Jump to content

மீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வீட்டில் எந்த உணவு மிஞ்சினாலும். அதை எடுத்து வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதுதான் குடும்பங்களின் பழக்கம். அவை எத்தனை சுவையாக இருந்தாலும், சுட வைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

காய்கறிகள் : கீரை வகைகள், கரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும்.

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

முட்டை : புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையை சமைத்தவுடனே சாப்பிடுவிடவும் அல்லது நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிட்டாலும் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

கோழிக் கறி : சிக்கனை எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் வைத்த மீன் குழம்பை ரோஸ் பாணுடன் கீரையயும் பருப்பையும் கலந்து அடிக்கும் போதுதானே ருசியே இருக்கு. செலவையும் குறைக்கலாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

Link to comment
Share on other sites

எல்லா மரக்கறிகளையும் கறியாகச் செய்து சாப்பிடுவதில் உடன்பாடில்லை. பெரும்பாலான மரக்கறிகளைப் பச்சையாகவே சாப்பிடுவதுண்டு. 

வேக வைப்பதில் உள்ள பிரதான நன்மை, வெப்பம் மரக்கறிகளில் உள்ள கிருமிகளையும் இரசாயன மருந்துகளையும் அழிக்கும். பிரதான தீமை அவற்றிலுள்ள பெரும்பாலான விற்றமின்கள் அழிக்கப்பபடுவதுடன் வெப்பம், உப்பு, புளி போன்ற சேர்வைகள் புரதங்களைச் சிதைத்துவிடும். Omega 3 போன்ற நல்ல கொழுப்புகளும் வெப்பத்தால் மாற்றமடையும்.

 

கீரை வகைகளில் உள்ள முத்தாத இலைகளை சம்பல் போன்ற உணவுகளாகச் செய்து சாப்பிடலாம். ஊரில் இருக்கும்போது வெண்டிக்காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகச் சாப்பிடுவதுண்டு.

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

 

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட விடயம் சரியாக விளங்கவில்லை. உணவை அதிகநேரம் வெளியே வைத்தால் அதில் கிருமிகள் தொற்றிப் பெருகும். அதனைசொ மீண்டும் சூடாக்க அதிலுள்ள கிருமிகள் இறந்து நச்சுத் தன்மை உண்டாகும் என நினைக்கிறேன். 

9 hours ago, பெருமாள் said:

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

அய்யய்யோ... பாஞ்ச் அண்ணை  எனக்கு, தொப்பிளை கண்டால்... "அலர்ஜி.:grin:
அடுத்த பிள்ளை பிறந்திடுமோ என்று.... இப்ப,  தொப்பிளை... பார்க்கிறதே இல்லை.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் பழுதடைந்த கறியினை சூடாக்கினால் நஞ்சாகும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

எந்தவொரு விலங்கின  உணவையும், வெப்பத்திற்கு உட்படுத்தி சமைக்காமல் உண்பது ஆபத்தானது.

காரணம், நோய்கள், ஒட்டுண்ணிகள்.

கடலுணவுகளில், ஒட்டுண்ணிகள் இருபதற்கு வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

அதிலும் மீன் குழம்பு பழைய குழம்பு தான் சுவையாக இருக்கும்.

அதுசரி இன்னும் 40-50 வயது பிளானா?
வீட்டுக்காரி தாங்கினாலும் பூமாதேவி தாங்க மாட்டாள்.

Link to comment
Share on other sites

23 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்கள் பின்னூட்டம் யாருக்கெல்லாம் சரிப்பட்டுவருமோ எனக்குச் சரிவராது. நான் யப்பான் நாட்டுக்குச் சென்று குடியிருக்க விரும்பியுள்ளேன். அங்கு 125 என்ன அதற்குமேலும் தாக்குப்பிடிக்கலாமாம். 🤣

Image+2.png

Link to comment
Share on other sites

On 8/6/2019 at 11:20 AM, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்களுக்கு இப்ப என்ன வயது? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

ஆரோக்கிய வாழ்வு அறுபது வயதுக்கு பின் தேடி பலனில்லை மண்டையில் இருக்கும் நியுரோன்கள் எல்லாம் மெல்ல மெல்ல செயல் இழக்கும் நேரம்   ஊரில் இருக்கும்மட்டும் கொல்லையில் நிக்கும் ஆடும் மாடும் முருங்கையிலை யும் செவ்விளநீரும் கோழியும்  இயற்கையான முறையில் எங்களுக்கு உதவின இங்கு வந்து கடலில் மூணு மாதம் வாழ்ந்த  மீன் பிரீசரில் இரண்டு வருடம் கிடந்த பின் சட்டிக்குள் போட்டு வேகவைத்து  கறி எனும் பெயர் குடுத்து சாப்பிடுக்கிரம் பின்பு அதையே மைக்ரோ வேயில் சூடு படுத்தி நஞ்சாக்கி சாப்பிடுகிரம்  தேவையா ? இதைவிட மோசமானது மீன் டின் ஏற்கனவே காலாவதியாகி போன டின்னை திகதியை அழித்து விட்டு புதிதாக இருவருடங்கள் அடித்து விட்டு விற்பனைக்கு விடும் இந்தவகையான டின்கள் என்ன கெடுதியை கொண்டுவரும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .

இன்னும் வரும்  ஜனவரி முதல் imo 2020 எனும் புயல் அடிக்க போகுது முக்கியமா புலம்பெயர் எங்களை பாரியளவில் தாக்குதலுக்கு முகம் கொடுக்கபோகிரம் அதாவது உலகெங்கும் உள்ள கப்பல்கள் அனைத்தும் குறைவான சல்பர் உள்ள எண்ணெயை பாவிக்க சொல்லி உலக கப்பல் போக்குவரத்தை கட்டுபடுத்தும் imo  அறிவித்துள்ளது இதனால் கப்பல் மூலம் வரும் அரிசி போன்ற பலசரக்கு வகைகள் பன்மடங்கு விலைஎறபோகுது அப்போது இந்த டின் வகைகள் இப்ப இரண்டு வருடம் அடிக்கும் கொள்ளை கூட்டம் இனி மூன்றுவருடத்துக்கு அடிப்பினமாக்கும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைக்ரோ அவனில் வைத்து சூடாக்காமல் அடுப்பில் வைத்து சூடாக்கினால் அதிக பாதிப்பில்லை என்று செல்லினம்... நான் அவித்த முட்டை,உ .கிழங்கு செலரி போன்றவற்றை திரும்பவும் சூடாக்குவதில்லை ...கடைகளில் சிப்ஸ் வாங்கும் போது எத்தனை தரம் திரும்ப,திரும்ப எண்ணெயில் பொரித்து இருப்பார்கள்...கூடாது என்று மனதிற்கு தெரிந்தாலும் வாயை😋 கட்டிப் போடேலாமல் வாங்கி திண்பதுண்டு 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.