்று புற்றுநோய் மருத்துவர் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.

வைத்தியருக்கு தற்போது 37 வயதாகிறது. புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நிபுணராக செயற்பட்டு வருகிறார்.

2010 முதல் மருத்துவராக பணியாற்றும் இலங்கையரிடம் சிகிச்சை பெற கடந்த 2015 ஆம் ஆண்டு நோயாளி ஒருவர் சென்றார். .

அந்த நோயாளிக்கு புற்றுநோய் தாக்கம் இருந்தது சோதனைகளில் தெரிய வந்தது. அன்று முதலே இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் என்றும் வெளியில் சுற்றியுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர் என்றும் புற்று நோய்க்கு தீபா சிகிச்சை அளித்தார் என்றும் கூறப்பட்டது.

2015 ஆம் ஜனவரி முதல் 2016 மார்ச் வரை 23 முறை சிகிச்சை அளித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் திடீரென தான் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் பட்டியலில் இருந்த அந்த நோயாளியின் பெயரை வைத்தியர் நீக்கினார்.

அதன்பின்னர்தான் விதி வைத்தியரின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.

தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்றும், சிகிச்சைக்கு வந்த போது தன்னுடன் உறவு கொண்டார் என்றும் வைத்தியர் மீது அந்த நோயாளி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தன்னை கைவிட்டு விட்டதாகவும் வேறொரு நபரை காதலிப்பதாக கூறிய அவர் தன்னை நோயாளிகள் பட்டியலில் இருந்தே நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

மருத்துவதுறை குற்றச்சாட்டுக்களை ஆராயும் College of Physicians and Surgeons இல் வைத்தியர் மீது முறைப்பாடு அளித்த அந்த நோயாளி, “நான் உடல் ரீதியாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன்.

ஒரு முக்கியமான உறவு இழப்பு என்னை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. வைத்தியர் என்னை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் எனக்கு சிகிக்சை அளிக்கவும் மறுத்து விட்டார்” எனவும் தனது தரப்பிலான முறைப்பாட்டை அறிக்கையாக சமர்பித்தார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது வைத்தியர் மௌனமாகவே இருந்தார். பதில் எதுவும் கூறவில்லை.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வைத்தியரின் மருத்துவ உரிமம் இரத்துச் செய்யப்பட்டதோடு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதனையடுத்து கனடாவில் இவர் மருத்துவராக சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆறு மாதங்கள் கழித்து மருத்துவர் தனது தரப்பு நியாயத்தினை முன் வைத்துள்ளார். அதாவது “நடந்த சம்பவத்தில் தான் குற்றவாளி அல்ல என்றும் பாதிக்கப்பட்டவரே நான் தான்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னை உணர்வு ரீதியாக கட்டுப்படுத்தி அந்த நோயாளி பயன்படுத்திக்கொண்டார் என்றும் ஆபாச செல்பிக்களை மிரட்டி அனுப்ப வைத்தார் என்றும் முறையிட்டுள்ளார்.

குறித்த நோயாளி தன்னுடன் உறவு கொள்ளாவிட்டால் தான் அனுப்பிய குறுச்செய்திகள், ஔிப்படங்களை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பி விடுவதாகவும் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும் வைத்தியர் கூறியுள்ளார்.

அவமானத்தினால் தான் கூனி குறுகிப்போய் நின்றதால்தான் பேசமுடியவில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தையும் நீதிமன்றம் கேட்கவேண்டும் என்றும் வைத்தியர் முறையிட்டுள்ளார்.

http://www.vannibbc.com/archives/12781

 

Theepa Sundaralingam, 37, also ordered to pay $16K for man's therapy

Posted: Jan 23, 2019 6:20 PM ET | Last Updated: January 23

"Your actions are abhorrent and reprehensible. Even if revocation was not mandatory, the committee would have made such an order," one of the panel members said.

In a statement, the Scarborough Health Network of which Rouge Valley is a part, said it "is committed to ensuring the health and safety of all our patients. We will move forward in accordance with the decision of the College of Physicians and Surgeons of Ontario."

https://www.cbc.ca/news/canada/toronto/doctor-license-relationsip-theepa-sundaralingam-1.4990346

Link to comment
Share on other sites

மிக மோசமான பிற்போக்குத்தனமான தலைப்பு போட்டுள்ளார்கள். அத்துடன் பழைய செய்தியும் ஆகும்.

இதனால் தான் அநாமதேய தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதை தவிர்க்குமாறு நாம் கேட்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர். ஈழத்து முதியவர்களை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் சிகிச்சை அளிப்பவர் . எமது அம்மா தான் வயதுபோன கிழவி என்று சொல்ல விடவே மாட்டார். மனதில் இளமையாக வாழும்வரை வாழ வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். எமக்கு அவவுக்கு இப்படி நடந்து விட்டதே என்று நினைத்து மிகவும் கவலை. இந்த செய்தி உண்மையென்றால் செய்தது முற்றும் பிழை. ஆனால் அந்த நோயாளி வேண்டுமென்றே பழி வாங்கிவிட்டார். இந்த பதிவை போட்டவர் இந்தமாதிரி விடயங்களை பகிரும்போது நன்றாக ஆராய்ந்து  போடவேண்டும். நிழலி  சொன்னமாதிரி இது பழங்கதை.நல்ல ஒரு வைத்தியரை கனடா இழந்து விட்டது.

 

Link to comment
Share on other sites

இதை ஏன் அநாமதேய தளம் என நிர்வாகம் குறிப்பிடுகின்றது என தெரியவில்லை. இதன் ' தகுதி ' என்ன என்பது விவாதிக்கலாம், அது தனி மனித உரிமை, சுதந்திரம்.  ஆனால் இதுவும் தளம் 🙂 

செய்தி பழமை என இணைத்த ஆங்கில பதிவில் திகதியையும் இணைத்திருந்தேன்.  

 

Link to comment
Share on other sites

அப்படியானால் ஏன் இணைத்தேன் என கேட்பவர்களுக்கு ஒரு விளக்கம். 
- இந்த வைத்தியரின் 'லைசன்ஸ்' விசாரணைகளை தொடர்ந்து பறிக்கப்பட்டுள்ளது  (https://doctors.cpso.on.ca/?search=general
- கனடா மாதிரி ஒரு நாட்டில் ஒரு முழுமையான விசாரணை நடந்தே இது தீரும் 

- பொதுவாக ஆண்கள் தான் இப்படியான குற்றத்திற்கு ஆளாக்குவார்கள், இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை என்பதும் சமூகமாக ஏற்கப்பட வேண்டியது  
- இரு ஒரு சமூகம் சார்ந்த குறிப்பு 
- எந்த சமுதாயத்திலும் வைத்தியர்வகள் ஒரு மரியாதைக்கு உரியவர்கள் 
- அவர்கள் சமுதாயத்தில் அந்த மரியாதைக்கு உரிய மதிப்பை பேண வேண்டும் 
- தாயகத்தில் கூட இவ்வாறான நிகழ்வுகள் நடக்கும் , ஆனால் அவை வெளியில் வரமாட்டா, காரணம் வைத்தியருக்கு எதிராக குற்றம் சொல்ல மக்கள் காட்டும் தயக்கம் 
- புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோரும் வைத்தியரும் மட்டுமே உங்களின் அனுமதியுடன் உங்களை தொடலாம் என்பது 
- அதை எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் 

ஆக, இது தனிப்பட்டவர், தமிழர், பெண் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்காமல் ஒரு சமூகத்திற்கு ஆரோக்கியமான செய்தியாக பார்க்கவேண்டும் என்பதே எனது கருத்து  


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

மிக மோசமான பிற்போக்குத்தனமான தலைப்பு போட்டுள்ளார்கள்

நிழலி நீங்கள் கூறியது மிகவும் சரியே.. தமிழில் எத்தனையோ அர்த்தமிக்க சொற்கள் இருக்கும் போது இந்த மாதிரி பிற்போக்குத்தனமான தலைப்புகளும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் காலை வாருவதுமே அதிகமாக உள்ளது..

சில தலைப்புகளையும், கருத்தாடல்களையும் வாசிக்கும் போது “ இது தேவையா?, இந்த செய்திகளை பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களது குடும்பத்தவரோ வாசிக்கும் போது அவர்களின் மன உணர்வுகளை பற்றி சிந்திப்பதில்லையா? “ என நினைப்பதுண்டு.

சில  உணரச்சிமிக்க விடயங்களை பகிரும் போது பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்பது எனது அபிப்பிராயம். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர். ஈழத்து முதியவர்களை மிகவும் அன்பாகவும் அக்கறையாகவும் சிகிச்சை அளிப்பவர் . எமது அம்மா தான் வயதுபோன கிழவி என்று சொல்ல விடவே மாட்டார். மனதில் இளமையாக வாழும்வரை வாழ வேண்டும் என்று உற்சாகப்படுத்துவார். எமக்கு அவவுக்கு இப்படி நடந்து விட்டதே என்று நினைத்து மிகவும் கவலை. இந்த செய்தி உண்மையென்றால் செய்தது முற்றும் பிழை. ஆனால் அந்த நோயாளி வேண்டுமென்றே பழி வாங்கிவிட்டார். இந்த பதிவை போட்டவர் இந்தமாதிரி விடயங்களை பகிரும்போது நன்றாக ஆராய்ந்து  போடவேண்டும். நிழலி  சொன்னமாதிரி இது பழங்கதை.நல்ல ஒரு வைத்தியரை கனடா இழந்து விட்டது.

 

இது சார்ந்த பழைய திரியிலும் எழுதி இருந்தேன் 
இவரது வக்கீல் வெறும் லூசு 
இவருடைய கேஸை ரெசேர்ச் அண்ட் ஸ்டடி என்று மாற்றி இருக்க வேண்டும். 

அவர்களிடம் ஆதரங்கள் இருக்கும் என்பதும் சுலபமகாக எடுக்க முடியும் என்பதும் 
தெரிந்திருக்க வேண்டும் 
ஆகவே அந்த ஆதாரங்கள் அங்கு இருப்பதை வைத்துக்கொண்டே இவர்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

புலம்பெயர் நாடுகளில் வளரும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பது பெற்றோரும் வைத்தியரும் மட்டுமே உங்களின் அனுமதியுடன் உங்களை தொடலாம் என்பது 
- அதை எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் 

இந்த கருத்து சரியா?

பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை  பற்றித்தான் கற்பிக்கிறார்கள்..அத்துடன் உங்களின் அனுமதியுடன் வைத்தியரும் பரிசோதனை செய்யலாம் என்று சொல்வார்கள்.

அப்பொழுதான் பிள்ளைகளுக்கு அது சரியா தவறா என தெரியவரும் இல்லாவிட்டால் பிள்ளைகளின் அனுமதியுடன் வைத்தியரும் தொடலாம் என்றால், சில தவறான எண்ணங்களை உடைய வைத்தியர்களுக்கு இலகுவாகிவிடும்.

Link to comment
Share on other sites

"இந்த கருத்து சரியா?"

கனடாவில் முதலாம் வகுப்பில் ஆரம்பிக்கின்றது பாலியல் உறவு பற்றிய கல்வி 🙂  https://www.ontario.ca/page/sex-education-ontario

 

"பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை  பற்றித்தான் கற்பிக்கிறார்கள்"

ஐந்தாம் ஆறாம் வகுப்பில் 'முழுவதும்' தெரிந்தவர்கள் ஆக மாறிவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

இதே செய்தியை நாம் ஒரு சின்ன மாற்றம் (ஒரு சமூக உளவியல் பரிசோதனை ) செய்து பிரசுரித்தால், எமது மக்களின் உணர்வலைகள் மாறுபட்டு இருக்கும். அது எமக்குள் இருக்கும் சிந்தனை ஆற்றலின் பலவீனத்தை காட்டும் 🙂 பத்தோடு பதினோராவது செய்தியாக கடந்து போயிருக்கும். இந்த இணைப்பு ஒருவர் ஒரு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்தாலே அது வெற்றிதான். 

முன்னர்: யாழ் பெண் வைத்தியர் வெளிநாட்டில் மானத்தை இழந்தார்!!
பின்னர்: வைத்தியர் தனது தொழில் பண்புகளை மீறியதால் வேலை இழந்தார் !!

உள்ளடக்கம் 

சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரே தன்னை அச்சுறுத்தி பாலியல் உறவு கொள்ள வைத்ததாக கனடாவில் மருத்துவராகப் பணிபுரிந்து மருத்துவ உரிமத்தை இழந்த  வைத்தியர்.

புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த நோயாளியுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிற்கு இலக்கானார்.

அது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

==== முற்றும் =======

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் பொறுப்பு எதுவுமின்றி கண்டமேனிக்குச் செய்தி வெளியிடும் இதுபோன்ற இணையத்தளங்கள் குறிப்பாகப் பெண்களைக் கவருவதற்காகவே செயற்படுகின்றன தமிழ்ப்பெண்கள் அதுவும் புலம்பெயர் தேசங்களில் வாழும் குடும்பப்பெண்கள் வேலைப்பளு மற்றும் மனச்சோர்வு இவைகளிலிருந்து வெளிவர இப்படியான இணையத்தளங்கள் மெகா தொடர்கள் மற்றும் யூ ரியூம் இவைகளில் வரும் வீட்டு மருத்துவம் இவைகளே வடிகால்களாக அமைகின்றன தவிர இலவச வைப்பர் தொலைபேசி இணைப்பு இப்படியான செய்திகளை வாய்வழியாகப் பரப்ப உறுதுணைபுரிகிறது. 

இப்போதுள்ள இணையத்தளப் பத்திரிகைகளின் தலைப்புச்செய்தி ஆர்வத்தைத்தூண்டும்படி அமைப்பது இவற்றுக்காகவே. இதில் லங்கசிறி முதன்மையானது.

மேற்படி செயதியானது மனப்பிரழ்வு சம்பந்தப்பட்டது நோயாளி தனக்கு வந்த நோய் காரணமாக அருகிலிருப்பவரைப் பழிவாங்கும் ஒரு மனப்போக்கு எல்லோரும் நல்லாயிரிக்கினம் எனக்குமட்டும் இப்படிப்பிரச்சனை ஆகவே யாரையாவது துன்புறுத்தி அதில் திருப்தி அடையலாம் எனும் மனப்பாங்கு இது அனைவருக்கும் இருப்பதுதான் இம்மனப்பாங்கின் ஒரு படிநிலைதான் மொட்டைக்க்டதாசி போடுதல்.
 

Link to comment
Share on other sites

வட அமெரிக்காவில் தொடங்கிய மீ ரூ என்ற போராட்டம் பல தொழில்சார் ஆண்களை பிரட்டி போட்டுள்ளது.

கண்ணால் ஒரு மாதிரி பார்த்தார் என்றாலே சிலவேளைகளில் அவரின் வேலை முடிந்தது. விசாரணை எதுவும் இன்றி பல ஆண்கள் வேலைகளை இழந்து உள்ளனர். சில ஆண்கள் கம்பியும் எண்ணுகிறார்கள். சில பெண்கள் அநியாயமாக பொய்களை கூறி இருந்ததும் உண்டு. 

வைத்தியக்களை பொறுத்தவரையில் பல ஆண் வைத்தியர்கள் இவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டு வேலையை இழந்து, மரியாதையை இழந்து சிறைக்கும் சென்றுள்ளார்கள்.  

அதை எல்லாம் எமது தமிழ் 'ஊடகங்கள்' எழுதி இருக்க மாட்டா. காரணம், அதை வாசகர்களும் அதிகம் விரும்புவதில்லை. அதற்கு இந்த களமே (view count) ஒரு சாட்சி.

கொஞ்சம் 'கிளுகிளுப்பா' போட்டா 'ரியாக்சன்' கள் பொம்மிய வண்ணம் வரும், 'ரேட்டிங்' கூடும்.

அப்படியான சில மூலங்களை பாவித்து தான் சில நல்ல விழிவுப்புணர்வு விடயங்களை (அதாவது, பெண்களும் மனிதர்கள் தான் ) கூற முடிகின்றது என்பது ஒரு துர்ப்பாக்கிய நிலை.  

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டப்படி மானத்தை இழக்கவில்லை. 

அதாவது, பாலியல் குற்றவாளியாக (அதாவது பாலியல் கிரிமினனலாக) சாட்சிப்படுத்தப்படவும் இல்லை, தீர்மானிக்கவும் இல்லை.

எனவே, செய்தியின் தலைப்பு சட்டப்படி தவறாக இருப்பதற்கு  வாய்ப்புள்ளது.

இவருடைய மருதத்துவ உரிமம் பறிக்கப்பட்டுள்ளது என்பதே சரி.

முறைப்பாடு செய்தவரின் முழுமையான  ஒப்புதலுடனே தான் இவர்  மறைப்பாட்டாளருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

அதுவும், இவர் வைத்திய நிலையத்தில் பாலியல் உறவு கொண்டுள்ளார் என்பதுடன், கடமையில் இருந்த வேறு ஓர் பெண் தாதியர், இவர்கள்  பாலியல் உறவு கொண்டிருந்த போது   அப்படியே   இவர்களின்  அறைக்குள் வந்துள்ளார்.

அதனாலேயே, இவரின் உரிமம் பறிக்கப்படும் நிலை வரை சென்றுள்ளது. ஏனெனில், ஒன்ராறியோ மருத்துவ சேவையின் கட்டுப்பாடு ஒழுங்கு முறைகள், கவனிப்பிலிருக்கும் நோயாளருடன் பாலியல் உறவுகளை தடை செய்வதுடன், அதை மீறுதலின் ஒரே விளைவாக மருத்துவ உரிமம் பறிக்கப்படுவதில் நெகிழ்வு இல்லாமல் உள்ளது.         

தார்மீக அடிப்படையில் மானமிழப்பதென்பது, ஓர் சமூக அளவீடே தவிர வேறு ஒன்றும் சொல்லும் படி இல்லை.

வெள்ளை இனத்தவர் பலர், முறைப்பாட்டாளரையே குறை சொல்கிறார்கள். அவர்களின், மானம் என்ற சமூக அளவீடு அவர்களின்  கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டது. அதாவது, முறைப்பாட்டாளர் காம சுகத்தை அனுபவித்து விட்டு, break-up என்றதும் பழிவாங்கியுள்ளார் என்பதே பல வெள்ளை இனத்தவரின் கருத்துக்கள் உள்ளது. பல வெள்ளை இனத்தவர், இவரை தாம் வைத்தியராக பெறவில்லை எனும் ஏக்கமும் உள்ளது. பலர், இதை slap in the wrist உடன் முடித்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

தமிழ் ஆண்கள், பெண்களுக்கிடையில் இது நடைபெறவில்லையா, அதாவது எல்லாம் முடிந்த பின் break-up?

முக்கியமாக, இது metoo  வும் அல்ல.  ஏனெனில், இருவரும் இணங்கியே உறவு கொண்டனர்.

மற்றும் படி, தமிழ் பெண்களுக்கு sexual wilderness இருக்க முடியாது என்று யார் முடிவெடுத்தது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

மிகவும் அன்பான கெட்டிக்கார புற்றுநோய் வைத்தியர். எனது அம்மாவின் குடும்ப வைத்தியரும் ஆவார் . மிக இள  வயதிலேயே கான்செர் வைத்தியத்தில் சிறப்பு பட்டம் வாங்கியவர்.

ஆனால், மறு பக்கமும் உள்ளது. 

இவருடைய  முன்னேற்றப் படிகளிலும், இப்படி நடைபெற்றிருக்கலாம்.

எல்லாம் ஓர் ஊகமே. கானால் கண்டதும் இல்லை, காதல் கேட்டதும் இல்லை. தீர விசாரித்தாலும் அறிய முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Maruthankerny said:

இது சார்ந்த பழைய திரியிலும் எழுதி இருந்தேன் 
இவரது வக்கீல் வெறும் லூசு 
இவருடைய கேஸை ரெசேர்ச் அண்ட் ஸ்டடி என்று மாற்றி இருக்க வேண்டும். 

அவர்களிடம் ஆதரங்கள் இருக்கும் என்பதும் சுலபமகாக எடுக்க முடியும் என்பதும் 
தெரிந்திருக்க வேண்டும் 
ஆகவே அந்த ஆதாரங்கள் அங்கு இருப்பதை வைத்துக்கொண்டே இவர்கள் வாதத்தை முன்வைக்க வேண்டும். 

நல்ல வேளை மருத்துவரின் வக்கீல் உங்கள் இந்த "ஆய்வுக்காக உறவு கொண்டார்" என்ற முட்டாள் தனமான வாதத்தை முன்னிறுத்தவில்லை! அப்படி செய்திருந்தால் இது தொடர்பான  செய்தி இன்னும் பரவலாக ஓடிக் கொண்டிருக்கும், சந்தி சிரித்திருக்கும்.

நோயாளிக்கு மருத்துவம் பார்ப்பதென்பது காரை ரிவியை பழுது பார்ப்பது போல நினைத்த ரெக்னிக்கை எல்லாம் பாவிப்பதல்ல! சில நோய்களுக்கு இனிக் காப்பாற்ற முடியாது என்ற  நிலை வரும் போது கூட பரிசோதனை மருத்துவத்தை (experimental therapy) நோயாளியிடமும் குடும்பத்தினரிடமும் மருத்துவ அதிகாரம் கொண்டவர்களிடமும் அனுமதி பெற்றுத் தான் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுப் பாடுகளுக்குள் சும்மா இதைப் பரிசோதித்துப் பார்த்தேன் என்று இவர் சொல்லித் தப்பியிருக்க முடியாது! எதிர் காலத்தில் இவர் மருத்துவ லைசென்சைத் திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பை உங்கள் ஆலோசனைப் படி இவர் நடந்திருந்தால் முற்றாக இழந்திருப்பார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.