Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-1-720x450.jpg

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் உற்சவ காலத்தின் தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழக்கமாக காணப்படுவதுடன், தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/நல்லூர்-ஆலய-வளாகத்துக்கு/

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, Paanch said:

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக்காவடி தடை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

தூக்குகாவடியில் காட்டுமிராண்டித்தனமாக தொங்குவது  நிலத்தில் புரண்டு உருளுவது போன்றன காட்டுவாசிகள் காலத்தில் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம். இப்போதைய அறிவியல் வளர்சியடைந்த காலத்தில் சிந்தக்கும்  திறன் இன்றி இவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளதா? சிந்தித்து பாருங்கள். 

ஒரு காலத்தில் பருவமெய முதலே பெண்பிள்ளைகளை திருமணம் செய்யது வைக்கும் பழக்கம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்ற இந்து பாரம்பரியங்கள்  ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட போதும் உங்களை போன்றவர்கள் எமது முன்னோர்கள், எமது பாரம்பரியம் எற்று புராணம் பாடினார்கள். அவர்கள்  சொல்லை அன்று கேட்டிருந்தால்  நாங்கள் இன்னும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இருந்திருப்போம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

உடற்பயிற்சி செய்யிறம் என்ற பெயரில் வீதிகளிலும்,மைதானங்களிலும் ஓடுபவர்களும், ஜிம்முக்கு போகிறவர்களும் எத்தனை பதக்கங்களை எடுத்துக் கிழித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

 

என்னது நீங்கள் சொல்வது அறிவுபூர்வமான  விவாதமா? அப்படியொன்றும் அறிவுபூர்வமாக நீங்கள் விவாதத்தித்ததாக  நான் எந்த திரியிலும் கண்டதில்லை. எப்ப பார்த்தாலும் சமய சம்பந்தமான சடங்குகளையும் நடைமுறைகளையும் நக்கலடிப்பதை விட என்ன அறிவு பூர்வமாக சொன்னீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் நல்லூர் ஆலய வளாகத்திலும் சுற்றாடலிலும் யாரும் வேட்டியுடணோ சேலையுடணோ வரக்கூடாது ஜீன்ஸ் சேட் டெனிம் வட இந்ந்திய உடைகளை அணிந்தே வரவேண்டும் எனச் சொன்னாலும் சொல்வார்கள் நல்லூர் ஆலயத்தின் உரிமையாளருக்குப் பாரம்பரியம் என்றால் என்னவென்று புரியவில்லைப்போல் இருக்கு. 

உண்மையில் எனது குடும்பத்தினதும் எனதும் குலதெய்வம் நல்லூர் முருகந்தான் ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மனதுக்குச் சங்கடமாக இருக்கு. தவிர உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் திருவிழாக்காலத்தில் மச்சம் மாமிசம் பாவிக்காமல் நல்லூரானை அனுட்டிப்பவன் நான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

Link to comment
Share on other sites

"நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

நிர்வாகத்திற்கு முடிவுகளை எடுக்க உரிமை உண்டு, அதை மக்கள்/பக்தர்கள் ஏற்றும் நடக்க வேண்டும். அது அவர்களின் கடமை.

ஆனால், ஏன் தடை செய்தொம் என்பதை நிர்வாகம் அறிவிக்க வேண்டும், அதுவே அவர்கள் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதை அவர்கள் இன்னும் செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ இந்த லூசுகள் செய்யிற வேலையை!!!!!!!!! 🤣

 

 

Link to comment
Share on other sites

இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது,  தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம்.

எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன.

அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது.

அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே.

என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே

Link to comment
Share on other sites

45 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

ஒருவர் கூறும் கருத்துக்கு எதிர்கருத்து எழுதவேண்டுமென்றால் அவருக்கு ஒரு முத்திரை குத்தி அவமதிப்பது உங்கள் வாடிக்கை. உங்களுக்காக நான் ஜெகோவா, அல்லலூயா லூசுக்கூட்டங்கள் செய்யும் வேலைகளை அறிய அங்கு செல்ல முடியாது. நான் பிறந்த மத முட்டாள்தனங்களை தான் கேள்வி கேட்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

எ.த, உங்கள் சுகப் படுத்த முடியாத மூலக்கொதி இங்கே எல்லாருக்கும் தெரிந்தது தான்! ஆனால் அந்த மூலக்கொதி தமிழ் வாசிப்பு கிரகிப்பிலும் கூட உங்களை அரைகுறைத் தமிழனாக மாற்றி விட்டது. கீழே மீளவும் நான் எழுதியதை கோடிகாட்டியிருக்கிறேன்!

2 hours ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

மற்ற படி உங்களுக்கு விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று விளக்கும் நோக்கம் எனக்கில்லை!

Link to comment
Share on other sites

"எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒருவேளை சம்பந்தர் ஐயாவும் மாவை சேனாதிராசாவும் தமது பாவங்களை கழுவ தூக்கு காவடி எடுக்க முயல்வதாக நிர்வாகத்திற்கு செய்தி கிடைத்திருக்கலாம் 😂

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

கண்டியில் தற்பொழுது நடக்கும் எசல பெரகராவில் யானைகளை வதைக்கிறார்கள் என்ற கருத்தை நீண்ட காலமாக செவிமடுக்கும் அஸ்கிரிய மற்றும் மால்வைத்தை பீடங்கள் கூட நல்லூர் நிர்வாகத்தை முன்மாதிரியாக முன்மாதிரியாக கொண்டு தடை விதிப்பார்கள் என்று எல்லாளன் நம்பலாம். ஆனால் கைமுனு நம்ப மாட்டான். அதனால் தான் அவன் மக்களுக்கு நாடு, எல்லாளன் மக்களுக்கு வேண்டுமானால் ஒரு சின்ன நினைவுச்சின்னம் (அதுவும் காலப்போக்கில் அழிக்கப்படும்). 

 

எசல பெரஹரா வௌி வீதி ஊர்வலம் இன்று ஆரம்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Me too இயக்கம் வந்த பின்னர் எல்லாப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களையும் பிற்போக்கு என்று முத்திரை குத்துகின்றார்கள்!

அலகு குத்தி தூக்குக்காவடி எடுப்பது அதைவிட கடுமையான சூழலில் இருந்து காத்த கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு காணிக்கையாகவும் இருக்கலாம்தானே.

Link to comment
Share on other sites

காட்டு மிராண்டித்தனம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாது. ஏதோ காடும் மிரட்டும் வன்முறையையும் கொண்டாதான ஒரு கூட்டுச்சொல் மாதிரி தெரிகின்றது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தமைக்கு முதன்மை காரணம் : சிங்கள காண்டுமிராண்டித்தனம்? அதற்காக சிங்கள இனமோ இல்லை சர்வதேசமோ வருத்தப்படுவதில்லை. தப்ப வலிமை கொண்டிருந்த உறவுகளில், பெரும்பான்மையாக ஈழ தமிழர்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து வாழுவதும் காட்டுமிராண்டித்தனம் கொண்ட நாடுகளில் தான், நானும் தான்.

தமிழர்கள் தம் இதிகாசங்கள், புராணங்கள், கலாச்சாரங்களில் இருந்த இந்த காலத்திற்கு ஒவ்வாத காண்டுமிராண்டித்தனங்களை விட்டு ஒரு பண்பாட்டில் உயர்ந்த சமூகமாக வந்து கொண்டிருக்கின்றது. எனக்கும் நூறு வீதம் நாம் அப்படிப்பட்ட ஒரு சமூகமாக, இனமாக மாறுவதில் மகிழ்ச்சியே.

ஆனால், ஒரு பல்லின மதங்கள், சமூகம் கொண்ட நாட்டில் ஒரு சிறுபான்மை மத, இனத்தவர்கள் மட்டும் செய்வது தற்கொலைக்கு சமனானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, tulpen said:

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

ஒருவனை பைத்தியக்காரன் என்பதற்கும், ஒருவன் பலகோடிபேரை  பைத்தியக்காரர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.

அடுத்தவரை தொந்தரவு செய்யாமலும் சட்டத்தை மீறாமலும் அவரவர் வழிபாட்டு கடமைகளை அவர்கள் விரும்பிய வகையில் ஈடேற்றுவது அவரவர் பிரச்சனை.

அதனால்தான்  அடுத்தவர் மூக்கு நுனியில் உங்கள் விரல் பட்டால்கூட குற்றம் என்று சட்டம் வைத்துள்ள மேற்குலகங்களில்கூட நீங்கள் சொன்ன காட்டுமிராண்டிதன வழிபாடுகளில் அந்நாட்டு அரசுகள் கை வைப்பதேயில்லை.

சாவின் விளிம்பிலிருந்து தப்பிய  தன் குழந்தைக்காக அலகுகுத்தி காவடி எடுப்பவர்களும் உண்டு , அது அவரவர்களின்  நம்பிக்கை நேர்த்திக்கடன், 

அவர்களின் முன்னால் போய் நின்று நீங்கள் செய்தது காட்டுமிராண்டிதனம் பைத்தியக்காரமான செயல்  செயல் என்று  சொல்லும் துணிவு உங்களுக்கிருக்கா?

நான் வேண்டுமென்றால் எனக்கு பிடிக்காத பைத்தியக்காரதனம்,காட்டுமிராண்டி தனங்களிலிருந்து என்னையும் எனது நெருங்கிய உறவுகளையும் ஒதுங்கியிருக்க சொல்லலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.