Jump to content

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-1-720x450.jpg

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை வீதியூடாக பிரவேசித்து செட்டித்தெரு வரையிலேயே வரமுடியும் எனவும் குறித்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியுடன் தூக்குக் காவடியுடன் வரும் உழவு இயந்திரங்கள் திருப்பி அனுப்பப்படும் எனவும் ஆலய நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் உற்சவ காலத்தின் தேர்த்திருவிழா, தீர்த்த திருவிழாவின்போது அடியவர்கள் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவது வழக்கமாக காணப்படுவதுடன், தூக்குக் காவடிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் நல்லூர் கோயிலின் முன்முகப்பு வரையிலும் அனுமதிக்கப்பட்டு வந்தன.

எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/நல்லூர்-ஆலய-வளாகத்துக்கு/

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, Paanch said:

தூக்குக்காவடி, செடில்  குத்தி காவடி  எடுப்பது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் கொண்டதல்ல பிரதட்டை. அது உடலுக்குப் பயிற்சி அளிப்பதோடு, பக்தியுடன் செய்வதால் மனதுக்கும் பயிற்சி அளிக்கிறது. 

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக்காவடி தடை பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சார்? உடற்பயிற்சி செய்வது தங்கப்பதக்கம் எடுக்கவா? 
நீங்கள் சொல்லும் மூடக்கொள்கைகைகளை வெள்ளைக்காரன் கொஞ்சம் மோடேர்ன் ஆக செய்கிறான் அவ்வளவுதான்.
நாங்கள் வெள்ளைக்காரன் எது சொன்னாலும் தலை ஆட்டுற ஆக்களாச்சே.

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

தூக்குகாவடியில் காட்டுமிராண்டித்தனமாக தொங்குவது  நிலத்தில் புரண்டு உருளுவது போன்றன காட்டுவாசிகள் காலத்தில் ஏதோ காரணத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம். இப்போதைய அறிவியல் வளர்சியடைந்த காலத்தில் சிந்தக்கும்  திறன் இன்றி இவற்றை செய்ய வேண்டிய தேவை உள்ளதா? சிந்தித்து பாருங்கள். 

ஒரு காலத்தில் பருவமெய முதலே பெண்பிள்ளைகளை திருமணம் செய்யது வைக்கும் பழக்கம், உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை போன்ற இந்து பாரம்பரியங்கள்  ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட போதும் உங்களை போன்றவர்கள் எமது முன்னோர்கள், எமது பாரம்பரியம் எற்று புராணம் பாடினார்கள். அவர்கள்  சொல்லை அன்று கேட்டிருந்தால்  நாங்கள் இன்னும் ஆயிரம் வருடம் பின்னோக்கி இருந்திருப்போம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இப்படியே எம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியான மூடப்பழக்கங்களை கட்டிக்காக்க போகிறீர்களோ தெரியாது. கடவுளை நம்புகின்றீர்களோ அல்லது  இப்படியான மூடக கொளைகைகளை நம்புகின்றீர்கோ என்ற வித்தியாசமே தெரியவில்லை. 

நீங்கள் கூறியபடி உடற்பயிற்சியை இது அளிக்கிறது என்றால் நம்மவர்கள்  பல தங்க, வெள்ளிப்பதக்கங்களை சர்வதேச விளையாட்டுத்துறைகளில் பெற்றிருக்க வேண்டும்.  

உடற்பயிற்சி செய்யிறம் என்ற பெயரில் வீதிகளிலும்,மைதானங்களிலும் ஓடுபவர்களும், ஜிம்முக்கு போகிறவர்களும் எத்தனை பதக்கங்களை எடுத்துக் கிழித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

 

என்னது நீங்கள் சொல்வது அறிவுபூர்வமான  விவாதமா? அப்படியொன்றும் அறிவுபூர்வமாக நீங்கள் விவாதத்தித்ததாக  நான் எந்த திரியிலும் கண்டதில்லை. எப்ப பார்த்தாலும் சமய சம்பந்தமான சடங்குகளையும் நடைமுறைகளையும் நக்கலடிப்பதை விட என்ன அறிவு பூர்வமாக சொன்னீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். இத்துடன் நின்றுவிடாது விடாது எதிர்காலத்தில்  தூக்குக்காவடி  மட்டுமல்ல செடில்  குத்தி காவடி  எடுப்பது, பிரதட்டை போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்  முற்றாக தடை செய்ய வேண்டும். 

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் நல்லூர் ஆலய வளாகத்திலும் சுற்றாடலிலும் யாரும் வேட்டியுடணோ சேலையுடணோ வரக்கூடாது ஜீன்ஸ் சேட் டெனிம் வட இந்ந்திய உடைகளை அணிந்தே வரவேண்டும் எனச் சொன்னாலும் சொல்வார்கள் நல்லூர் ஆலயத்தின் உரிமையாளருக்குப் பாரம்பரியம் என்றால் என்னவென்று புரியவில்லைப்போல் இருக்கு. 

உண்மையில் எனது குடும்பத்தினதும் எனதும் குலதெய்வம் நல்லூர் முருகந்தான் ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மனதுக்குச் சங்கடமாக இருக்கு. தவிர உலகின் எந்தப்பகுதியில் வாழ்ந்தாலும் திருவிழாக்காலத்தில் மச்சம் மாமிசம் பாவிக்காமல் நல்லூரானை அனுட்டிப்பவன் நான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் தலைநாட்டுகிறீர்கள்  என்ற என்ற ஒற்றை வார்ததைக்குள் எல்லா அறிவு பூர்வமான விவாதங்களையும் முடித்து வைக்கும் உங்களைப் போன்றவர்கள் எமது முன்னோர்கள்  என்ற ஒரே காரணத்திற்காக எல்லா  முட்டாள்தனங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்  உள்ளவர்கள். 

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

Link to comment
Share on other sites

"நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

நிர்வாகத்திற்கு முடிவுகளை எடுக்க உரிமை உண்டு, அதை மக்கள்/பக்தர்கள் ஏற்றும் நடக்க வேண்டும். அது அவர்களின் கடமை.

ஆனால், ஏன் தடை செய்தொம் என்பதை நிர்வாகம் அறிவிக்க வேண்டும், அதுவே அவர்கள் பக்தர்களுக்கு கொடுக்கும் மரியாதை. அதை அவர்கள் இன்னும் செய்யவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ இந்த லூசுகள் செய்யிற வேலையை!!!!!!!!! 🤣

 

 

Link to comment
Share on other sites

இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது,  தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம்.

எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன.

அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது.

அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே.

என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே

Link to comment
Share on other sites

45 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் மத சம்பந்தமாக எழுதிய கருத்துக்களை மீண்டுமொருமுறை அசைபோட்டு பாருங்கள். அங்கே எத்தனை தடவைகள் மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எவ்வித விளக்கங்களும் அளிக்காமல் மோட்டுக்கூட்டம்,அறிவில்லாதவர்கள்,பிற்போக்குவாதிகள் என ஒற்றை வார்த்தைக்குள் அடக்கியிருப்பீர்கள்.
அதிலும் இந்தத்திரி வேறு விடயம் சம்பந்தப்பட்டது.அங்கேயும் உங்கள் காழ்ப்புணர்வை வாந்தியெடுத்திருக்கின்றீர்கள்.
நீங்கள் யெகோவா இனத்தை சேர்ந்தவர் என்பது எனது அனுமானம்.😄

ஒருவர் கூறும் கருத்துக்கு எதிர்கருத்து எழுதவேண்டுமென்றால் அவருக்கு ஒரு முத்திரை குத்தி அவமதிப்பது உங்கள் வாடிக்கை. உங்களுக்காக நான் ஜெகோவா, அல்லலூயா லூசுக்கூட்டங்கள் செய்யும் வேலைகளை அறிய அங்கு செல்ல முடியாது. நான் பிறந்த மத முட்டாள்தனங்களை தான் கேள்வி கேட்க முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தூக்குகாவடி, செடில் காவடி, அங்கப்பிரதட்சணம்  என்பன அவரவர் தாம் விருப்பப்பட்டு நேர்த்திக்காகவோ அல்லது வேறு அவர்களது சொந்தக்காரணங்களாலோ செய்வது. அதில் என் உங்கள் மூக்கை நுழைக்கிறீர்கள். அவர்கள் ஒன்றும் உங்களை வந்து துடைத்துவிட சொல்லவில்லையே.

மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களையும் பாயில படுத்தபடிதான் பலரும் செய்யினம். என்ன அது கொஞ்சம் சொகுசான பாய்!!

எ.த, உங்கள் சுகப் படுத்த முடியாத மூலக்கொதி இங்கே எல்லாருக்கும் தெரிந்தது தான்! ஆனால் அந்த மூலக்கொதி தமிழ் வாசிப்பு கிரகிப்பிலும் கூட உங்களை அரைகுறைத் தமிழனாக மாற்றி விட்டது. கீழே மீளவும் நான் எழுதியதை கோடிகாட்டியிருக்கிறேன்!

2 hours ago, Justin said:

உடற்பயிற்சி பற்றி மட்டுமே இந்தப் பதில், இந்த சமய சம்பிரதாயங்கள் பழக்கங்கள் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை:

வாரத்தில் சில நாட்கள் கிரமமாகச் செய்தால் மட்டுமே உரிய பயனைத் தருவது உடற்பயிற்சி. வருடத்தில் ஒரு நாள் விரதம் இருந்து உருண்டால் தொங்கினால் அது உடற்பயிற்சியல்ல! அதனால் உடற்பயிற்சியின் பயனும் இல்லை! மருத்துவ விஞ்ஞானிகள் தங்கள் உயர்வான உழைப்பில் கண்டறியும் மருத்துவ ஆதாரங்களை சும்மா பாயில் படுத்திக் கிடந்து கொண்டு எங்கள் சமய நம்பிக்கைகளுக்கு முண்டு கொடுக்கப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது! "நம்புகிறேன் செய்கிறேன்" என்று சொல்லி விட்டுப் போவது வேறு! மற்றவனின் உழைப்பில் வருவதை எடுத்து சப்பை கட்டு கட்டுவது வேறு, அது கயமைத் தனமும் கூட! 

மற்ற படி உங்களுக்கு விஞ்ஞானிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்று விளக்கும் நோக்கம் எனக்கில்லை!

Link to comment
Share on other sites

"எனினும் கடந்த 3 ஆண்டுகளாக தூக்குக் காவடிகள் தெற்கு வாசல் கோபுரம் வரையே அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தெற்கு வாசல் கோபுரத்தடியில் வைத்து தூக்குகாவடிகள் இறக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆலயச் சுற்றாடலுக்குள் தூக்குக்காவடிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக செட்டித்தெரு வாயில் வரையிலேயே தூக்குக் காவடிகள் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது."

ஒருவேளை சம்பந்தர் ஐயாவும் மாவை சேனாதிராசாவும் தமது பாவங்களை கழுவ தூக்கு காவடி எடுக்க முயல்வதாக நிர்வாகத்திற்கு செய்தி கிடைத்திருக்கலாம் 😂

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

 

ஒருவரின் வழிபாட்டுமுறை உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கித்தான்  நிற்கலாம்,அதைவிட்டு  அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை  காட்டுமிராண்டிதனம் என்று கூறும் அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

Link to comment
Share on other sites

கண்டியில் தற்பொழுது நடக்கும் எசல பெரகராவில் யானைகளை வதைக்கிறார்கள் என்ற கருத்தை நீண்ட காலமாக செவிமடுக்கும் அஸ்கிரிய மற்றும் மால்வைத்தை பீடங்கள் கூட நல்லூர் நிர்வாகத்தை முன்மாதிரியாக முன்மாதிரியாக கொண்டு தடை விதிப்பார்கள் என்று எல்லாளன் நம்பலாம். ஆனால் கைமுனு நம்ப மாட்டான். அதனால் தான் அவன் மக்களுக்கு நாடு, எல்லாளன் மக்களுக்கு வேண்டுமானால் ஒரு சின்ன நினைவுச்சின்னம் (அதுவும் காலப்போக்கில் அழிக்கப்படும்). 

 

எசல பெரஹரா வௌி வீதி ஊர்வலம் இன்று ஆரம்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Me too இயக்கம் வந்த பின்னர் எல்லாப் பாரம்பரியப் பழக்கவழக்கங்களையும் பிற்போக்கு என்று முத்திரை குத்துகின்றார்கள்!

அலகு குத்தி தூக்குக்காவடி எடுப்பது அதைவிட கடுமையான சூழலில் இருந்து காத்த கடவுளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் ஒரு காணிக்கையாகவும் இருக்கலாம்தானே.

Link to comment
Share on other sites

காட்டு மிராண்டித்தனம் என்பதன் வரைவிலக்கணம் தெரியாது. ஏதோ காடும் மிரட்டும் வன்முறையையும் கொண்டாதான ஒரு கூட்டுச்சொல் மாதிரி தெரிகின்றது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்தமைக்கு முதன்மை காரணம் : சிங்கள காண்டுமிராண்டித்தனம்? அதற்காக சிங்கள இனமோ இல்லை சர்வதேசமோ வருத்தப்படுவதில்லை. தப்ப வலிமை கொண்டிருந்த உறவுகளில், பெரும்பான்மையாக ஈழ தமிழர்கள் ஏதிலிகளாக புலம்பெயர்ந்து வாழுவதும் காட்டுமிராண்டித்தனம் கொண்ட நாடுகளில் தான், நானும் தான்.

தமிழர்கள் தம் இதிகாசங்கள், புராணங்கள், கலாச்சாரங்களில் இருந்த இந்த காலத்திற்கு ஒவ்வாத காண்டுமிராண்டித்தனங்களை விட்டு ஒரு பண்பாட்டில் உயர்ந்த சமூகமாக வந்து கொண்டிருக்கின்றது. எனக்கும் நூறு வீதம் நாம் அப்படிப்பட்ட ஒரு சமூகமாக, இனமாக மாறுவதில் மகிழ்ச்சியே.

ஆனால், ஒரு பல்லின மதங்கள், சமூகம் கொண்ட நாட்டில் ஒரு சிறுபான்மை மத, இனத்தவர்கள் மட்டும் செய்வது தற்கொலைக்கு சமனானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, tulpen said:

தெருவில் ஒருவன் பைத்தியக்கரமான வேலைகளை செய்தால் அவனை பைத்தியக்காரன் என்று சொல்வது மனித வழமை. அதற்கு யாரும்  அதிகாரம் அளிக்க வேண்டியதில்லை. 

ஒருவனை பைத்தியக்காரன் என்பதற்கும், ஒருவன் பலகோடிபேரை  பைத்தியக்காரர்கள் என்பதற்கும் நிறைய வித்தியாசமுண்டு.

அடுத்தவரை தொந்தரவு செய்யாமலும் சட்டத்தை மீறாமலும் அவரவர் வழிபாட்டு கடமைகளை அவர்கள் விரும்பிய வகையில் ஈடேற்றுவது அவரவர் பிரச்சனை.

அதனால்தான்  அடுத்தவர் மூக்கு நுனியில் உங்கள் விரல் பட்டால்கூட குற்றம் என்று சட்டம் வைத்துள்ள மேற்குலகங்களில்கூட நீங்கள் சொன்ன காட்டுமிராண்டிதன வழிபாடுகளில் அந்நாட்டு அரசுகள் கை வைப்பதேயில்லை.

சாவின் விளிம்பிலிருந்து தப்பிய  தன் குழந்தைக்காக அலகுகுத்தி காவடி எடுப்பவர்களும் உண்டு , அது அவரவர்களின்  நம்பிக்கை நேர்த்திக்கடன், 

அவர்களின் முன்னால் போய் நின்று நீங்கள் செய்தது காட்டுமிராண்டிதனம் பைத்தியக்காரமான செயல்  செயல் என்று  சொல்லும் துணிவு உங்களுக்கிருக்கா?

நான் வேண்டுமென்றால் எனக்கு பிடிக்காத பைத்தியக்காரதனம்,காட்டுமிராண்டி தனங்களிலிருந்து என்னையும் எனது நெருங்கிய உறவுகளையும் ஒதுங்கியிருக்க சொல்லலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.