Jump to content

பறக்கும் மனிதர்: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் மனிதர்: பறக்கும் தட்டில் 35.4 கி.மீ பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்

35.4 கி.மீ பறக்கும் தட்டில் பறந்த மனிதர், சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்தார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஜபாட்டா.

என்ன... பறந்தே கடந்தாரா? இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா.

விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி இருக்கிறது.

பறக்கும் மனிதர்: 35.4 கி.மீ பறக்கும் தட்டில் பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜெட் பறக்கும் தட்டுகள் கொண்டு மனிதர்களை பறக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தார் ஃப்ரான்கி. அதற்கான தொழிற்நுட்பத்தையும் சாத்தியப்படுத்திய இவர், கிரோசின் நிரப்பப்பட்ட பையை சுமந்து பறக்கும் தட்டு மூலம் 22 நிமிடங்களில் 22 மைல்கள் பறந்துள்ளார். அதாவது 35.4 கி.மீ.

தோல்வியிலிருந்து வெற்றிக்கு

ஜூலை 25ம் தேதியே அந்த கால்வையை கடக்கும் முயற்சியை மேற்கொண்டார். ஆனால், அந்த முயற்சியானது எரிபொருளில் ஏற்பட்ட சிக்கலால் தோல்வியில் முடிந்தது.

பறக்கும் மனிதர்: 35.4 கி.மீ பறக்கும் தட்டில் பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிட்டோம்... இப்போது வெற்றிகரமாக கால்வாயையும் கடந்துவிட்டோம்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது கண்ணீர் திரண்டு இருந்தது.

காலம் பதில் சொல்லும்

இது வரலாற்று சிறப்புமிக்க சம்பவமா என்பதை நான் தீர்மானிக்க முடியாது. காலம் பதில் சொல்லும் என்று அவர் தெரிவித்தார்.

திரண்டிருந்த கூட்டத்திடம் பேசிய ஃப்ரான்கி, பறக்கும் போது உச்சபட்சமாக மணிக்கு 170 கி.மீ என்ற வேகத்தை அடைந்தேன் என்று கூறினார்.

பறப்பதில் பெரிய சவால் என்னவென்றால் எரிபொருளை பயணத்தின் போது நிரப்புவதுதான்.

பறக்கும் மனிதர்: 35.4 கி.மீ பறக்கும் தட்டில் பறந்த ஃப்ரான்கி ஜபாட்டா, சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சென்ற முறை அவர் கால்வாயை கடக்க முயற்சித்த போது, எரிபொருள் பாதி வழியிலேயே தீர்ந்தது. மீண்டும் நிரப்ப எரிபொருள் நிரப்பட்ட பையை சுமந்து சென்ற கப்பலுக்கு அவர் செல்ல முயற்சித்த போது, கடலில் விழுந்தார்.

இந்த முறை அவருக்கு பாதுகாப்பாக மூன்று ஹெலிகாப்டர்களும், பெரிய கப்பல் ஒன்றும் சென்றது.

35.4 கி.மீ பறக்கும் தட்டில் பறந்த மனிதர், சாத்தியப்படுத்திய விஞ்ஞானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க ஃப்ரான்கி நிறுவனத்தை பிரான்ஸ் அரசாங்கம் கோரி உள்ளது.

இதற்காக 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-49226684

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.