Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:
  1. - கோயில்கள் எல்லாம் ஒரு குளத்தை அருகில் ( அநேகமாக) கொண்டிருக்கும். இது மழை நீர் சேமிப்பிற்கு உதவும்
  2. - இந்த குளத்தில் கை, கால், முகம் கழுவுதல் - மக்கள் கூடும் ஒரு இடத்தில் சுகாதாரத்தை பேண உதவும்    
  3. - கடவுளை வீதியில் வலம் கொண்டு வருதலுக்கு, திடகாத்திரமான ஆண்களை தெரிவு செய்ய இது உதவும் 

 

இப்படித்தான் போலி  விஞ்ஞான விளக்கங்கள் வலம் வருகின்றன.😜

சம்பிரதாயங்களை மதிக்க மேற்சட்டை இல்லாமல் மகிந்த வரும் அளவிற்கு நல்லூர் முருகன் பலமாக இருக்கின்றார் என்று சந்தோஷப்படலாம்😁

_47590351_-66.jpg

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
55 minutes ago, Lara said:

 

இஞ்சியும் மரவெள்ளியும் சேர்த்து சாப்பிடுவதால் வரும் தீமையை எமது முன்னோர் முன்பே கூறினார்கள். மருத்துவ உலகு பின்னரே கண்டு பிடித்தது. 

இஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.

கள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

இல்லைத் தெரியாமல்தான் வினவுகிறேன் இங்கு விமர்சனம் செய்பவர்களது வீடுகளில் எப்படி உங்கள் மனைவி மற்றும் உறவினர்கள் எல்லோரும் இப்போ கடவுளைக்கும்பிடுவதை நிறுத்திவிட்டார்களா? சாமிப்படம் வைக்கும் இடத்தில் செருப்பைக்கழட்டி வைத்திருக்கிறீர்களா முதலில் உங்கட வீடுகளில் போய் வெள்ளை அடியுங்கோ 

தனிமனித உரிமைகளை மதிக்கவேண்டும் என்று சொல்லும் நாகரீகம் நிலவும் நாடுகளில் வாழ்வதால் குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிடுவதை எப்படித் தடுக்கமுடியும்? அது அடக்குமுறையல்லவா? 😬

Link to comment
Share on other sites

34 minutes ago, Justin said:

மத நம்பிக்கைகள் சடங்குகள் பற்றி எந்த மதத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞான விளக்கம் சொல்லும் கதையளந்தாலும் அது சொந்தக் காலில் நிற்க வக்கில்லாமல் செய்யும் திருட்டு வேலை தான்! இயேசுவின் பிறப்பை செயற்கைக் கருக்கட்டலாக கதையளந்தது கிறிஸ்தவரா என்பதே முக்கியமான கேள்வி! ஏனெனில் சம்மனசின் வாழ்த்தினால் மேரி கர்ப்பமானாள் என்பது அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று! அதை விஞ்ஞானமாக விளக்கினால் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒன்று குறைந்து விடும்! இப்படியே தண்ணீரில் நடந்தது, குருடன் பார்த்தது எல்லாவற்றையும் விஞ்ஞான விளக்கமாக்கினால் கிறிஸ்தவம் மறைந்து விடும்!  

இந்துக்கள் அப்படியல்லவே! நாம் பல நூற்றாண்டு முதலே கண்டு பிடித்து செய்து விட்டோம், இப்போது விஞ்ஞானிகள் நிரூபிக்கிறார்கள் என்று விஞ்ஞானத்தை வைத்து தங்கள் நம்பிக்கையை validate செய்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது. அது தான் மத நம்பிக்கைக்கு அவசியம் இல்லை என்கிறேன்.

இஞ்சியும் மரவள்ளியும் சேர்த்துத் தின்றால் மரணம் நிகழும் என்று அறிந்து கொண்ட பின்னர் உங்கள் முன்னோர்கள் சாப்பிட வேண்டாமென்று சொல்லியிருப்பர்! இரண்டையும் கலந்தால் சயனைட் உருவாகிறது என்று விஞ்ஞானி கண்டு பிடித்தான். இரண்டும் கண்டுபிடிப்புகளே! ஆனால், "எங்களுக்கு சயனைட் இருப்பது தெரிந்து தான் முதலே எழுதி வைத்து விட்டோம், இவர்கள் இப்போது லேட்டாகக் கண்டு பிடிக்கிறார்கள்!" என்று நக்கலாகச் சொல்வது தான் இந்துக்களின் வேலையாக இருக்கிறது!

 மருத்துவத்தை உறுதிப்படுத்துவது விஞ்ஞான ஆய்வுகளேயன்றி, அதை வெள்ளைக் காரன் வரவேற்கிறானா கறுத்தத் தோல் உடையவன் வரவேற்கிறானா என்பதை வைத்தல்ல! வெள்ளையன் பாவித்தால் அது சிறந்தது என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு உங்கள் தோல் நிறம் இனம் பற்றி தாழ்வுச் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

ஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.

முன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இஞ்சியும் மரவெள்ளியும் கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.

இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல. 😀

Link to comment
Share on other sites

மனிதனை படைத்தது யார்? கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.

கடவுளை படைத்தது/உருவாக்கியது யார்? மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.

அப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.

இருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.   

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

இஞ்சியும் மரவள்ளியும் சாப்பிட்டால் மணலம் வருகிறது என்று முன்னோர் சொன்னது கண்டு பிடிப்பல்ல. அனுபவத்தின் வெளிப்பபாடு. அதை தெரியாமல் சாப்பிட்டு பலர் நோய்வாய்பட்டு அல்லது இறந்தபின் அப்படி சொல்வது அனுபவத்தின் வெளிப்பாடு. இழ்த உணவை சாப்பிட்ட பின் ஒருவருக்கு Migräne வருகிறது என்று ஒருவர் அனுபவ வாயிலாக கண்டால் அது கண்டு பிடிப்பல்ல.

கள்ளு குடித்தால் வெறிக்கும் என்பது முன்னோர் கண்டு பிடிப்பு என்று சுலபமாக கூறி இருக்கலாம்.  

நான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

நான் ஜஸ்டினுக்கு எழுதிய கருத்தையே நீங்களும் வாசியுங்கள்.

அவர் வாசிப்பார் லாரா. 😁

இந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..

 

ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய விவாதக் களத்தில் பெரும்பாலும் இரு வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள் விவாதிக்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்தப் பிரச்சனையில் அவர்களின் சித்தாந்தம் எவ்விதத்திலும் உடைபட்டுவிடக் கூடாது என்று பாதுகாக்கிறார்கள். அவர்களின் சித்தாந்தங்களின் ஊதுகுழலாக (mouthpiece) செயல்படுகிறார்கள். மொத்தத்தில் இருவருமே குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய நகர்விற்கு செல்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

ஒரு சில கிறிஸ்தவர்கள் தான் கதையளந்தவர்கள். அவர்கள் என்ன நோக்கத்திற்காக கூறினார்களோ தெரியாது.

முன்னோர்களின் சில செயல்களின் (விரதம் இருத்தல், தோப்புக்கரணம் போடுதல் போன்ற) நன்மைகள் பிற்காலத்தில் விஞ்ஞான உலகில் ஏற்கப்பட்டன என்ற ரீதியில் தான் இங்கு கருத்து வைத்தோர் வைத்தனர். அதற்காக அவர்கள் தற்போதைய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை கூறி தான் முன்னோர் கூறினார்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை. அதை நீங்கள் வேறு விதத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என நிறைக்கிறேன்.

இஞ்சியும் மரவெள்ளி கதையும் அப்படியே. அத்துடன் அதை இந்துக்களுடன் சம்பந்தப்படுத்தி நான் எழுதவில்லை.

இந்தியா உட்பட்ட நாடுகள் எங்கே நிற்கின்றன என்ற உங்கள் கேள்விக்கு தான் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்திற்கு வெள்ளையர்களே வாடிக்கையாளர்கள் என கூறியிருந்தேன். மற்றும் படி வெள்ளையன் பாவித்தால் சிறந்தது என்ற அர்த்தத்தில் அல்ல. 😀

நோக்கமே தெரியாத போது ஏன் சொன்னார்கள் என்று எப்படி ஆராய முடியும்?  எனக்கு யாரும் சொல்லி நான் கேள்விப் படவில்லை, ஏனெனில் அப்படியொரு விளக்கம் கிறிஸ்தவத்திற்கு எதிரான விளக்கமேயொழிய கிறிஸ்தவம் வளர்க்கும் விளக்கம் அல்ல!

இருவரும் வேறாகத் தான் விளங்கிக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன்! ஆனால், அப்படியான விளக்கங்கள் பல போலியானவை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்: உதாரணமாக சுப்பர் மூளை யோகா தோப்புக்கரணம் என்பவை ஒரு சில இந்தியர்களால் தாங்கள் செய்ததாகக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமேயொழிய அதில் உண்மையான மருத்துவ பயன்கள் இருப்பதாக சுயாதீனமான ஆய்வுகள் இல்லை! இருந்தால் இங்கே இணையுங்கள் பேசலாம்! இந்த யூரியூப் வீடியோக்கள் ஆதாரம் என்று வராதீர்கள்.

பெண்கள் தனியாகப் போக முடியாத நிலையை வெள்ளையர்கள் ஆயுர்வேதம் என்ர போலி மருத்துவத்தை நாடிப் போவது எப்படி மாற்றும்? ஒரு பெண் ஜனாதிபதி வந்தே மாறாத தேசம் அது. எங்கிருந்து இந்த பெண் விரோதப் போக்கு இந்தியாவுக்கோ அல்லது மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகளுக்கோ வந்தது என நினைக்கிறீர்கள்? அதையே நான் குறிப்பிட்டேன்!

Link to comment
Share on other sites

26 minutes ago, ampanai said:

மனிதனை படைத்தது யார்? கடவுள் என்றால் அது மெஞ்ஞானம். வேறு எதையாவது புரியாத முறையில் சொன்னால் அது விஞ்ஞானம்.

கடவுளை படைத்தது/உருவாக்கியது யார்? மனிதன் இல்லை அவன் வழிபடும் மதம். அது மெஞ்ஞானம்.

அப்படி எங்களை படைத்தவனையே வேறு வேறு பெயர்களில் அழைத்து எங்களுக்குள் மனிதம் அடிபட்டும் வேளையில் இந்த திரி பல விழிப்புணர்வை எனக்கு தந்தன.

இருந்தாலும், இந்த திரியை நான் இத்துடன் ஊதிவிட எண்ணிவிட்டேன். இந்த திரியை பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை கட்டுப்படுத்த எல்லாம் வல்ல கந்தனை வேண்டி முடிக்கின்றேன்.   

மனிதனைப் படைத்தது யார்? கடவுள் என்று சுலபமாக வெட்டித்தனமாக  கூறி மக்களை நம்ப வைப்பது மெய்ஞானம் என்று தன்னை  தானே அழைக்கிறது.

எப்படி இந்த உலகம் தோன்றியது, எப்படி உயிரினங்கள் தோன்றியது  என்று தொடர்சியாக ஆய்வுகளை மேற்க்கொண்டு அதில் அளப்பரிய முன்னேற்றங்களை கண்டுள்ளதுடன்  வெற்றிப்பாதையில் முன்னேறி வருவது  அறிவியல். அளிவியலின் பிரமிக்கத்தக்க இந்த வளரச்சி முன்னால் மெய்ஞானம் என்று உலகை ஏமாற்றுவோரால் தாக்கு பிடிக்க முடியாது. 

Link to comment
Share on other sites

21 minutes ago, கிருபன் said:

அவர் வாசிப்பார் லாரா. 😁

இந்தத் திரியை ஏன் இத்தனை பேர் இழுக்கின்றார்கள் என்பதற்கும் விளக்கம் உள்ளது..

நான் ஜஸ்டினுக்கு என்ன சொல்ல வந்தேன் என்று அவர் புரிந்து கொண்டுள்ளார். இடையில் புகுந்து கொள்பவர்களுக்கு தான் பிரச்சினை. 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.