Jump to content

மீண்டும் சூடு செய்தால் விஷமாகும் உணவுகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வீட்டில் எந்த உணவு மிஞ்சினாலும். அதை எடுத்து வைத்து மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதுதான் குடும்பங்களின் பழக்கம். அவை எத்தனை சுவையாக இருந்தாலும், சுட வைக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

காய்கறிகள் : கீரை வகைகள், கரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும்.

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

முட்டை : புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும். எனவே முட்டையை சமைத்தவுடனே சாப்பிடுவிடவும் அல்லது நீண்ட நேரத்திற்கு பிறகு சாப்பிட்டாலும் சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுங்கள்.

கோழிக் கறி : சிக்கனை எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அதற்காக மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் முட்டையைப் போல் அதுவும் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் வைத்த மீன் குழம்பை ரோஸ் பாணுடன் கீரையயும் பருப்பையும் கலந்து அடிக்கும் போதுதானே ருசியே இருக்கு. செலவையும் குறைக்கலாம் 

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

Link to comment
Share on other sites

எல்லா மரக்கறிகளையும் கறியாகச் செய்து சாப்பிடுவதில் உடன்பாடில்லை. பெரும்பாலான மரக்கறிகளைப் பச்சையாகவே சாப்பிடுவதுண்டு. 

வேக வைப்பதில் உள்ள பிரதான நன்மை, வெப்பம் மரக்கறிகளில் உள்ள கிருமிகளையும் இரசாயன மருந்துகளையும் அழிக்கும். பிரதான தீமை அவற்றிலுள்ள பெரும்பாலான விற்றமின்கள் அழிக்கப்பபடுவதுடன் வெப்பம், உப்பு, புளி போன்ற சேர்வைகள் புரதங்களைச் சிதைத்துவிடும். Omega 3 போன்ற நல்ல கொழுப்புகளும் வெப்பத்தால் மாற்றமடையும்.

 

கீரை வகைகளில் உள்ள முத்தாத இலைகளை சம்பல் போன்ற உணவுகளாகச் செய்து சாப்பிடலாம். ஊரில் இருக்கும்போது வெண்டிக்காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகச் சாப்பிடுவதுண்டு.

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

 

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட விடயம் சரியாக விளங்கவில்லை. உணவை அதிகநேரம் வெளியே வைத்தால் அதில் கிருமிகள் தொற்றிப் பெருகும். அதனைசொ மீண்டும் சூடாக்க அதிலுள்ள கிருமிகள் இறந்து நச்சுத் தன்மை உண்டாகும் என நினைக்கிறேன். 

9 hours ago, பெருமாள் said:

சோறு : உணவு தர நிர்ணயத்தின்படி வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.

கிழங்கு வகைகள் : உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், விற்றமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும்.

https://newuthayan.com/story/15/மீண்டும்-சூடு-செய்தால்-வ.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

பயம்வேண்டாம் தம்பி தமிழ் சிறீ, சூடுசெய்யாமல் கொழும்பான் அவர்களின் வழியைப் பின்பற்றினாலும் இன்பம்தான். அன்றி உண்டபின்பு அதனைச் சூடேற்றும் சூட்சுமங்களும் உண்டு. அந்தச் சூட்சுமத்தில் சூடுமட்டுமல்ல, இன்பம் கிளுகிளுப்பு எல்லாம் வரும்.

 maxresdefault.jpg

அய்யய்யோ... பாஞ்ச் அண்ணை  எனக்கு, தொப்பிளை கண்டால்... "அலர்ஜி.:grin:
அடுத்த பிள்ளை பிறந்திடுமோ என்று.... இப்ப,  தொப்பிளை... பார்க்கிறதே இல்லை.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் பழுதடைந்த கறியினை சூடாக்கினால் நஞ்சாகும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஜப்பானியர்கள் மீன்களைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள். சூடை மீனை நன்றாகச் சுத்தம் செய்து கிடையாக இரண்டு துண்டுகளாகச் சீவி நடு முள்ளை எடுத்துவிட்டு உப்புத் தூவி ஒலிவ் எண்ணையைத் தடவி வாசனைப் பொருட்களைத் தூவி 6 மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேசிக்காய் புளியைப் பிழிந்து விட்டுச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். 

எந்தவொரு விலங்கின  உணவையும், வெப்பத்திற்கு உட்படுத்தி சமைக்காமல் உண்பது ஆபத்தானது.

காரணம், நோய்கள், ஒட்டுண்ணிகள்.

கடலுணவுகளில், ஒட்டுண்ணிகள் இருபதற்கு வாய்ப்புள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

அதிலும் மீன் குழம்பு பழைய குழம்பு தான் சுவையாக இருக்கும்.

அதுசரி இன்னும் 40-50 வயது பிளானா?
வீட்டுக்காரி தாங்கினாலும் பூமாதேவி தாங்க மாட்டாள்.

Link to comment
Share on other sites

23 hours ago, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்கள் பின்னூட்டம் யாருக்கெல்லாம் சரிப்பட்டுவருமோ எனக்குச் சரிவராது. நான் யப்பான் நாட்டுக்குச் சென்று குடியிருக்க விரும்பியுள்ளேன். அங்கு 125 என்ன அதற்குமேலும் தாக்குப்பிடிக்கலாமாம். 🤣

Image+2.png

Link to comment
Share on other sites

On 8/6/2019 at 11:20 AM, suvy said:

உதெல்லாம் சரிவராது பெருமாள் , நாங்கள் காலம் காலமாக பழைய கறி வகையறாக்களை சூடுபடுத்தித்தான் சாப்பிட்டு வருகின்றோம்....இதுவரை ஒரு பிரச்சினையும் இல்லை.இன்னும் ஒரு நாற்பது ஐம்பது வருடம் தாக்குபிடிக்கலாம் என்றுதான் நினைக்கிறன். அதுக்கு பிறகு உணவு விஷமானால் என்ன, அமுதமானால் என்ன.....!   👍

உங்களுக்கு இப்ப என்ன வயது? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2019 at 5:00 AM, தமிழ் சிறி said:

என்னப்பா... பயப்பிடுத்துகின்றீர்கள்.
மேலே... குறிப்பிட்ட உணவு எல்லாவற்ற்றையும்... சூடாக்கிதான்... சாப்பிடுவோம்.
இதற்காக... ஒவ்வொரு நாளும் சமைத்துக் கொண்டிருக்க முடியாதே. 

ஆரோக்கிய வாழ்வு அறுபது வயதுக்கு பின் தேடி பலனில்லை மண்டையில் இருக்கும் நியுரோன்கள் எல்லாம் மெல்ல மெல்ல செயல் இழக்கும் நேரம்   ஊரில் இருக்கும்மட்டும் கொல்லையில் நிக்கும் ஆடும் மாடும் முருங்கையிலை யும் செவ்விளநீரும் கோழியும்  இயற்கையான முறையில் எங்களுக்கு உதவின இங்கு வந்து கடலில் மூணு மாதம் வாழ்ந்த  மீன் பிரீசரில் இரண்டு வருடம் கிடந்த பின் சட்டிக்குள் போட்டு வேகவைத்து  கறி எனும் பெயர் குடுத்து சாப்பிடுக்கிரம் பின்பு அதையே மைக்ரோ வேயில் சூடு படுத்தி நஞ்சாக்கி சாப்பிடுகிரம்  தேவையா ? இதைவிட மோசமானது மீன் டின் ஏற்கனவே காலாவதியாகி போன டின்னை திகதியை அழித்து விட்டு புதிதாக இருவருடங்கள் அடித்து விட்டு விற்பனைக்கு விடும் இந்தவகையான டின்கள் என்ன கெடுதியை கொண்டுவரும் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை .

இன்னும் வரும்  ஜனவரி முதல் imo 2020 எனும் புயல் அடிக்க போகுது முக்கியமா புலம்பெயர் எங்களை பாரியளவில் தாக்குதலுக்கு முகம் கொடுக்கபோகிரம் அதாவது உலகெங்கும் உள்ள கப்பல்கள் அனைத்தும் குறைவான சல்பர் உள்ள எண்ணெயை பாவிக்க சொல்லி உலக கப்பல் போக்குவரத்தை கட்டுபடுத்தும் imo  அறிவித்துள்ளது இதனால் கப்பல் மூலம் வரும் அரிசி போன்ற பலசரக்கு வகைகள் பன்மடங்கு விலைஎறபோகுது அப்போது இந்த டின் வகைகள் இப்ப இரண்டு வருடம் அடிக்கும் கொள்ளை கூட்டம் இனி மூன்றுவருடத்துக்கு அடிப்பினமாக்கும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைக்ரோ அவனில் வைத்து சூடாக்காமல் அடுப்பில் வைத்து சூடாக்கினால் அதிக பாதிப்பில்லை என்று செல்லினம்... நான் அவித்த முட்டை,உ .கிழங்கு செலரி போன்றவற்றை திரும்பவும் சூடாக்குவதில்லை ...கடைகளில் சிப்ஸ் வாங்கும் போது எத்தனை தரம் திரும்ப,திரும்ப எண்ணெயில் பொரித்து இருப்பார்கள்...கூடாது என்று மனதிற்கு தெரிந்தாலும் வாயை😋 கட்டிப் போடேலாமல் வாங்கி திண்பதுண்டு 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.