Jump to content

ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆந்திரா சிறையில் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் – பிணை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

In இந்தியா     August 3, 2019 7:08 am GMT     0 Comments     1128     by : Yuganthini

pirison-720x450.jpg

ஆந்திரா சிறையில் 27 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சார்பில் பிணை செய்யகோரி மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம்- ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறைச்சாலையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இவர்களில் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த சல்லா எடுகொண்டலும் ஒருவர் ஆவார். கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி முதல் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு எய்ட்ஸ் நோய் சிகிச்சை பெற வேண்டியுள்ளமையினால் பிணையில் செல்ல அனுமதி வழங்க வேண்டுமென  ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இவ்விடயம் குறித்து சிறை அதிகாரிகளிடம் மொத்தம் எத்தனை கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது? அவர்களுக்கு என்னென்ன மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறதென நீதிமன்றத்தினால் விளக்கம் கேட்கப்பட்டது.

இதற்கு சிறையில் மொத்தம் 27 கைதிகளுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சிறை அதிகாரிகள் பதில் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

இவ்விடயம் குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜாராவ் தெரிவித்துள்ளதாவது, “எய்ட்ஸ் பாதிப்புள்ள 27 கைதிகளில் 19 பேர் தண்டனை காலத்தை அனுபவிக்கவரும் போதே அவர்களுக்கு நோய் இருந்தது.

ஏனைய  8 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற அனைவருக்கும் வாரம் ஒரு முறை அரச வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது” என்றார்.

ஆனால் சிறையில் கைதிகளுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு வசதிகள் இல்லை எனவும், சிறையிலுள்ள வைத்தியசாலை வைத்தியர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

மேலும் சிறையில் ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் நடப்பதாகவும் கைதிகளுக்கு ஒழுங்காக உணவு வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த முறைப்பாடுகளை  மறுத்துள்ள சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், நோய் தடுப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

http://athavannews.com/ஆந்திரா-சிறையில்-27-கைதிகள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.