Jump to content

ஜெயம் ரவியின் கோமாளி டிரெய்லருக்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு!


Recommended Posts

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
 
இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.
அதில்  “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோ ஒளிபரப்பாகிறது. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.
 
இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். இதனை அடுத்து இந்த காட்சியை நீக்கமாறும் ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


இதற்கு விளக்கம் அளித்துள்ள இப்படத்தின் இயக்குநர் பிரதீப்,
“நான் தீவிர ரஜினி ரசிகன், ரஜினியின் லிங்கா படம் வெளியானபோது நான் பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

https://movies.ndtv.com/tamil/kollywood/rajini-fans-opposes-jayam-ravis-comali-after-watching-its-trailer-2080355

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுல ரஜனி  கோமாளிகள் ஏன் கோபப்பட வேண்டும் அந்தாள் அரசியலுக்கு வந்து என்னத்த கிழிக்க போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ampanai said:

ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

மா மன்னா ரைப் .. போல கிடக்கு .. ☺️hqdefault.jpg

Link to comment
Share on other sites

``வேண்டாம்னு கமல் வருத்தப்பட்டார்; 'கோமாளி'ல ரஜினி காட்சியை நீக்கிட்டோம்!'' - ஐசரி கணேஷ்

ஜெயம் ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருக்கும் படம், 'கோமாளி'. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளம், இப்படத்தில் நடிக்கின்றனர்.

'ஹிப்ஹாப்' ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர், நேற்று வெளியானது. 16 வருடங்களாகக் கோமாவில் இருந்த ஜெயம் ரவி, 2016-ல் விழிப்பதுபோல் டிரெய்லர் தொடங்கும். சமூகத்தின் சமகால விஷயங்களைக் கிண்டல் செய்யும் விதமாக டிரெய்லரின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

 

அதுமட்டுமன்றி, டிரெய்லரின் இறுதிக்காட்சியில், கோமாவிலிருந்து 16 வருடங்கள் கழித்து கண்விழிக்கும் ஜெயம் ரவி, ``இது எந்த வருஷம்?'' என யோகி பாபுவிடம் கேட்க, அவர் 2016 எனச் சொல்லியும் ஜெயம் ரவி நம்ப மாட்டார். அந்தச் சமயத்தில், ``நான் அரசியலுக்கு வருவது உறுதி'' என ரஜினிகாந்த் பேசுவதை ஜெயம் ரவிக்கு டிவியில் போட்டுக்காட்டுவார், யோகி பாபு. ``ஏய்... இது 96. யாரை ஏமாத்துறீங்க?'' என்று கேட்பார் ஜெயம் ரவி. குறிப்பிட்ட இந்தக் காட்சி, ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதால், அதை நீக்கும்படி சமூகவலைதளங்களில் பொங்கி எழுந்தனர் ரஜினி ரசிகர்கள். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், ஐசரி கணேசனை போனில் அழைத்து வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேசனிடம் பேசினோம். அவர், ``படத்துடைய டிரெய்லரில், அந்த விஷயத்தைப் பார்த்தப்போ நாங்க அதைத் தப்பாவே நினைக்கலை. எல்லோரும் ரசிக்கும்படியான காமெடி காட்சியாதான் இருக்கும்னு நினைச்சோம். இப்போ வரைக்கும், கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் அந்த டிரெய்லரைப் பார்த்திருக்காங்க. நிறைய பேர் ரசிச்சுருக்காங்க. அதுல குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் அந்தக் காட்சியில உடன்பாடு இல்லைங்கிறது ட்விட்டரைப் பார்த்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் சார் என்னைப் போனில் அழைத்து, 'அது வேண்டாம் கணேஷ்'னு சொல்லி வருத்தப்பட்டார். நானும் அவர்கிட்ட வருத்தப்பட்டுப் பேசினேன். உடனடியா இன்னைக்கே அந்தக் காட்சியைப் படத்துல இருந்து நீக்கிட்டோம். முதல்ல நானே ரஜினி சாருடைய தீவிர ரசிகன். அவர் நடிப்புல வெளிவந்த '2.0' படத்துலகூட நான் நடிச்சிருக்கேன். சிலர் தப்பா நினைக்கிறதால, படத்துல அந்தக் காட்சி கண்டிப்பா இருக்காது" என அந்தச் சர்ச்சை குறித்து விளக்கமளித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

https://cinema.vikatan.com/tamil-cinema/isari-ganeshs-explanation-regarding-comali-trailer-issue

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேத்தி வயதுப் பெண்களே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்..பாடல்காட்சியிலும் ரஜினியை வச்சு செய்யும் ‘கோமாளி’.

jayam-ravi-final----jpg.jpg

ரஜினியை அரசியல் கோமாளியாகச் சித்தரித்த ‘கோமாளி’பட சர்ச்சையே இன்னும் ஒரு முடிவுக்கு வராத அதே படக்குழு ரஜினியின் வயதைக் கிண்டலடித்து ஒரு 15 செகண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மீண்டும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் கடந்த 3ம் தேதி  இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது.

அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருந்தார்கள்.

அதற்கு கிடைத்த கண்டனங்களால் ட்ரெயிலரில் இருந்த ரஜினி காட்சிகள் நீக்கப்பட தற்போது மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு ரஜினியின் வயதை பங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடல் வரிகளில் ‘சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிடுச்சே.இப்ப பேத்தி எல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே’என்று அவரது வயதையும் பேத்தி வயதுப்  பெண்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலாக்கியுள்ளது.

    கோமாளி டீம் ஏன் சூப்பர் ஸ்டார்ங்கிற பர்னிச்சர போட்டு இப்படி உடைச்சி வச்சிருக்கானுங்கனு தெரியலயே😂😂😂 pic.twitter.com/uCVj0KTQmO
    — பாலாᴺᵀᴷ (@Bala4575)
    August 5, 2019

https://tamil.asianetnews.com/cinema/comali-team-again-teasing-rajini-in-a-song-pvtfjq

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.