Jump to content

மடு தேவாலய பெருநாளுக்கு மக்களின் வருகையில் வீழ்ச்சி


Recommended Posts

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மடு மாதா ஆலய ஆடிப் பெருநாளுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வருகை தரவில்லையென ஆயர் கூறியுள்ளார். மடு மாதா திருத்தலத்தின் இவ்வருட ஆடி மாதப் பெருநாள் கடந்த யூன் மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யூலை மாதம் 2 ஆம் திகதி மடுத்திருப்பதியின் இறுதி நாள் உற்சவம் ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

பெருநாளை முன்னிட்டு மடு ஆலயப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலய வழிபாட்டிற்கு வந்த மக்களையும் இலங்கைப் படையினர் சோதனையிட்டனர்.

இதன் காரணமாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாமென மடுமாதா ஆலய அருட்தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறினார்.

போர்க் காலத்தில் கூட கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் இருந்து அதிகளவு மக்கள் மடு ஆலயப் பெருநாளுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் மக்கள் மடுவுக்கு வருகைதர அஞ்சுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி மடுத்திருப்பதியின் மேலும் ஒரு திருவிழா நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

http://thinakkural.lk/article/32601

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

கடந்த காலங்களில் சுமார் நான்கு இலட்சம் மக்கள் மடு தேவாலயப் பெருநாளுக்கு வருகை தந்தனர். ஆனால் இம்முறை இருபத்து நான்காயிரத்து அறுநூறு பேர் மாத்திரமே வருகை தந்ததாகவும் அந்த அருட்தந்தை கூறினார்.

 

3 hours ago, ampanai said:

திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

 

Link to comment
Share on other sites

5 hours ago, Paanch said:

திருவிழாவிறகான ஆரம்ப நிகழ்வுகள் இம்மாதம் ஆறாம் திகதி மடுத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளன.

இந்த தகவல் சரியானதாகவே தெரிகின்றது. கடந்த வருடங்களிலும் கூட இவ்வாறான செய்திகள் இணைக்கப்பட்டு இருந்தன. 

 

Link to comment
Share on other sites

9 hours ago, Paanch said:

 

நான் நினைக்கிறேன் நீங்கள் ஆடி மாதப் பெருநாளையும் ஆவணி மாதம் நடக்கவிருக்கும் திருவிழாவையும் கலந்து வாசித்து விட்டீர்கள் என்று. 😀

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

நான் நினைக்கிறேன் நீங்கள் ஆடி மாதம் ஆரம்பித்த பெருநாளையும் ஆவணி மாதம் நடக்கவிருக்கும் திருவிழாவையும் கலந்து வாசித்து விட்டீர்கள் என்று. 😀

உண்மைதான் லாறா அவர்களே, கலந்ததுமட்டுமல்ல கலங்கியும் விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

77ம் ஆண்டு ஆடிமாதம் மடுமாதா பெருநாளின்போது நான் குடும்பத்துடன் அனுராதபுரத்தில் அகப்பட்டு உயிர்தப்பிவந்த ஞாபகத்தை இந்தப்பதிவு மீட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.