Jump to content

அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”

கிரிக்கெட் வீரர் அஸ்வின்படத்தின் காப்புரிமைGREG WOOD

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத்தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-49232507

Link to comment
Share on other sites

"இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்".

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்... இல்லை எனில் இந்த அழுகுரல்கள் தொடரவே செய்யும்.

Link to comment
Share on other sites

On 8/6/2019 at 3:24 PM, ampanai said:

"இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்".

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்... இல்லை எனில் இந்த அழுகுரல்கள் தொடரவே செய்யும்.

இந்தி பேசத் தெரிவதனால் உள்ள நன்மையை வெளிப்படுத்தவே பிபிசி யின் இந்த செய்தி. பலமொழிகளைத் தெரிந்து வைத்தல் எப்போதும் நல்லதே. ஆனால் அது திணிப்பாக மாறும்போதுதான் முரண்பாட்டை தோற்றுவிக்கும். 

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

Link to comment
Share on other sites

2 minutes ago, manimaran said:

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

தமிழன் நாட்டில் தமிழை அவர்களுக்குள் பேசும்பொழுது அந்த வீரர்களுக்கு இப்படி ஒரு அழும் நிலை வராது என்பதே என் கருத்து.

ஆம், ஆக்கிரமிப்பிற்கே உள்ளாகாத பிரித்தானியாவில் கூட பிரச்சனைகள் உண்டு,
ஆனால், விடுதலை அடைந்த கிழக்கு திமோர் போன்ற நாடுகள் அமைதியாக வாழவும் செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manimaran said:

இந்தி பேசத் தெரிவதனால் உள்ள நன்மையை வெளிப்படுத்தவே பிபிசி யின் இந்த செய்தி. பலமொழிகளைத் தெரிந்து வைத்தல் எப்போதும் நல்லதே. ஆனால் அது திணிப்பாக மாறும்போதுதான் முரண்பாட்டை தோற்றுவிக்கும். 

தமிழனுக்கு தனிநாடு கிடைத்தால் நல்லதே. ஆனால் அது எமக்குள்ள பிரச்சணைகளுக்கெல்லாம் தீர்வாக அமையும் என எண்ணுவது பொருத்தமற்றது. அன்மையில் விடுதலையடைந்த நாடுகள் பல இதற்கு உதாரணம்.

ந‌ம‌க்குள் என்ன‌ பிர‌ச்ச‌னை / அந்த‌ மாபெரும் த‌லைவ‌ன் பின்னால் ஈழ‌த்த்தில் ஒட்டு மொத்த‌ இன‌மும் அவ‌ர் பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌ வில்லையா ,

எல்லா இன‌த்திலும் விரோதிக‌ளும் குழ‌ப்ப‌ வாதிக‌ளும் துரோகிய‌லும் இருக்கின‌ம் , அதை எல்லாம் தான்டி எம‌க்கான‌ நாடு அடைஞ்சு அத‌ த‌மிழீழ‌ க‌ன‌வோடு ம‌டிந்து போன‌ மாவீர‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்பிப்ப‌து ஒவ்வொரு த‌மிழ‌னுடைய‌ க‌ட‌மை  /

என்னை த‌ல‌ கீழா க‌ட்டி வைச்சு அடிச்சாலும் , நான் ஒரு போதும் ஹிந்தியோ சிங்க‌ள‌மோ க‌ற்று கொள்ள‌ மாட்டேன் , 
என‌க்கு எல்லாமே என் த‌மிழ் மொழி தான் , த‌மிழுக்கு தான் எப்ப‌வும் முக்கிய‌ம் கொடுப்பேன் /
மாற்றான் மொழி தெரியாட்டி என‌க்கு அவமான‌ம் இல்லை , என் தாய் மொழி தெரியாட்டி தான் என‌க்கு பெருத்த‌ அவ‌மான‌ம் 😉 /

Link to comment
Share on other sites

இந்தியாவை முழுவதுமாக ஆண்டு கொண்டிருக்கும் ஒரு வர்க்கத்தை சேர்ந்தவர், தான் ஹிந்தி தெரியாமையால் அவதிப்பட்டதாக கூறுவதற்கு பின்னால் உள்ள அரசியலின் கோட்பாட்டுப் புரிதல் நமக்கு அவசியமானது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.