Jump to content

60 வயதைத் தொட்ட ஐஐடி மெட்ராஸ்; அடுத்தக்கட்ட ‘ஃபோகஸ்’ என்ன?- விளக்கும் இயக்குநர்


Recommended Posts

ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்நுடபம்தான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. எங்களின் பெரும்பான்மையான ஸ்டார்ட்-அப்கள், சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கி வருகின்றன. இவை மிகவும் பெரியதாக மாற நேரம் எடுக்கும். அதை நீங்கள் பொருளாதார ரீதியில் மட்டும் பார்க்க முடியாது. சமூகத்தில் அவை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார். 

ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி...

 
CHENNAI: 

ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்நுடபம்தான் மிகவும் அவசியமாக இருக்கின்றன. எங்களின் பெரும்பான்மையான ஸ்டார்ட்-அப்கள், சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை உருவாக்கி வருகின்றன. இவை மிகவும் பெரியதாக மாற நேரம் எடுக்கும். அதை நீங்கள் பொருளாதார ரீதியில் மட்டும் பார்க்க முடியாது. சமூகத்தில் அவை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார். 

பல துறைகளிலும் வேலை வாய்ப்பு இழப்பு என்பது பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. அது குறித்து பேசிய ராமமூர்த்தி, “ஐஐடி பட்டதாரிகள் போகும் வேலைக்கு எந்த பாதிப்பும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி மெட்ராஸில் படிக்கும் 10 சதவிகித மாணவர்கள்தான் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்கள் இங்கேதான் பணி செய்து வருகிறார்கள்” என்கிறார். 

ஐஐடி கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கு எழுதப்படும் ஐஐடி-ஜே.இ.இ தேர்வு குறித்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதன் கடினத்தன்மை குறித்து ராமமூர்த்தி, “ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் ஐஐடி ஜே.இ.இ தேர்வை எழுதுகின்றனர். அதில் 1.85 லட்சம் மாணவர்களை வடிகட்ட வேண்டும். அதனால்தான் இந்த தேர்வு மிகவும் கடினமானதாக இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கு பெறும் மற்றவர்களும் திறமையானவர்கள்தான். அவர்களின் பள்ளி இறுதியாண்டு மதிப்பெண்ணைப் பார்த்தாலே அது தெரியும். ஆனால், இந்தத் தேர்வில் யாருக்கு அதிக விஷயம் தெரிந்திருக்கிறது என்பதை மட்டுமே சோதிக்கும்” என்று விளக்கம் கொடுக்கிறார்.

ஐஐடி மெட்ராஸுக்கு சில அமைப்புகள் இயங்க அனுமதி கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுவது குறித்தும் பேசிய அவர், “அப்படி வரும் தகவல்கள் உண்மையல்ல. கருத்து சுதந்திரம் இருப்பதனாலேயே அப்படியும் செய்திகள் கசிகின்றன” என்று முடித்துக் கொண்டார். 

https://www.ndtv.com/tamil/as-iit-madras-turns-60-this-is-what-it-plans-is-2079286

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.