Jump to content

"ஹவாய் நிறுவனத்தை தடை செய்தால்.."- இந்தியாவை எச்சரிக்கும் சீனா!


Recommended Posts

சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது.

அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் இழுபறியின் மையத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோளிட்டு மே மாதத்தில் இந்த நிறுவனத்தை தடை செய்துள்ளது. சீனா உளவு பார்ப்பதற்காக இதை பயன்படுத்தலாம் என்று கூறி ஹவாய் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளையும் வேண்டியுள்ளது.

உலகெங்கிலும் 5G மொபைல் உள்கட்டமைப்பிலிருந்து ஹவாய் வெளியேற்றப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறுவருகிறது. இது பற்றி சீனாவின் பிரச்னைகளை கேட்க, ஜூலை 10 ம் தேதி அன்று பெய்ஜிங்கில் இந்தியாவின் தூதர் விக்ரம் மிஸ்ரி சீன வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாக புதுடில்லியில் உள்ள இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது, சீன அதிகாரிகள் ஹவாய்  நிறுவனத்திற்கு தடை விதித்தால் சீன வணிகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது "தலைகீழ் பொருளாதாரத் தடைகள்" ஏற்படக்கூடும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்துக் கோரியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்ட ராய்ட்டர்ஸ் கோரிக்கைக்கு சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் பதிலளிக்கவில்லை.

அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடனான சந்திப்பை வட இந்தியாவின் தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடத்தவுள்ளார், அங்கு இருவரும் 53 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 3,75,213 கோடி) வர்த்தகம் உள்ளிட்ட வர்த்தக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பொருளாதார பிரிவின் தலைவர் அஸ்வானி மகாஜன், இந்தியாவில் ஹவாய் செயல்பாடுகள் குறித்து கவலைகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

"ஒரு நாடாக எங்கள் ஹவாய் மீதான நம்பிக்கை இன்னும் உறுதியாகவில்லை. உலகளவில், ஹவாய் உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் தாங்கள் திட்டங்களை 'குறைக்கின்றன' என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன" என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஹவாய் உட்பட 5G தொழில்நுட்ப சோதனை திட்டத்திற்கு ஆறு நிறுவனங்களிலிருந்து வேண்டுகோள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மற்றவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் ஸ்வீடனின் எரிக்சன், பின்லாந்தின் நோக்கியா மற்றும் தென் கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://gadgets.ndtv.com/tamil/telecom/china-said-to-warn-india-of-reverse-sanctions-if-huawei-is-blocked-news-2081559?pfrom=home-topstories

 

Link to comment
Share on other sites

உலகம் இரண்டாக பிரியும் நிலை ?
கிழக்கில் சீனாவின் ஹவாய். மேற்கில் அமெரிக்காவின் தொழில்நுட்பம்.
இடையில் அகப்பட்ட நாடுகள் தான் திரிசங்கு நிலையில்  ?

Trump says US is not going to do business with Huawei

https://www.cnbc.com/2019/08/09/trump-says-us-is-not-going-to-do-business-with-huawei-not-ready-to-make-a-trade-deal-with-china.html

  • The U.S. will no longer have any dealings with Chinese telecom giant Huawei, Trump said, adding he’s not ready for a trade deal with China.
  • “We are not going to do business with Huawei. ... And I really made the decision. It’s much simpler not doing any business with Huawei. ... That doesn’t mean we won’t agree to something if and when we make a trade deal,” Trump said.
  • The move on Huawei came after China halted buying American agricultural products in retaliation for Trump’s surprise tariffs threat last week.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.