Jump to content

மீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வீட்டில் எந்த உணவு மிஞ்சினாலும். அதை எடுத்து வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதுதான் குடும்பங்களின் பழக்கம். அவை எத்தனை சுவையாக இருந்தாலும், சுட வைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

காய்கறிகள் : கீரை வகைகள், கரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும்.

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

முட்டை : புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையை சமைத்தவுடனே சாப்பிடுவிடவும் அல்லது நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிட்டாலும் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

கோழிக் கறி : சிக்கனை எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் வைத்த மீன் குழம்பை ரோஸ் பாணுடன் கீரையயும் பருப்பையும் கலந்து அடிக்கும் போதுதானே ருசியே இருக்கு. செலவையும் குறைக்கலாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

Link to comment
Share on other sites

எல்லா மரக்கறிகளையும் கறியாகச் செய்து சாப்பிடுவதில் உடன்பாடில்லை. பெரும்பாலான மரக்கறிகளைப் பச்சையாகவே சாப்பிடுவதுண்டு. 

வேக வைப்பதில் உள்ள பிரதான நன்மை, வெப்பம் மரக்கறிகளில் உள்ள கிருமிகளையும் இரசாயன மருந்துகளையும் அழிக்கும். பிரதான தீமை அவற்றிலுள்ள பெரும்பாலான விற்றமின்கள் அழிக்கப்பபடுவதுடன் வெப்பம், உப்பு, புளி போன்ற சேர்வைகள் புரதங்களைச் சிதைத்துவிடும். Omega 3 போன்ற நல்ல கொழுப்புகளும் வெப்பத்தால் மாற்றமடையும்.

 

கீரை வகைகளில் உள்ள முத்தாத இலைகளை சம்பல் போன்ற உணவுகளாகச் செய்து சாப்பிடலாம். ஊரில் இருக்கும்போது வெண்டிக்காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகச் சாப்பிடுவதுண்டு.

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

 

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட விடயம் சரியாக விளங்கவில்லை. உணவை அதிகநேரம் வெளியே வைத்தால் அதில் கிருமிகள் தொற்றிப் பெருகும். அதனைசொ மீண்டும் சூடாக்க அதிலுள்ள கிருமிகள் இறந்து நச்சுத் தன்மை உண்டாகும் என நினைக்கிறேன். 

9 hours ago, பெருமாள் said:

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

அய்யய்யோ... பாஞ்ச் அண்ணை  எனக்கு, தொப்பிளை கண்டால்... "அலர்ஜி.:grin:
அடுத்த பிள்ளை பிறந்திடுமோ என்று.... இப்ப,  தொப்பிளை... பார்க்கிறதே இல்லை.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் பழுதடைந்த கறியினை சூடாக்கினால் நஞ்சாகும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

எந்தவொரு விலங்கின  உணவையும், வெப்பத்திற்கு உட்படுத்தி சமைக்காமல் உண்பது ஆபத்தானது.

காரணம், நோய்கள், ஒட்டுண்ணிகள்.

கடலுணவுகளில், ஒட்டுண்ணிகள் இருபதற்கு வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

அதிலும் மீன் குழம்பு பழைய குழம்பு தான் சுவையாக இருக்கும்.

அதுசரி இன்னும் 40-50 வயது பிளானா?
வீட்டுக்காரி தாங்கினாலும் பூமாதேவி தாங்க மாட்டாள்.

Link to comment
Share on other sites

23 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்கள் பின்னூட்டம் யாருக்கெல்லாம் சரிப்பட்டுவருமோ எனக்குச் சரிவராது. நான் யப்பான் நாட்டுக்குச் சென்று குடியிருக்க விரும்பியுள்ளேன். அங்கு 125 என்ன அதற்குமேலும் தாக்குப்பிடிக்கலாமாம். 🤣

Image+2.png

Link to comment
Share on other sites

On 8/6/2019 at 11:20 AM, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்களுக்கு இப்ப என்ன வயது? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

ஆரோக்கிய வாழ்வு அறுபது வயதுக்கு பின் தேடி பலனில்லை மண்டையில் இருக்கும் நியுரோன்கள் எல்லாம் மெல்ல மெல்ல செயல் இழக்கும் நேரம்   ஊரில் இருக்கும்மட்டும் கொல்லையில் நிக்கும் ஆடும் மாடும் முருங்கையிலை யும் செவ்விளநீரும் கோழியும்  இயற்கையான முறையில் எங்களுக்கு உதவின இங்கு வந்து கடலில் மூணு மாதம் வாழ்ந்த  மீன் பிரீசரில் இரண்டு வருடம் கிடந்த பின் சட்டிக்குள் போட்டு வேகவைத்து  கறி எனும் பெயர் குடுத்து சாப்பிடுக்கிரம் பின்பு அதையே மைக்ரோ வேயில் சூடு படுத்தி நஞ்சாக்கி சாப்பிடுகிரம்  தேவையா ? இதைவிட மோசமானது மீன் டின் ஏற்கனவே காலாவதியாகி போன டின்னை திகதியை அழித்து விட்டு புதிதாக இருவருடங்கள் அடித்து விட்டு விற்பனைக்கு விடும் இந்தவகையான டின்கள் என்ன கெடுதியை கொண்டுவரும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .

இன்னும் வரும்  ஜனவரி முதல் imo 2020 எனும் புயல் அடிக்க போகுது முக்கியமா புலம்பெயர் எங்களை பாரியளவில் தாக்குதலுக்கு முகம் கொடுக்கபோகிரம் அதாவது உலகெங்கும் உள்ள கப்பல்கள் அனைத்தும் குறைவான சல்பர் உள்ள எண்ணெயை பாவிக்க சொல்லி உலக கப்பல் போக்குவரத்தை கட்டுபடுத்தும் imo  அறிவித்துள்ளது இதனால் கப்பல் மூலம் வரும் அரிசி போன்ற பலசரக்கு வகைகள் பன்மடங்கு விலைஎறபோகுது அப்போது இந்த டின் வகைகள் இப்ப இரண்டு வருடம் அடிக்கும் கொள்ளை கூட்டம் இனி மூன்றுவருடத்துக்கு அடிப்பினமாக்கும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைக்ரோ அவனில் வைத்து சூடாக்காமல் அடுப்பில் வைத்து சூடாக்கினால் அதிக பாதிப்பில்லை என்று செல்லினம்... நான் அவித்த முட்டை,உ .கிழங்கு செலரி போன்றவற்றை திரும்பவும் சூடாக்குவதில்லை ...கடைகளில் சிப்ஸ் வாங்கும் போது எத்தனை தரம் திரும்ப,திரும்ப எண்ணெயில் பொரித்து இருப்பார்கள்...கூடாது என்று மனதிற்கு தெரிந்தாலும் வாயை😋 கட்டிப் போடேலாமல் வாங்கி திண்பதுண்டு 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.