Jump to content

வெள்ளை வான் கலாசாரத்தை நாமே ஒழித்தோம்: பிரதமர்


Recommended Posts

இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி கட்டியெழுப்பப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

ஜனநாயக்கத்தை வலுப்படுத்தி முன்னோக்கி செல்வதுடன், புதிய கருத்துகளுடன் கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் இன்று கூட்டணி அரசியல் தோற்றம் பெற்றுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக மூன்று கூட்டணிகள் உருவாக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவளை, இன்று நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்பி வெள்ளை வான் கலாசாரத்தை இல்லாது செய்துள்ளதாக தெரிவித்த பிரதமர், அதன் காரணமாகவே இன்று அரசாங்கத்தின் மீது தொலைக்காட்சி விவாதங்களில் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடிவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வெள்ளை-வான்-கலாசாரத்தை-நாமே-ஒழித்தோம்-பிரதமர்/150-236483

Link to comment
Share on other sites

இலங்கை வெள்ளை வான் கலாச்சாரம், அதன் 'பெருமை' க்கு மெருகு சேர்க்கும் அதி உன்னத கலாச்சாரங்களில் ஒன்று, இதை ஏன் இந்த நாட்டின் கலாச்சார அமைச்சர் கொண்டாடுவதில்லை என்பது ஒரு கவலைக்குரிய விடயம் 🙄

 

வெள்ளை வான் படுகொலைகள்

வெள்ளை வான் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் என்பது இலங்கையில் வெள்ளை வான் வாகனம் ஒன்றில் வந்து நபர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தல் அல்லது காணாமல் போகச் செய்தல் ஆகும். ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் எனப் பல தரப்பட்டோர் இவ்வாறு படுகொலை செய்யப்படுகிறார்கள், அல்லது காணாமல் போகிறார்கள். இவ்வாறு கொல்லப்படுபவர்கள், அல்லது காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவார். இதுவரை இலங்கைக் காவல்துறை யாரையும் இக் குற்றங்களுக்காக கைது செய்யவில்லை.

வெள்ளைவான் குழு இலங்கை இராணுவத்தின் இரகசியப் பிரிவாகும்.

இது பெரும்பாலும் தமிழர்களைப் பொதுவாக வர்த்தகர்களையும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களையும் கடத்தி கப்பம் வாங்குவதற்கும் படுகொலைகளைப் புரிதல் போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பிரிவாகும். இவ்வகை வாகனங்களிற்கு இலக்கத் தகடுகள் ஏதும் கிடையாது. இப்பிரிவில் இருந்து தப்புவதற்கு பெரும்பாலும் வீதி வளைவுகளில் அவதானமாக இருத்தல் வேண்டும். 

யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் இவர்களின் செயற்பாடு கூடுதலாக உள்ளது. திருகோணமலையில் இவர்களின் செயற்பாடு அவதானிக்கப்பட்டபோதும் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளைப் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து கிடைத்ததால் பின்னர் திருகோணமலையில் செயற்பாடுகளை இடைநிறுத்தி விட்டனர். கொழும்பிலும் இவர்களது செயற்பாடு காணக் கிடைக்கின்றது. கொழும்பில் பொதுவாக இரவு நேரத்தில் தமிழர்களின் வீடுகளிற்குச் சென்று கடத்தி வருகின்றனர். கொழும்புத் தமிழர்கள் இரவு நேரத்தில் அநாவசியமாகக் கதவுகளை அறிமுகம் இல்லாத ஆண்களிடம் திறக்கக் கூடாது எனும் பயம் நிலவுகிறது.

இந்த வெள்ளைவான் குழு பல்வேறு காரணங்களுக்காக சில சிங்களவர்களையும் கடத்திச் சென்றுள்ளது. இக்குழுவால் கடத்திச் செல்பவர்கள் பெரும்பாலும் திரும்பிவருவதில்லை. இக்குழுவின் செயல்கள் பற்றி இலங்கை இராணுவம் கூறுகையில் இது ரணில் விக்கிரமசிங்கேயின் தூண்டுதலின் பேரில் நடக்கிறது என்பது போன்ற பரப்புரைகளை மேற்கொண்டுவருகிறது. இலங்கையில் பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுக்கு வெள்ளைவான் குழுவினால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியுள்ளனர். இக்குழுக்களின் செயல்கள் பற்றி பல்வேறு சர்வதேச ஊடங்களில் செய்திகள் வந்திருக்கின்றன. 

நன்றி: விக்கி 
https://ta.wikipedia.org/wiki/இலங்கையில்_ஆட்கடத்தல்களும்_காணாமல்_போதல்களும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ampanai said:

வெள்ளை வான் படுகொலைகள்

பெயர் மாறியிருக்கிறதே தவிர கலாச்சாரம் மாறியதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

வெள்ளைவான் கலாச்சார கொள்ளையர்களையும் கொலைகாரர்களையும் அதன் தலைவன் பயங்கரவாதி கோட்டாபயவையும் நீங்கள் தான் பாதுகாத்து வருகிறீர்கள் என்பதுவும் எங்களுக்குத் தெரியும்!

அந்தப் பயங்கரவாதி கோட்டாபயவுடன் ஒப்பந்தம் செய்து தனக்குப்பின் ஐக்கிய தேசிய கட்சிப் பயங்கரவாதத்தைதையும் பயங்கரவாதி கோட்டாபயவிடம் கையளிக்க ரணில் சதி செய்துவருவதாக தெரிகிறது.

அதனாலேயே தன்னால் வெல்லமுடியாது என்று தெரிந்தும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று ரணில் களத்தில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

 

கலாபோகஸ்வெவ : வவுனியா வடக்கில் நடக்கும் சிங்கள குடியேற்றத்தை ஆதரப்படுத்தும் வரைபடம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படிதான் கதைப்பீர்கள்..!

"2020 Toyota Hiace Super Grandia"

ஆனால் ரோல்ப்பின் மாடலில் புது ரிசைன் வரத்தான் போகுது..! 😢

Link to comment
Share on other sites

On 8/9/2019 at 9:33 AM, ampanai said:

வெள்ளை வான் கலாசாரத்தை நாமே ஒழித்தோம்: பிரதமர்

அதை எங்கை ஒழிச்சு வைச்சிருக்கீங்க?

எப்ப மீண்டும் அவிட்டு விடுவீங்க?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.