Jump to content

"சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி... யாருக்காவது தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 Ãhnliches Foto

"சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா?
சில  இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது.

இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்....
கடையெல்லாம்....  சிவப்பு  வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது.
அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். 
ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. 
அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது  அதன் செய்முறையை... தாருங்களேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாய் இருக்கும். ஓடிப் போய் செய்து சாப்பிடுங்கோ.....!   👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து பச்சை மிளகாய், மிளகு தூள் மற்றும் கொஞ்ச கடுகு தூளாக்கி போடுவார்கள்.  எனக்கு கட்ட சம்பல், லுனு மிரிஸ் தான் விருப்பம். செய்முறை தேவையானால் சொல்லவும் சிறி 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இரண்டு முறையில் வீட்டில் அடிக்கடி செய்வது.

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

2)அரைப்பதமாக பழுத்த தக்காளி சிறிது சிறிதாக அரிந்து வெண்காயத்தையும் அதே போல வெட்டி உப்பு கொஞ்சம் சுண்டக் கூடிய மாதிரி தேசிக்காய் விட்டு அங்கால இஞ்சால பார்த்திட்டு கையால ஒருக்கா பிசைந்து போட்டு சாப்பிட்டுப் பாருங்க.

பி.கு:-வெண்காயம் வெண்காயமாக தின்றுவிட்டு ஆத்துக்காரிக்கு கரைச்சல் கொடுக்கக் கூடாது தம்பி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து

இது சிறிதளவு வேறுபட்ட முறை.

பின்பு, மிகவும் மெவிதான நெருப்பில் சிறிதளவு நேரம் வெங்காயத்தை saute பண்ணுங்கள் (ஈரத்தன்மை வெங்காயத்தில் இருக்கவேண்டும்), உப்பை தூவவும். சிறிதளவு வினிகரும் (மணமில்லாத) சேர்க்கலாம்.

மேலே nilmini சொல்லியவாறு, கடுகு, மிளகு, பச்சை மிளகாயுடன் செய்து முடிக்கலாம்.

இன்னும் ஒரு படி, சாலட் ட்ரெஸ்ஸிங் ஐ நீங்களே செய்வது. சிறிதளவு கரட்  சிறிய துருவல் ( grated carrot), 1-3 பற்கள் பச்சை உள்ளி துருவல் (துருவலின் அளவு குறுணியளவில்), ஒலிவ் ஆயில்  அல்லது கடையில்  வாங்கிய சாலட் ட்ரெஸ்ஸிங்,  எலுமிச்சம் சாறு, நொறுக்கிய மிளகு, உப்பு வேண்டியளவு. 

இவையெற்றலாம் bowl இல் சேர்த்து, சிறிதளவு நேரம் whisk பண்ணவும். இது, கரோட்டின் நறு நறு வென்ற கடிபடும் உணர்வுடன்,  நாவில் அவ்வப்போது கூசுவது (உள்ளிக் குறுணி)  போன்ற ருசியைத் தரும். 

கரட் இல்லாமலும், உள்ளியில் மட்டும் செய்யலாம், புதிய உணவுகளை துணிகரமாக சுவைப்பவராயின்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சிவப்பு வெங்காய சலாட்"  செய்வது எப்படி யாருக்காவது தெரியுமா?
சில  இடங்களில்... ஓரிரு முறை சாப்பிட்டுள்ளேன். மிக அருமையான சுவையாக இருந்தது.

இப்போ... இங்கு.... சிவப்பு வெங்காயம், அறுவடை செய்யும் காலம் என்பதால்....
கடையெல்லாம்....  சிவப்பு  வெங்காயம் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளது.
அதனைப் பார்த்து... ஆசையுடன்... 500 கிராம் வெங்காயம் வாங்கி வந்து விட்டேன். 
ஆனால்... அதனை, எப்படி செய்வது என்று தெரியவில்லை. 
அந்த வெங்காயம்.... வாடி, வதங்க முன்னம்... ஆராவது  அதன் செய்முறையை... தாருங்களேன். :)

சிறி ஒரு இறாத்தல் வெண்காயமா வாங்கினீர்கள்?
எமது வீட்டில் 10 இறாத்தல் பை தான் வாங்குவோம்.
அனேகமான நேரங்களில் 3.99$ க்கு விற்பார்கள்.

2 minutes ago, Kadancha said:

இது சிறிதளவு வேறுபட்ட முறை.

பின்பு, மிகவும் மெவிதான நெருப்பில் சிறிதளவு நேரம் வெங்காயத்தை saute பண்ணுங்கள் (ஈரத்தன்மை வெங்காயத்தில் இருக்கவேண்டும்), உப்பை தூவவும். சிறிதளவு வினிகரும் (மணமில்லாத) சேர்க்கலாம்.

மேலே nilmini சொல்லியவாறு, கடுகு, மிளகு, பச்சை மிளகாயுடன் செய்து முடிக்கலாம்.

இன்னும் ஒரு படி, சாலட் ட்ரெஸ்ஸிங் ஐ நீங்களே செய்வது. சிறிதளவு கரட்  சிறிய துருவல் ( grated carrot), 1-3 பற்கள் பச்சை உள்ளி துருவல் (துருவலின் அளவு குறுணியளவில்), ஒலிவ் ஆயில்  அல்லது கடையில்  வாங்கிய சாலட் ட்ரெஸ்ஸிங்,  எலுமிச்சம் சாறு, நொறுக்கிய மிளகு, உப்பு வேண்டியளவு. 

இவையெற்றலாம் bowl இல் சேர்த்து, சிறிதளவு நேரம் whisk பண்ணவும். இது, கரோட்டின் நறு நறு வென்ற கடிபடும் உணர்வுடன்,  நாவில் அவ்வப்போது கூசுவது (உள்ளிக் குறுணி)  போன்ற ருசியைத் தரும். 

கரட் இல்லாமலும், உள்ளியில் மட்டும் செய்யலாம், புதிய உணவுகளை துணிகரமாக சுவைப்பவராயின்.   

இந்தளவு பொறுமை சிறிக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

அருமையாய் இருக்கும். ஓடிப் போய் செய்து சாப்பிடுங்கோ.....!   👍

சுவி அண்ணா...  நீங்கள் பதிந்த சலாட் காணொளியில்...  வெள்ளரிக்காய் எல்லாம் வருகின்றது.
நன்றாக இருக்கும் போல் உள்ளது. நன்றி அண்ணா. :)

நான் சாப்பிட்ட இடத்தில்.... மெல்லியாதாக  சீவிய,  வெங்காயமும்.... 
தயிர், குறைவான தக்காளிப் பழ துண்டுகள் இருந்ததாக நினைவு.
ஏனோ... தெரியவில்லை, இன்று சாப்பிட வேண்டும் போல் இருந்தது.
நான்... எல்லாம் தேடி வாங்கி வர, மதியம் 11 ஆகி விட்டது.  

இப்ப....  நேரம் போய் விட்டது.  உந்த, எடுப்பெல்லாம்...  இப்ப செய்ய முடியாது என்று...
மனிசி... குசினியை... பூட்டி  விட்டா...

பிற் குறிப்பு: மனிசிக்கு  கோவம் வந்த காரணம் என்னவென்றால்.....
அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.
அதற்கு... இவ, சமைத்துத்துக் கொண்டு இருக்கும் போது...
நான்... "சிவ பூசைக்குள் கரடி பூந்த மாதிரி".... குழப்பியடித்து விட்டேன்  போலுள்ளது.   

டிஸ்கி: என்ரை  மனிசியை....  "அடி  கள்ளி" என்று சொன்னால்....  
இன்று பின்னேரத்துக்கு இடையில்.... வெங்காய சலாட் இருக்கும்.

டிஸ்க்கிக்கு டிஸ்கி: ஆனால்... இன்னும், கள்ளி என்று சொல்லவில்லை.  🤣

Link to comment
Share on other sites

14 minutes ago, ஈழப்பிரியன் said:

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

நான் இவ்வாறு செய்து சோற்றுடன் சாப்பிடுவதுண்டு. ஆனால் தேசிப்புளி விட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Lara said:

நான் இவ்வாறு செய்து சோற்றுடன் சாப்பிடுவதுண்டு. ஆனால் தேசிப்புளி விட்டதில்லை.

தயிரில் புளித் தன்மை இருப்பதால் சிலர் பாவிப்பதில்லை.ஆனாலும் சிறிது தேசிக்காய் விட்டால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nilmini said:

வெங்காயத்தை மெல்லிய சீவலாக வெட்டி உப்பை தேசிக்காய் புளி விட்டு  மெதுவாக பிழிந்து வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து பச்சை மிளகாய், மிளகு தூள் மற்றும் கொஞ்ச கடுகு தூளாக்கி போடுவார்கள்.  எனக்கு கட்ட சம்பல், லுனு மிரிஸ் தான் விருப்பம். செய்முறை தேவையானால் சொல்லவும் சிறி 

நில்மினி.... வெங்காயத்தை, மெல்லிய சீவலாக  மட்டும் சரியாக உள்ளது,
ஆனால்... அதனை பிழியும் போது... அதன் சத்துகள்,  எல்லாம் போய் விடுமே....
சக்கையை... சாப்பிட்டு, என்ன பிரயோசனம். 😮

கட்டா சம்பல் போத்தில்.. அதுகும்  "நிரூ" தயாரிப்புகள் அல்லது 
லீலா தயாரிப்புகள் போத்தல்களில் தமிழ் கடையில் வாங்குவோம்.  
வீட்டில்.. செய்து.. மினக்கெடுவது இல்லை.

"லுனு மீரிஸ்" என்றால் என்ன....
இதுவரை... கேள்விப்  படவேயில்லை. மாசி சம்பாலா?
என்ன இருந்தாலும்.... இரண்டு செய்முறைகளையும்  பதிந்து விடுங்கள் நில்மினி.
ஆனால்... ஒரு முறை செய்தால்... ஒரு மாதம் பாவிக்கக் கூடிய அளவில் இருக்குமா?
ஏனென்றால்... வீட்டில்,  மற்றவர்கள்... மச்சம்  சாப்பிடுவது, குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி மிகவும் இலகுவாகவும் சுவையாகவும் இரண்டு முறையில் வீட்டில் அடிக்கடி செய்வது.

1) 2-3 வெண்காயத்தை நீட்டுக்கு வெட்டி அத்துடன் தயிர் சேர்த்து தேவையான உப்பு தேசிக்காய் விட்டு கலந்து சாப்பிட்டு பாருங்கள்.இது கூடுதலாக புரியாணி போடும் இடங்களில் செய்வார்கள்.

2)அரைப்பதமாக பழுத்த தக்காளி சிறிது சிறிதாக அரிந்து வெண்காயத்தையும் அதே போல வெட்டி உப்பு கொஞ்சம் சுண்டக் கூடிய மாதிரி தேசிக்காய் விட்டு அங்கால இஞ்சால பார்த்திட்டு கையால ஒருக்கா பிசைந்து போட்டு சாப்பிட்டுப் பாருங்க.

பி.கு:-வெண்காயம் வெண்காயமாக தின்றுவிட்டு ஆத்துக்காரிக்கு கரைச்சல் கொடுக்கக் கூடாது தம்பி.

Bildergebnis für à®à®µà®©à¯ à®à®¤à¯à®à¯à®à¯ à®à®°à®¿à®ªà¯à®ªà®à¯à®à¯ வரமாà®à¯à®à®¾à®©à¯

நல்ல, குறிப்புகள் ஈழப்பிரியன். :)
பி.கு:-  இவன், அதுக்கு.....  சரிப்
  பட்டு,  வர மாட்டான்  😄 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.

சிறி எமது வீட்டிலும் இதே மாதிரி தான் மரவள்ளியும் பூசணியும் சேர்த்து சமைப்பார்கள்.பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

அயலில் வசிக்கும், அவவின் தமிழ் நாட்டு (திருச்சி)  நண்பி.... 
பூசனிக்காயுடன், மரவள்ளிக்கிழங்கை  சமைத்து சாப்பிட்டது இல்லை என்று சொன்னவவாம்.

நானும் ஏனைய மரக்கறிகளுடன் இவற்றையும் சேர்த்து செய்த சாம்பாறு, குழைசாதம் போன்றவற்றை தான் சாப்பிட்டிருக்கிறேன், தனியாக இரண்டையும் சேர்த்து சமைத்ததில்லை.

32 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி எமது வீட்டிலும் இதே மாதிரி தான் மரவள்ளியும் பூசணியும் சேர்த்து சமைப்பார்கள்.பிள்ளைகளுக்கு நல்ல விருப்பம்.

நானும் ஒரு நாளைக்கு செய்து பார்க்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

நானும் ஏனைய மரக்கறிகளுடன் இவற்றையும் சேர்த்து செய்த சாம்பாறு, குழைசாதம் போன்றவற்றை தான் சாப்பிட்டிருக்கிறேன், தனியாக இரண்டையும் சேர்த்து சமைத்ததில்லை.

நானும் ஒரு நாளைக்கு செய்து பார்க்க வேணும்.

லாரா....  அவசரப்  பட்டு.... மரவள்ளிக்  கிழங்கையும், 
பூசணிக் காயையும் ஒன்றாக சமைக்காதீங்கோ.....  
இது.... எல்லாம், எமது "குசினி ஆய்வு கூடத்ததில்..." 
செய்யப் படும் பரீட்சார்த்த  முயற்சிகள் மட்டுமே...  

நாளைக்கு... எமக்கு.. வாந்தி, பேதி, கொலரா,  வயித்தாலையடி...   
சிக்கன் குனியா, மட்டன் குனியா, பிஷ் குனியா....     
போன்ற....   வருத்தம் வராமல் இருந்தால்...
நீங்களும்...இதனை செய்து பாருங்கள்... உறவுகளே...

உயிர், முக்கியம் அப்பு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 500 கிராம் வெங்காயத்தில் 200 கிராம் சலாட் செய்திருப்பீர்கள். மிகுதி 275 கிராமில்(சேதாரம் 25 கிராம்) இதையும் ஒருக்கால் செய்து பாருங்கள். இதில் சின்ன வெங்காயத்துக்கு பதிலா சிகப்பு வெங்காயத்தையும் பாவிக்கலாம்.டேஸ்ட்டா இருக்கும். அஞ்சலி இல்லைன்னா அமலாபால்.....! 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

லாரா....  அவசரப்  பட்டு.... மரவள்ளிக்  கிழங்கையும், 
பூசணிக் காயையும் ஒன்றாக சமைக்காதீங்கோ.....  
இது.... எல்லாம், எமது "குசினி ஆய்வு கூடத்ததில்..." 
செய்யப் படும் பரீட்சார்த்த  முயற்சிகள் மட்டுமே...  

நாளைக்கு... எமக்கு.. வாந்தி, பேதி, கொலரா,  வயித்தாலையடி...   
சிக்கன் குனியா, மட்டன் குனியா, பிஷ் குனியா....     
போன்ற....   வருத்தம் வராமல் இருந்தால்...
நீங்களும்...இதனை செய்து பாருங்கள்... உறவுகளே...

உயிர், முக்கியம் அப்பு....:grin:

சிறி இதே முறையில் எமது வீட்டில் நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்தே சமைப்போம்.அதற்குள் இஞ்சி கலக்காமலிருந்தால் சரி.

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி இதே முறையில் எமது வீட்டில் நீண்ட காலமாக மரவள்ளியும் பூசணியும் சேர்த்தே சமைப்போம்.அதற்குள் இஞ்சி கலக்காமலிருந்தால் சரி.

அவர் உங்கள் கருத்தை ஏற்கனவே வாசித்திருப்பார். சும்மா பம்பலுக்கு அப்படி எழுதியிருப்பார். 😀

Link to comment
Share on other sites

On ‎8‎/‎6‎/‎2019 at 8:58 AM, தமிழ் சிறி said:

 

"லுனு மீரிஸ்" என்றால் என்ன....
இதுவரை... கேள்விப்  படவேயில்லை

லுனி மிரிஸ் என்பது சிங்களவர்கள் செய்யும் ஒரு சம்பல். சிவப்பு வெங்காயம், உப்பு, சிறு துண்டுகளாகப்பட்ட மாசிக் கருவாடு, உறைப்பான மிளகாய்த் தூள் இவற்றுடன் சற்று தூக்கலாக கலந்த எலும்மிச்சை சாறு கொண்டு செய்யப்படும் சம்பல். தேங்காய் ரொட்டி (பொல் ரொட்டி) க்கு நல்ல சுவையாக இருக்கும்.

லுனு மிரிசை சாப்பிட்டு விட்டு எவருக்கும் முத்தம் கொடுக்க முடியாது என்பது இதன் தீங்கான பின் விழைவாகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

லுனி மிரிஸ் என்பது சிங்களவர்கள் செய்யும் ஒரு சம்பல். சிவப்பு வெங்காயம், உப்பு, சிறு துண்டுகளாகப்பட்ட மாசிக் கருவாடு, உறைப்பான மிளகாய்த் தூள் இவற்றுடன் சற்று தூக்கலாக கலந்த எலும்மிச்சை சாறு கொண்டு செய்யப்படும் சம்பல். தேங்காய் ரொட்டி (பொல் ரொட்டி) க்கு நல்ல சுவையாக இருக்கும்.

லுனு மிரிசை சாப்பிட்டு விட்டு எவருக்கும் முத்தம் கொடுக்க முடியாது என்பது இதன் தீங்கான பின் விழைவாகும்.

 

லூணு  மீரிஸ் ... செய்வதற்கு அதிகம் மினக்கெடத் தேவையில்லை போலுள்ளது.
தேவையான பொருட்களும் மிக குறைவாகவே உள்ளது.
சம்பல்  வகைகளை.... அதிகம்  சிங்களவர்கள்தான் கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கின்றேன்.
கட்டா சம்பல், சீனிச் சம்பல், மாசி சாம்பல் என்று... பலவகைகளில்  கண்டு பிடித்திருக்கின்றார்கள். 

வெங்காயம், உள்ளி சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போனாலே.. முகத்தை சுழிப்பார்கள்.
இதற்குள்... முத்தத்துக்கு... ஆசைப்படுவது ரொம்ப அதிகம்,  நிழலி  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2019 at 2:30 PM, ஈழப்பிரியன் said:

சிறி ஒரு இறாத்தல் வெண்காயமா வாங்கினீர்கள்?
எமது வீட்டில் 10 இறாத்தல் பை தான் வாங்குவோம்.
அனேகமான நேரங்களில் 3.99$ க்கு விற்பார்கள்.

29839-zwiebeln.png

ஈழப்பிரியன்.... இங்கு சென்ற மாதம் ஒரு கிலோ வெங்காயம் 2 € விற்கு விற்றார்கள்.
குளிர் காலம் என்ற படியால்... அவுஸ்திரேலியாவிலிருந்து  இறக்குமதி செய்யப் பட்ட 
வெங்கயாம் என்ற படியால்  அவ்வளவு விலை.

இன்னும் ஒரு மாதத்தில்... இங்கும் கிலோ 20 சென்ற் அளவிற்கு வரும். 
அந்த நேரம் நானும்..  5 கிலோ சாக்குகளில்  நாலைந்தை வாங்கி,
நில அறையில் சேமித்து வைத்தால்... கொஞ்ச காலம் சமாளிக்கலாம்.

கனக்க  வாங்கினால்.. அது முளைக்க தொடங்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா..... வெங்காய சாலட்  செய்யும் ஒரு,  முறையை அனுப்பியிருந்தார்.
நொறுக்கிய செத்தல் மிளகாய், வினாகிரி, சீனி, உப்பு, மிளகு எல்லாம் சேர்த்து செய்யும் சலாட் 
வித்தியாசமான சுவையாக இருக்கும் என நம்புகின்றேன்.  

-------  --------

சிவப்பு வெங்காய சாலட் 

தேவையான பொருட்கள் ...

 

இரண்டு அளவான பெரிய வெங்காயம்

( பம்பாய் வெங்கயம் என்பார்கள் )

 தனி மிளகாய் த்தூள் அல்லது 

நொறுக்கிய செத்தல் மிளகாய் ஒரு மேசைக்கரண்டி 

ஒரு மேசைக் கரண்டி வினிகர் ..

அரைத்தேக்கரண்டி   சீனி 

தேவைக்கு உப்பு ....

 சிறிது மிளகு தூள் 

 

முதலில்  வெங்காயத்தை  மெல்லிதாக பிறை போல் வெட்டவும் . பின்பு உப்பு மிளகு சீனி ..மிளகாய் தூள்  வினிகர் ..

ஆகியவற்றை  சேர்த்து ...கரண்டியால் கிளறவும். 

 

இது ...சோற்றுடன் ...பக்க துணை யாக ( சைடு டிஷ் )...சாப்பிடலாம்.

 

மேசைக் கரண்டி  டேபிள் ஸ்பூன் 

 தேக்கரண்டி .... டி ஸ்பூன் 

நிலாமதி அக்கா.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.